என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாழவந்தான் கோட்டை பகுதியில் 25-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
- காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
- வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை,
திருச்சி:
துவாக்குடி உபகோட்டம் வாழவந்தான் கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை ஜெய்நகர், திருவேங்கட நகர், கணேசபுரம், கணபதி நகர், கீழ குமரேசபுரம், மேலகுமரேசபுரம், கூத்தைப்பார், கிருஷ்ண சமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூர், தமிழ்நகர், பெல் டவுண் சிப்பில் சி மற்றும் டி செக்டாரின் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர்,
வ.உ.சி. நகர், எழில் நகர், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, தொண்டைமான் பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மா நகர், மாங்காவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி மாநகர் கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






