search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rasi"

    • ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.
    • அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை.

    பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கியமாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்தில் இருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும்.

    15 திதிகளில் அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை. மற்ற 14 திதிகளில் பிறந்த வர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது.

    இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.

    இந்த திதிகளில் சதுர்த்தசியில் ஒருவர் பிறந்து இருந்து புதனும் - குருவும் ஜாதகத் தில் உச்ச நிலையில் இருந்தாலும் பலன்கள் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களை யும் செய்வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    திதி சூன்யம் பெற்ற மேற்படி கிரகங்கள் ஆட்சி- உச்சம் பெற்றாலும் கேந்திர- திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல்லது பலனே இல்லாமல் செய்கிறது.

    மேற்படி திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் வக்ர கதியில் இருக்கும் போதும், சிம்மம்- விருச்சிகம்- கும்ப-மேஷ ராசியில் இருக்கும் போதும் சூன்ய தோஷ நிவர்த்தி பெறுகிறது. 1, 5, 9 ஆகிய கிரகங்களின் சாரம் பெறும் போதும், திருவாதிரை- சுவாதி- சதயம் என்னும் ராகுவின் நட்சத்திரக் காலில் இருக்கும்போதும் சூன்யதோஷ நிவர்த்தியைப் பெறுகிறது.

    இப்படிப்பட்ட நிலையில் சூன்ய தோஷத்தை மட்டும் பார்க்காமல் தோஷ நிவர்த்தியையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொன்னால்,

    "போற்றுகின்ற ஜோதிட நூல்

    பொய்யாது ஒருநாளும்''

    என்கிற ஜோதிட பாடலின்படி ரண பலமும், நலமும் பெற முடியும் என்பதே ஆய்வு.

    சூன்ய திதி, சூன்ய ராசி, சூன்ய கிரகம்

    1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    2. துதியை திதி தனுசு-மீனம் குரு

    3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனி-சூரியன்

    4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்

    5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதன்

    6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்-சூரியன்

    7. சப்தமி திதி தனுசு-கடகம் குரு-சந்திரன்

    8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதன்

    9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்

    11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குரு

    12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி

    13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்

    14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி புதன்-குரு தனுசு-மீனம்

    • ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன.
    • நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள்

    ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றை தலா மூன்று நட்சத்திரமாகக் கொண்டு ஒன்பதாக பிரிப்பர். அதன்படி நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட வழிபாட்டு முறைகள் இங்கே தரப்பட்டுள்ளன. உங்களின் நட்சத்திரம் எதில் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். வாழ்வில் வளம் பெறுங்கள்.

    அஸ்வினி, மகம், மூலம்

    நட்சத்திர அதிபதி கேது ஆவார். கேது திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் விநாயகர். எப்போதும் விநாயகரை வழிபட்ட பின் பணிகளை தொடங்குங்கள். சதுர்த்தி நாளில் விநாயகர் கோயிலுக்கு செல்ல மறக்காதீர்கள்.

    அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்போடு பல நிறமும் கலந்த ஆடைகள் அணிவது யோகம் தரும். அதிர்ஷ்ட எண் 5,7,9. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். நவரத்தினத்தில் வைடூரியத்தை அணிந்து கொள்வது நன்மை தரும். மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

    பரணி, பூரம், பூராடம்

    சுக்ரனே உங்களின் நட்சத்திர அதிபதி. சுக்ர திசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி. காலையில் கண் விழிக்கும் போதே மகாலட்சுமி படத்தை பார்த்து வணங்குங்கள். வெள்ளிக்கிழமையில் லட்சுமி சந்நிதியில் நெய்தீபமிடுங்கள். அதிர்ஷ்ட நிறம் வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவது யோகம் தரும்.

    அதிர்ஷ்டம் தரும் எண்கள் 3,6,8. இந்த தேதிகளில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் எளிதில் முடியும். அதிர்ஷ்ட கல் வைரம். எல்லோராலும் வாங்கமுடியாது. வைரத்திற்குப் பதிலாக, ஸ்படிக மாலை வாங்கி அணிவதும் நல்லது. மிதுனம், தனுசு, மகரம், கும்பம் ராசியினரோடு நல்ல நட்பு மலரும்.

    கிருத்திகை, உத்திரம், உத்திராடம்

    சூரியனே உங்கள் நட்சத்திர நாதனாக விளங்குகிறார். நீங்கள் சூரிய திசையில் பிறந்தவர். சிவபெருமானைத் தொடர்ந்து வழிபடுவதால் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும். பிரதோஷ நாளில் சிவாலய தரிசனம் செய்வது சிறப்பு.

    அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பு நிற ஆடை அணிவது யோகம் தரும். 1,5,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்டத்தை உங்களுக்கு வரவழைக்கும். இந்த தேதிகளில் ஆரம்பிக்கும் செயல்களில் கிடைக்கும். அதிர்ஷ்ட கல் மாணிக்கம். கடகம், விருச்சிகம், தனுசு, மீனராசியினர் நண்பர்களாக அமைந்தால் நட்பு நீண்ட காலம் தொடரும்.

    ரோகிணி, அஸ்தம், திருவோணம்

    உங்களின் நட்சத்திர நாதனாக சந்திரன் இருக்கிறார். சந்திரதிசையில் பிறந்த நீங்கள், அம்பிகையை வழிபடுவதால் நன்மை பெறுவீர்கள். பவுர்ணமியில் அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்வெள்ளை. வெண்ணிற ஆடைகளை அணிவதன் மூலம் வெற்றி வந்து சேரும்.

    அதிர்ஷ்டம் தரும் எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் தொடங்கும் செயல் எதுவானாலும் வெற்றி உங்களுக்கே. முத்து பதித்த ஆபரணங்கள் அணிய நன்மை உண்டாகும். மிதுனம், சிம்மம், கன்னி ராசியின ரோடு பழகினால் நட்பு வாழ்வில் வளம் சேர்க்கும்.

    மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    நவகிரகங்களில் செவ்வாய்க்குரிய நட்சத்திரம் உங்களுடையது. செவ்வாய்திசையில் பிறந்த உங்களுக்கு, அதிர்ஷ்டதெய்வம் முருகன். செவ்வாய் அன்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வது சிறப்பு. அதிர்ஷ்டநிறம் இளஞ்சிவப்பு. சிவப்புநிற ஆடை அணிவதால் நலம் பெருகும்.

    அதிர்ஷ்ட எண்கள் 3,6,9. இந்த தேதிகளில் தொட்ட செயல்கள் யாவும் இனிதே முடியும். அதிர்ஷ்ட கல் பவளம். பவளத்தை மோதிரமாகவோ, டாலராகவோ அணிந்துகொள்ளலாம். சிம்மம், தனுசு, மீனராசியினர் நண்பராக அமைய அனுகூல பலன்கள் உண்டாகும்.

    திருவாதிரை, சுவாதி, சதயம்

    ராகுவிற்குரிய இந்த மூன்று நட்சத்திரங்கள் இவை. ராகு திசையில் பிறந்த நீங்கள் வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் துர்க்கை. ராகு வேளையில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைதரும். அதிர்ஷ்டநிறம் கருமை. ஆடையில் கருப்பு புள்ளிகள், கோடு இருந்தாலும் போதுமானது.

    அதிர்ஷ்ட எண்கள் 1,4,7. இந்த தேதிகளில் தொடங்கும் விஷயம் எளிதில் நிறைவேறும். அதிர்ஷ்ட கல் கோமேதகம். கோமேதகத்தை மோதிரத்தில் பதித்தும், டாலராக அணிந்து கொள்ளலாம். மிதுனம், கன்னி, தனுசு, மகரம், மீனராசியினர் நல்ல நண்பர்களாக அமைவர்.

    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

    நவகிரகங்களில் பூரணசுபரான குரு உங்களுக்கு நட்சத்திர அதிபதியாவார். குருதிசையில் பிறந்த உங்களின் அதிர்ஷ்ட தெய்வம் தட்சிணாமூர்த்தி. வியாழன் அன்று இவருக்கு நெய்தீபம் ஏற்றி, கொண்டகடலை மாலை சாத்தி, வழிபட்டு வந்தால் சுப பலன் உண்டாகும். அதிர்ஷ்டநிறம் மஞ்சள். இந்நிறத்தில் கைக்குட்டையாக வைத்துக்கொள்ளுங்கள்.

    அதிர்ஷ்ட எண்கள் 2,3,9. இந்த தேதிகளில் புதிய பணிகளைத் தொடங்குவது நன்மை தரும். அதிர்ஷ்ட கல் புஷ்பராகம். மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிக ராசியினரின் நட்பு கொள்வதால் நற்பலன் உண்டாகும்.

    பூசம், அனுஷம், உத்திரட்டாதி

    உங்களின் நட்சத்திர அதிபதியாக இருப்பவர் சனி. முதல் திசையாக சனியில் பிறந்த நீங்கள், வழிபடவேண்டிய அதிர்ஷ்டதெய்வம் சாஸ்தா. காலையில் எழுந்ததும் இவரை தரிசிப்பது சிறப்பு. குலதெய்வ வழிபாடும் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இயன்ற போதெல்லாம் சாஸ்தா கோயிலுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம் கருநீலம்.

    அதிர்ஷ்டஎண்கள் 5,6,8. இத்தேதிகளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும். அதிர்ஷ்ட கல் நீலம். ரிஷபம், மிதுன ராசியினரிடம் நட்பு கொண்டால் நன்மை ஏற்படும்.

    ஆயில்யம், கேட்டை, ரேவதி

    கிரகங்களில் புதன் உங்களின் நட்சத்திர அதிபதி. புதன்திசையில் பிறந்த உங்களுக்கு அதிர்ஷ்டம் அருள்பவர் மகாவிஷ்ணு. சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது யோகம் தரும். ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் சிறப்பு. அதிர்ஷ்டநிறம் பச்சை.

    அதிர்ஷ்டஎண்கள் 1,5,8. இத்தேதிகளில் செய்யும் செயல்கள் அனைத்தும் நற்பலன் தரும். அதிர்ஷ்டக்கல் மரகதம் என்னும் பச்சைக்கல். ரிஷபம், சிம்மம், துலாம் ராசியினரிடம் உண்டாகும் நட்பு உண்மையானதாகவும், ஆழமானதாகவும் இருக்கும்.

    சிறப்பான தன யோகத்தை அளிக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வசுமதி யோகம் இருப்பதாக பலதீபிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது.
    ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது.

    சிறப்பான தன யோகத்தை அளிக்கும் யோகங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாக வசுமதி யோகம் இருப்பதாக பலதீபிகை என்ற ஜோதிட நூல் குறிப்பிடுகிறது. வசுமதி என்றால் செல்வச்செழிப்பு என்பது பொருளாகும். ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது ராசிக்கு, சுப கிரகங்களாக சொல்லப்படும் புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உபஜெயஸ்தானம் என்ற வீடுகளான 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பது வசுமதி யோகம் ஆகும்.

    இந்த யோகத்தை அடைந்தவர்கள் சுய முயற்சியின் மூலம் வீடு, நிலம், வாகனம் ஆகிய நலன்களுடன் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள். மேற்குறிப்பிட்ட உபஜெய ஸ்தானங்களில் இரண்டு சுபக்கிரகங்கள் இருந்தால் நடுத்தரமான பொருளாதார நிலையையும், ஒரு சுபக்கிரகம் இருந்தால் சாதாரண பொருளாதார நிலையும் இருக்கும் என்பது ஜோதிட விதி. சுபக்கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று இருந்தால் யோகம் வலிமையாக இருக்கும்.

    ஆனால், அவை நீச்சம், பகை பெற்று இருந்தால் யோகம் பெரிய அளவில் இருப்பதில்லை. வசுமதி யோகம் அமைந்தவர் வாழ்க்கையில் தனம் சேர்வது உறுதி என்பது ஜோதிட வல்லுனர் வராகமிகிரர் கருத்தாகும். அதே சமயம், அந்த சுபக்கிரகங்கள் கண்டிப்பாக பாவ கிரகங்களின் தொடர்பு பெறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த யோகத்தின்படி ஒருவரது ஜென்ம லக்னம் அல்லது ராசிக்கு, குரு பகவான் 3,6,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்து, சுக்கிரன் அல்லது புதன் சேர்க்கை பெற்றிருப்பது விசேஷம் ஆகும்.
    27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். இன்று 27 நட்சத்திரங்களுக்கான தமிழ் அர்த்தங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அஸ்வினி - குதிரைத்தலை

    பரணி - தாங்கிப்பிடிப்பது

    கிருத்திகை - வெட்டுவது

    ரோகிணி - சிவப்பானது

    மிருகசீரிஷம் - மான் தலை

    திருவாதிரை - ஈரமானது

    புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி

    பூசம் - வளம் பெருக்குவது

    ஆயில்யம் - தழுவிக்கொள்வது

    மகம் - மகத்தானது

    பூரம் - பாராட்டத்தகுந்தது

    உத்திரம் - சிறப்பானது

    ஹஸ்தம் - கை

    சித்திரை - ஒளி வீசுவது

    சுவாதி - சுதந்திரமானது

    விசாகம் - பிளவுபட்டது

    அனுசம் - வெற்றி

    கேட்டை - மூத்தது

    மூலம் - வேர்

    பூராடம் - முந்தைய வெற்றி

    உத்திராடம் - பிந்தைய வெற்றி

    திருவோணம் - படிப்பறிவு உடையது

    அவிட்டம் - பணக்காரன்

    சதயம் - நூறு மருத்துவர்கள்

    பூரட்டாதி - முன் மங்கள பாதம்

    உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்

    ரேவதி - செல்வம் மிகுந்தது. 
    இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.
    நம்மில் பலருக்கும் ஒரேஒரு சந்தேகம் உள்ளது. அது... “என் நட்சத்திரத்திற்கு பொருந்தும் நட்சத்திரம் எது” என்பதுதான். இந்தப் பதிவில் “பொருந்தும் நட்சத்திரங்கள், பொருந்தாத நட்சத்திரங்கள்” அறவே ஒதுக்க வேண்டிய நட்சத்திரம் என இப்போது பார்க்கலாம்.

    செவ்வாயின் நட்சத்திரங்களான :- மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இம்மூன்றும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது. அதாவது ஆண்,பெண் இருவருக்கும் இவற்றில் ஏதாவது ஒரு நட்சத்திரமாக இருப்பின் சேர்க்கக்கூடாது. எளிமையாக புரியும்படி:-

    பெண்————————-ஆண்
    மிருகசீரிடம் —— சித்திரை, அவிட்டம்
    சித்திரை————— மிருகசீரிடம், அவிட்டம்
    அவிட்டம்——— சித்திரை, மிருகசீரிடம்
    இவை ஒன்றுக்கொன்று இணையக்கூடாது.

    சூரியனின் நட்சத்திரங்களான :- கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
    குருவின் நட்சத்திரங்களான:- புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
    இந்த ஆறு நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று சேர்க்கக்கூடாது.

    சந்திரனின் நட்சத்திரங்களான:- ரோகிணி,அஸ்தம்,திருவோணம்,
    ராகுவின் நட்சத்திரங்களான:- திருவாதிரை, சுவாதி, சதயம்.
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் இணைக்கக்கூடாது.

    சுக்ரனின் நட்சத்திரங்களான:- பரணி, பூரம், பூராடம்,
    சனியின் நட்சத்திரங்களான:- பூசம், அனுசம், உத்திரட்டாதி,
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேரக்கூடாது.

    புதனின் நட்சத்திரங்களான:- ஆயில்யம், கேட்டை, ரேவதி.
    கேதுவின் நட்சத்திரங்களான:- அசுவினி, மகம்,மூலம்.
    இந்த ஆறு நட்சத்திரங்களையும் ஒன்றுக்கொன்று சேர்க்கக் கூடாது.

    இதுதான் “கழுத்து பொருத்தம் என்னும் ரஜ்ஜு பொருத்தம்” ஆகும்.

    சரி, நாங்கள் இதையெல்லாம் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டோம். இதனால் ஏதாவது உயிருக்கு ஆபத்து வருமா? என்ற பயம் இயல்பானதே.
    செவ்வாயின் நட்சத்திரங்களின் மணம் முடித்தவர்களுக்கும், சந்திரன் மற்றும் ராகு நட்சத்திரங்களில் மணம் முடித்தவர்கள் மட்டுமே சற்று கவனமாக இருக்க வேண்டும். அடிக்கடி விபத்து, உணவு விசம் ஆகுதல்(food poison), கீழேவிழுதல், திடீரென உண்டாகும் தலைவலி, ரத்தகொதிப்பு, மயக்கம், இன்னும் சில.. இது போன்ற பாதிப்புகளை தரும்.

    செவ்வாய் - தலை ரஜ்ஜு
    சந்திரன்,ராகு- கழுத்து ரஜ்ஜு

    திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பொருத்தம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.
    திருமண பொருத்தம் பார்க்கும் போது யோனி பொருத்தம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு “யோனி” உண்டு அதன் படி இருவரும் இணைந்தால், நல்ல மணவாழ்வு ஏற்படும்.

    அஸ்வினி:- ஆண் குதிரை
    பரணி:- ஆண் யானை
    கார்த்திகை:- பெண் ஆடு
    ரோகிணி:- ஆண் நாகம்

    மிருகசீரிடம்:- பெண் சாரை
    திருவாதிரை:- ஆண் நாய்
    புனர்பூசம்:- பெண் பூனை
    பூசம்:- ஆண் ஆடு

    ஆயில்யம்:- ஆண் பூனை
    மகம்:- ஆண் எலி
    பூரம்:- பெண் எலி
    உத்திரம்:- பெண் எருது

    அஸ்தம்:- பெண் எருமை
    சித்திரை:- பெண் புலி
    சுவாதி:- ஆண் எருமை
    விசாகம்:- ஆண் புலி

    கேட்டை :- ஆண் மான்
    மூலம்:- பெண் நாய்
    பூராடம்:- ஆண் குரங்கு
    உத்ராடம்:- கீரி,மலட்டு பசு

    திருவோணம்:- பெண் குரங்கு
    அவிட்டம்:-பெண் சிங்கம்
    சதயம்:- பெண் குதிரை
    பூரட்டாதி:- ஆண் சிங்கம்

    உத்ரட்டாதி:- பெண் பசு
    ரேவதி:- பெண் யானை

    இப்போது உங்கள் யோனி மிருகம் எது என அறிந்து கொண்டிருப்பீர்கள். இதில் எதை எதனுடன் இணைக்கலாம் என்பதை நான் கூறினால் பாடம் நடத்துவது போல ஆகிவிடும். எனவே எளிமையான வழி ஒன்றைச் சொல்லுகிறேன். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேர்க்கலாம், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம். அதேசமயம் , நாய்க்கு பூனை பகை, சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை பகை, பாம்புக்கு எலி பகை, எலிக்கு, கீரி பகை, குரங்குக்கு, ஆடு பகை.

    சரி இது திருமண பொருத்ததிற்கு மட்டுமா என்றால்

    அதற்கு மிக மிக முக்கியம். அதேசமயம் உங்கள் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் என பலவிஷயங்களுக்கும் முக்கியம். சரி... இந்தப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் நடந்தால் என்னாகும்? சந்ததியை உருவாக்கும் “தாம்பத்யம்” மிக முக்கியம் அல்லவா. இதில் பகை மிருக அமைப்பு, தாம்பத்யத்தில் நாட்டம் இல்லாமலும், வெறுப்பு எண்ணமும் உண்டாக்கும்.

    தாம்பத்ய திருப்தி என்பது மிகவும் அவசியம். பகை மிருக அமைப்பு ஒருவருக்கு திருப்தியும், மற்றவருக்கு ஏமாற்றத்தையும் தரும். இன்றைய காலகட்டத்தில் மணமுறிவும், தவறான தொடர்புகளும் அதிகரிக்க இந்த பொருந்தாத இணைப்பும் ஒரு காரணம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, திருமணப் பொருத்தத்தின்போது இந்த மிக முக்கிய பொருத்தங்களை மட்டுமாவது கவனமாகப் பாருங்கள் , அவை:- ரஜ்ஜு, யோனி, கணம், இம்மூன்றும் மிகமிக முக்கியம்.
    ஆணுக்கு ஆண் யோனியும், பெண்ணுக்கு பெண் யோனியும் ... மிக அற்புதம்

    பெண்ணுக்கு ஆண் யோனியும், ஆணுக்கு பெண் யோனியும் :-மனைவிக்கு அடங்கிப்போவார்கள்.
    இருவரும் ஆண் யோனி :- அதீத முரட்டுத்தனம்
    இருவரும் பெண் யோனி:- ஏமாற்றம்

    எனவே ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது, இவற்றில் கவனம் செலுத்துங்கள். பொருத்தம் உடலிலும் வேண்டும்... புரிந்தவன் மணமாகவேண்டும் என்று கவியரசர் பாடியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
     
    ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.
    பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு, ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.

    பொதுவாக ஜனன கால ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்படுவது ஆகும். இந்த ஜனன கால ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக, அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றியும், மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக அந்த நல்ல தீய பலன்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    ஜனன கால ஜாதகமே இல்லாதவர்களுக்கும், பிறந்த நேர குறிப்புகளில் குழப்பம் உள்ளவர்களுக்கும், பிரசன்னம் என்பது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். ஜாதகமே இல்லை என்றாலும் வாழ்க்கையில் எழும் பல வகையான பிரச்சினைகளுக்கும், சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமான கேள்விகளுக்கும் ஜோதிட ரீதியில் இந்த பிரசன்ன முறை மூலமாக மிக எளிதாக தீர்வு காண முடியும்.

    ஏன் சில நேரங்களில் ஜாதகம் உள்ளவர்களுக்கும் கூட இந்த பிரசன்ன முறை என்பது இன்றியமையாததாக ஆகின்றது.

    அது எப்படி என்று பார்ப்போம்.. உத்தியோகத்தில் இருக்கும் ஒருவர் ஜோதிடரிடம் சென்று, தான் இருக்கும் வேலையை விட்டு சொந்த தொழிலில் இறங்கலாமா? என்று கேட்பதாக வைத்துக் கொள்வோம்.

    ஜோதிடத்தில் 6-ம் பாவம் என்பது உத்தியோகத்தையும், 7-ம் பாவம் என்பது சொந்தத் தொழிலையும் குறிக்கும். இவ்விரு பாவங்களில் எது 2, 4, 6, 10 போன்ற புறம் சார்ந்த பாவங்களை அல்லது புறத்தை கெடுக்காத பாவங்களை தொடர்பு கொண்டு வலுவான அமைப்பில் இருக்கின்றதோ அது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பதே சிறந்ததாகும்.

    ஒரு வேளை விதியின் படி இவ்விரு பாவங்களும் சம வலுவுடன் இருந்து, மதி என்கிற நடப்பு தசாநாதன் இவ்விரு பாவங்களில் ஏதாவது ஒன்றை பார்க்கவில்லை எனில், இவ்விரண்டில் எதை செய்தாலும் பெரிய வித்தியாசம் வராது என்பதே இங்கு அர்த்தமாகும். ஆனால் ஜோதிடர் இதை ஆதாரமாகக் கொண்டு உத்தியோகம் அல்லது சொந்தத் தொழில் இவற்றில் எதை செய்தாலும் உனக்கு நன்மையே என்று கூறும் பொழுது, ஜாதகர் மேலும் குழப்பமடையக்கூடும். ஆதலால் இவ்விரண்டில் எதை செய்யலாம் என்று உறுதியாக கூறினால் தான் ஜாதகரின் சந்தேகம் தீரும்படியாக இருக்கும்.

    இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரசன்னம் மூலமாக, மேற்கூறிய இரண்டில் எதை செய்தால் அதீத நன்மை என்பதை, உறுதியாக கூறிவிடலாம். ஆக ஜாதகம் உள்ளவர்களுக்கும் இது போன்ற சமயங்களில் பிரசன்னம் அவசியமாகின்றது.

    மிக மிக குறுகிய கால இடைவெளியில் அரங்கேறும் சம்பவங்களையும், ஒரே நாளில் அரங்கேறும் சம்பவங் களையும் ஜனன ஜாதகத்தில் உள்ள விதி மற்றும் மதியை கொண்டு நிர்ணயம் செய்வது என்பது சற்று கடினமான காரியம் ஆகும்.

    ஆனால் பிரசன்ன ஜோதிடத்தில் இது எளிது. குறிப்பாக... ‘இன்று நடைபெற இருக்கும் மேற்படிப்பிற்கான கலந்தாய்வில் நான் எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்குமா?’, ‘வங்கியில் விண்ணப்பித்த கடன் எப்போது ஒப்புதல் ஆகும்?’, ‘இன்று பள்ளியில் நடக்க இருக்கும் பேச்சு போட்டியில் நான் வெற்றி பெறுவேனா?’, ‘வெளியூர் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த ரெயில் டிக்கெட் காத்திருப்பு வரிசையில் இருந்து உறுதி செய்யப்படுமா?’, ‘இன்று எனது நண்பர் எத்தனை மணிக்கு என் வீட்டிற்கு வருவார்?’, ‘திருடு போன அல்லது காணாமல் போன பணம், பொருள் திரும்ப கிடைக்குமா?’ என்பது போன்ற ஜாதகரின் யதார்த்தமான கேள்விகள், இதுபோன்று இன்னும் நிறைய கேள்விகளுக்கு பிரசன்னம் மூலமாக மிக எளிதாகவும், துல்லியமாகவும் தீர்வு காண முடியும்.



    ஒரு சில விநாடி இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளின் ஜாதகங்களை கூட, உப நட்சத்திர கோட்பாட்டின் மூலம் மிக அழகாக வேறுபடுத்தி, பின் அதற்கான பலனை தனித்தன்மையுடன் கூறுவதே உயர் கணித சார ஜோதிடத்தின் சிறப்பம்சமாகும். இதே உப நட்சத்திர கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தான் பிரசன்ன ஜாதகமும் கணிக்கப் படுகிறது.

    கிரக நிலைகளையும், பன்னிரு பாவ நிலை களையும் பற்றி தெரிவிப்பது ஜாதகம். ஜோதிடரிடம், பிரசன்னம் பார்ப்பதற்காக வருபவரின் மனதில் இருந்து கேள்வி எப்போது உதயமாகின்றதோ; அந்த குறிப்பிட்ட நேரத்தின் போது வான்மாண்டலத்தில் உள்ள கிரக நிலைகளே பிரசன்ன ஜாதகத்தில் இடம்பெறும். ஆனால் லக்னப் புள்ளியை பொறுத்து வேறுபடும் பாவ நிலைகள் என்பது, கேள்வி உதயமான நேரத்தை கருத்தில் கொள்ளாமல் வாடிக்கையாளர் குறிப்பிடும் எண்ணை (1 - 249) பொருத்து கணக்கிடப்படுகின்றது.

    வான்மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும், மொத்தம் 249 உபபிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆக 360 பாகையைக் கொண்ட வான்மண்டலம் என்பது 249 உபநட்சத்திரங்களை கொண்டது ஆகும். இந்த 249 உபநட்சத்திர பிரிவுகளையும், 1 முதல் 249 வரை உள்ள வரிசை எண்களில் தொகுக்கப்பட்டுள்ளது.

    பிரசன்ன ஜோதிடர், வாடிக்கையாளரிடம் 1 முதல் 249 உள்ள எண்களில் ஏதாவது ஒரு எண்ணை குறிப்பிடுமாறு கூறுவார். வாடிக்கையாளர் எந்த எண்ணை குறிப்பிடுகின்றாரோ அந்த எண்ணிற்குரிய உபநட்சத்திரமே லக்ன பாவ உபநட்சத்திரமாக அமையும். அதாவது அந்த எண்ணின் வரிசைக்குரிய உபநட்சத்திரத்தின் பாகையே, லக்ன ஆரம்ப முனையின் பாகையாக நிர்ணயம் செய்யப்படும். பின்னர் அந்த லக்ன புள்ளியை மையமாகக் கொண்டு, மற்ற பதினொரு பாவங்களின் ஆரம்ப முனைகள் கணக்கிடப்பட்டு பிரசன்ன ஜாதகம் கணிதம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு எண்ணை பெற்று, பிரசன்ன ஜாதகத்தின் லக்னத்தை தீர்மானிப்பதில் ஒரு சூட்சுமம் உள்ளது. பொதுவாக ஜோதிடத்தில் லக்ன பாவம் என்பது ஜாதகர் ஒரு செயலில் ஈடுபடும் தன்மையையும், ஜாதகரின் எண்ண ஓட்டங்களையும் (சிந்தனை) குறிக்கும். ஆக பிரசன்ன ஜோதிடத்தில் ஜாதகர் தெரிவிக்கும் எண்ணானது, அவர் நினைத்த அந்த செயலைக் குறிக்கும். மேலும் அந்த செயல் நிறைவேறுமா.. நிறைவேறாதா? அப்படி நிறைவேறும் எனில் எப்போது நிறைவேறும்? என்று தெரிவிப்பது, ஜோதிடரிடம் வாடிக்கையாளர் கேட்ட கேள்வி நேரத்தின் போது உள்ள கிரக நிலைகளே ஆகும்.

    வரைமுறைகள்

    பிரசன்ன ஜோதிடத்திற்கு என்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.

    * பிரசன்னத்தின் மூலமாக நாம் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை காண முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகள் இருந்தால் அத்தனை முறை பிரசன்னம் பார்க்கப்பட வேண்டும்.

    * பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விகள் யாவும் நியாயமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும். அதாவது இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா?, வீராட் கோலி சதமடிப்பாரா? போன்ற பொதுவான கேள்விகளுக்கு பிரசன்னத்தின் மூலமாக தீர்வு காண முடியாது.

    * பிரசன்னத்தில் ஜாதகர் நேரிடையாக தமக்கோ, தன் குடும்ப உறுப்பினர்களின் சார்பாகவோ, நெருங்கிய நண்பர்களின் சார்பாகவோ கேள்விகளை முன் வைக்கலாம். அப்போது தான் பிரசன்னம் பலிதம் ஆகும்.

    கடகம் ராமசாமி
    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. ஓருவரது கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.
    பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறக்கும் கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவாக அவர்களுடைய செயல்பாடுகளின் பலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு. கிழமையின் மூலமாக அவர்களின் குண நலன்கள், அவர்களின் சிறப்பு பற்றி கூற முடியும்.

    கிழமைகளும் பலன்களும் :

    ஞாயிற்றுக்கிழமை :


    ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், திறன் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போட்டி மனப்பான்மை, ஆளுமைதிறன் இருக்கும். செல்வம் உடையவராய் இருப்பார்கள். கொடுத்த வாக்கை உயிர்போல காப்பவர்கள்.

    திங்கட்கிழமை :

    திங்கட்கிழமையில் பிறந்தவர்கள் பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கீர்த்திமான், தர்மவான், அபிமானி, அன்பானவன். இனிய சொற்களால் அனைவரையும் மயக்கிவிடுவார்கள். சுற்றமும், நட்பும் நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.

    செவ்வாய்கிழமை :

    செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதீத அன்பு கொண்டவர்கள். தந்திரக்காரனாய் இருப்பார். பிறருக்கு உதவுபவர்கள். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என வாழ்பவர்கள்.

    புதன்கிழமை :

    புதன்கிழமையில் பிறந்தவர்கள் இளமையான தோற்றம் கொண்டவர்களாகவும், இனிமையாக பேசுபவர்களாகவும் இருப்பார்கள். சிரித்த முகத்தினர். கல்வியறிவாளன், தெய்வபக்தி உள்ளவன், பிறரை மகிழ்விப்பவர். நயமாகவும், விகடமாக பேசி அனைவரையும் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்டவர்கள். தன்காரியம் நடக்க எதையும் செய்வார்கள்.

    வியாழக்கிழமை :

    வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் பொறுப்பானவர்களாகவும், வசதியானவர்களாகவும், புகழ்பெற்றவர்களாகவும் இருப்பார். அறநெறியில் விருப்பம் உடையவராய் இருப்பார்கள். உண்மை விளம்பிகள், கடமை, கண்ணியம், கட்டுபாடு மிக்கவர்கள்.

    வெள்ளிக்கிழமை :

    வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதிர்பாலினத்தினரை கவரும் இயல்புடையவர். வாகனங்கள் உடையவர். உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பார். அழகாக பேசுபவர், முகஸ்துதிக்கு மயங்குபவர்கள், செயல் திறன் மிக்கவர்கள்.

    சனிக்கிழமை :

    சனிக்கிழமையில் பிறந்தவர் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். இவர்களிடம் போராடி வெற்றிபெறும் குணம் இருக்கும். தனக்கு பிடித்தவரிடத்தில் உயிர் உள்ளவரை விசுவாசமாக இருப்பார்கள். பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள். மேலும், இவர்கள் நேர்மையாக நடக்க ஆசைப்படுவார்கள்.
    உங்களது ஜாதகத்தில் சந்திரம் எந்த கிரகத்துடன் இணைந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சந்திரன் சூரியனுடன் இணைந்தால், அரச பயம், பண முடக்கம் போன்றவை தோன்றும்.

    சந்திரன் செவ்வாயுடன் இணைந்தால், சிறு விபத்து, ஆயுத பயம் ஏற்படும்.

    சந்திரன் புதனுடன் இணைந்தால், குழந்தைகளுக்கு நோய், கல்வித்தடை உருவாகும்.

    சந்திரன் குருவுடன் இணைந்தால், ஸ்தான நாசம் உண்டாகும்.

    சந்திரனும் சுக்ரனும் இணைந்தால், செலவு அதிகரிக்கும், வரவு குறையும்.

    சந்திரன் சனி, ராகுவுடன் இணைந்தால், கலகமும், குழப்பமும் தோன்றும்.

    சந்திரன் கேதுவுடன் இணைந்தால், துயரமான சம்பவம் இடம் பெறும்.

    இந்த பலன்கள் மற்ற ராசி, லக்னம், கிரகங்கள் உட்கார்ந்த வீடு, தசா புத்திகளை அனுசரித்து மாறுபடலாம்.
    கிருத்திகை நட்சத்திரகாரர்களின் தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.
    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறரை வழி நடத்தி செல்வதில் வல்லவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பலர் சிறந்த வழிக்கறிஞர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும், கல்லூரி பேராசிரியர்களாளும் பணியாற்றும் திறன் கொண்டவர்கள். மருத்துவ துறையிலும் சமூக சேவையிலும், நாட்டுக்காவும் பாடுபடுவதில் அக்கரை கொண்டவர்களாகளும் இருப்பார்கள் முழு சுதந்திரம் உள்ள இடத்தில் மட்டுமே பணிபுரியும் ஆர்வம் இருக்கும். மற்றவர்களின் கட்டளைக்கு கீழ் படியக்கூடிய வேலையாக இருந்தால் அதனால் எவ்வளவு லாபம் வந்தாலும் ஒரு நிமிடத்தில் உதறி விடுவார்கள். உணவு, மற்றும் கெமிக்கல் போன்ற பேற்றிலும் ஈடுபடுவார்கள்.

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சூரிய திசை வரும். சூரிய திசை மொத்தம் 6 வருடங்கள் என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு மீதமுள்ள திசை காலங்களை அறியலாம். சூரிய திசை காலங்களில் பல வகையில் குடும்பத்திற்கு முன்னேற்றம் உண்டாகும் என்றாலும் குழந்தைக்கு உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்களும், குழந்தையின் தந்தைக்கு பல இன்னல்களும் உண்டாகும். சூரியன் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் பாதிப்புகள் குறையும்.

    இரண்டாவது திசையாக வரும் சந்திர திசை மொத்தம் பத்து வருடங்கள் நடைபெறும். சந்திரன் சூரியன் சாரத்தில் சஞ்சரிப்பதால் சற்று முன் கோபம், முரட்டுதனம், தந்தை தாயுடன் கருத்து வேறு ஜல தொடர்புடைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் சுபர்பார்வை சேர்க்கையுடன் சந்திரனிருந்தால் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

    மூன்றாவது திசையாக வரும் செவ்வாய் திசை 7 வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் கல்வியில் முன்னேற்றமும் குடும்பத்தில் ஏற்ற இறக்கமான பலன்களும் உண்டாகும் என்றாலும் ஜாதகருக்கு முன் கோபம் சற்று அதிகமாக இருக்கும்.

    ராகு திசை 18 வருடங்கள் 4-வது திசையாக நடைபெறுவதால் நல்ல யோகத்தையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஜந்தவதாக வரும் குரு திசை காலங்களும் ஒரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும். ஆறாவதாக வரும் சனி திசையும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் மேற்கூறிய திசா காலங்களில் அதன் அதிபதி ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரிகோணங்களில் அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும். இல்லையெனில் வாழ்வில் எதிலும் எதிர் நீச்சல் போட வேண்டிவரும்.

    இந்த நட்சத்திரத்தை மார்கழி மாதத்தில் இரவு சுமார் 11 மணிக்கு உச்ச வானத்தில் காணலாம். கிருத்திகை நட்சத்திரகாரர்களின் தல விருட்சம் அத்தி மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். மயிலம் முருகனை வியாக்கிழமைகளில் வணங்குவது நல்லது.
    இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரகாரர்களின் குணநலன்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    இருபத்தேழு நட்சத்திரங்களில் மூன்றாவது இடத்தை பெறுவது கிருத்திகை நட்சத்திரமாகும். இதன் அதிபதி சூரிய பகவானாவார் கிருத்திகை நட்சத்திரத்தின் 1-ம் பாதம் மேஷ ராசியிலும் 2,3,4 பாதங்கள் ரிஷப ராசியிலும் இருக்கும். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் 1-ம் பாதமானது தலை மற்றும் கண்களையும், 2,3,4-ம் பாதங்கள் முகம், கழுத்து, தாடை போன்ற பாகங்களையும் ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் அ,இ,உ,எ ஆகி யவை தொடர் எழுத்துக்கள் ஆ,ஈ ஆகியவை.

    குண அமைப்பு :

    கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களில் பிறந்தவர்களுக்கு தோஷமில்லை. மற்ற இரண்டு பாதங்களில் பிறந்தவர்கள் வாழ்வில் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இவர்களுக்கு நல்ல உடல் வலிமையும் புத்திசாலிதனமும் இருக்கும். குருட்டு தைரியத்துடன் சிலருக்கு தீயதை செய்தாலும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

    சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு. முன் கோபமும் அதிகமிருக்கும் ஆடம்பரமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புவர். தன் சக்திக்கு எது முடியுமோ அதையே செய்து முடிப்பர். கனவுலகத்தில் சஞ்சரிப்பதெல்லாம் இவர்களுக்கு பிடிக்காத விஷயம். தாய் மொழி மீதும், நாட்டின் மீதும் அதீத பற்றுடையவர்கள். சிரித்த முகத்துடன் இருந்தாலும் சண்டை பிரியர்கள். காரசாரமாக வாதிடுவார்கள்.

    குடும்பம் :

    கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் என்பது பிடிக்காத ஒரு விஷயமாகும். திருமண வாழ்கையிலேயே கராராக நடந்து கொள்வார்கள். மனைவி பிள்ளைகளிடம் கூட விட்டு கொடுத்து போக மாட்டார்கள் என்றாலும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் பல கனவுகளுடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள். அதீதமான தெய்வ பக்தியும் உண்டு. தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள் உணவு வகைகளை ரசித்தும் ருசித்தும் உண்பார்கள்.
    ×