என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம் நிறுத்தம்"

    • ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குட்பட்ட ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீரங்கம் முழுவதும், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன்ரோடு, கிழக்கு உத்திரவீதி, மேற்கு உத்திரவீதி,

    வடக்கு உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, வடக்கு சித்திரைவீதி, கிழக்கு சித்திரைவீதி, தெற்கு சித்திரைவீதி, மேற்கு சித்திரைவீதி, அடையவளஞ்சான் தெருக்கள், திருவானைக்காவல் பகுதி சன்னதிவீதி, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்ரோடு, அம்பேத்கார்நகர், பஞ்சக்கரை ரோடு, அருள்முருகன் கார்டன், ராகவேந்திராகார்டன், காந்திரோடு,

    டிரங்க்ரோடு, சென்னை பைபாஸ்ரோடு, கல்லணைரோடு, கீழகொண்டையம்பேட்டை ஜம்புகேஸ்வரர்நகர், தாகூர்தெரு, திருவென்னைநல்லூர், பொன்னுரங்கபுரம், திருவளர்ச்சோலை, பனையபுரம், உத்தமர்சீலி, கிளிக்கூடு, செக் போஸ்ட் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

    • அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திருச்சி:

    திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலக்கல் கண்டார்கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, கொட்டப்பட்டு, அரியமங்கலம் தொழிற்பேட்டை, சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

    • செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணைமின்நிலையத்தில் நாளை (5-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

    இதனால் அந்த மின்வழித்தடத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதியில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-

    மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிப்புதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனூரின் ஒரு பகுதி, ஓரைக்கால்பாளையம். மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    • வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    சுல்தான்பேட்டை:

    சுல்தான்பேட்டை அருகே உள்ள வடவள்ளி துணை மின்நிலையத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலப்பநாயக்கன் பாளையம், மேட்டு லட்சுமி நாயக்கன் பாளையம், குளத்துப்பாளையம், வடவள்ளி, பூராண்டாம் பாளையம், அக்கநாயக்கன் பாளையம், சந்திராபுரம், பூசாரி பாளையம் மற்றும் வாரப்பட்டி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் என்.ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.

    • திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பொன்னகரம், நல்லாம்பட்டி, ரெட்டியபட்டி, வாழக்காபட்டி, சிறுமலை அடிவாரம், நரசிங்கபுரம், தோமையார்புரம், மேட்டுப்பட்டி, தொழிற்பேட்டை, என்.ஜி.ஓ. காலனி, பாலகிருஷ்ணாபுரம், தோட்டனூத்து, ஆர்.எம்.டி.சி. காலனி, அடியனூத்து, நல்லமநாயக்கன்பட்டி, உத்தனம்பட்டி, நாகல்புதூர், பாரதிபுரம், ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    காந்திகிராமம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காந்திகிராம பல்கலைக்கழகம், செட்டியபட்டி, கல்லுப்பட்டி, பூத்தாம்பட்டி, சாமியார்பட்டி, தொப்பம்பட்டி, ஜாதிக்கவுண்டன்பட்டி, அமலிநகர், முருகன்பட்டி, இந்திராபுரம், பெருமாள் கோவில்பட்டி வேளாங்கன்னிபுரம், சின்னாளப்பட்டி, கிழக்கோட்டை, பூஞ்சோலை, மேட்டுப்பட்டி, அம்பாத்துரை, கலைமகள் காலனி, திருநகர், சிறுமலை பழையூர், அகஸ்தியார்புரம், தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
    • மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் மின்சார விநியோகம் முறையாக இல்லாமல் ½ மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    தேனி துணை மின் நிலையத்தில் போடி விநியோகப் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் போடி சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    மேலும் போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான போடி மெட்டு, கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், பிச்சாங்கரை போன்ற பகுதிகளிலும் சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

    நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக சாலையில் படுக்கை விரித்து படுத்து உறங்கினர்.

    மேலும் வீட்டு வாசலில் பொது மக்கள் கொசுக்கடி காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

    தேனி பகுதியில் மில் வேலைக்கு சென்று இரவு பணி முடித்து திரும்பி வரும் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக அவர்களுடைய தாய்மார்கள் இருளில் காத்திருந்தனர்.

    போடி அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் நடைபெற்றது. ஆனால் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்து நின்று விட்டது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

    மேலும் ஏற்பட்ட மின்தடை காரணமாக வேலைக்கு செல்பவர்கள் குழந்தைகள் தூக்கம் பாதிக்கப்பட்டதால் காலையில் வேலைக்கு செல்வதிலும் பள்ளிக்கு செல்வதிலும் மிகுந்த சிரமம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    இரவு 11 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2½ மணியளவில் சரி செய்யப்பட்டது.

    கடந்த சில வாரங்களாகவே இதுபோன்று மின்தடை ஏற்பட்டுவரும் நிலையில் உரிய பராமரிப்பு மேற்கொண்டு மின்விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    திருச்சி:

    துவாக்குடி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையொட்டி துவாக்குடி பகுதியில் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் சி-செக்டார் மற்றும் ஏ,பி,இ,ஆர், & பி.ஹச் செக்டார், தேசிய தொழிற்நுட்பக் கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி,

    பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி ஆகிய இடங்களில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மன்னார்புரம் செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.

    • கே.என். புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    மொரப்பூர்:

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட பொம்மிடி, வே.முத்தம்பட்டி, கே.என். புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, பி.பள்ளிப்பட்டி, வாசிகவுண்டனூர், பொ.துரிஞ்சிப்பட்டி, நடூர், ஒட்டுப்பட்டி, பில்பருத்தி, கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், நொச்சிக்குட்டை, அய்யம்பட்டி, ரேகட அள்ளி, திப்பிரெட்டிஅள்ளி, பண்டார செட்டிபட்டி, வத்தல்மலை, சொரக்காப்பட்டி, வே.முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி,

    கே.என்.புதூர், கே.மோரூர், கண்ணப்பாடி ஆகிய கிராமங்களுக்கும், அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று கடத்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சி.டி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நத்தம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    நத்தம்:

    நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (23-ந் தேதி) திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன் தெரிவித்துள்ளார்.

    • திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற் பொறியாளர் பாலகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின்பாதைகளில் நாளை (சனிக்கிழமை)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டாம்பட்டி, ராராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேப்போல் தஞ்சை மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே கரந்தை, பள்ளியக்ரஹாரம், பள்ளியேறி, திட்டை, பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், தஞ்சை அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம்பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    • செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திணடுக்கல்:

    செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் நாளை (20ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் ராஜக்காபட்டி புகையிலைப்பட்டி, சிலுவத்தூர், வி.டி.பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

    • வாலாந்தூர் துணை மின் நிலையத்தில் நாளைபராமரிப்பு பணிகள் நடைபெறு உள்ளது.
    • சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அய்யனார்குளம், குறவகுடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம் பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும். இந்த தகவலை உசிலம்பட்டி மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    ×