என் மலர்
நீங்கள் தேடியது "Garudalwar"
- இன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
- கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தீங்கி ழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.
மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் விரதம் இருந்து வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர்.
பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். சனி, வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திர நாட்களில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.
விபத்து, நோய் நீக்கும், மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாக திகழும் கருட பகவானுக்கு கருட ஜயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் செய்வது நலம் தரும். கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு, கேஸ் பிரச்சினை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம். பலன் இரட்டிப்பாகும்.
கான்கிரீட் தூண்கள் கொண்டும் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலைப் படைப்பை செய்து முடிக்க 21 ஆயிரம் இரும்பு பாளங்களும், 1 லட்சத்து 70 ஆயிரம் நட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான செலவு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.740 கோடி என்கிறார்கள்.
எல்லாப் பெருமாள் கோவிலிலும் சன்னதி கருடன்தான் விசேடமாக ஆராதிக்கப்படுவார். ஆனால் இங்கு ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இருபுறமும் சிம்மங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். ஒவ்வொரு மாதமும், சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று ‘மஹா சுவாதி’ என கருடனின் ஜென்ம நட்சத்திர வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
பக்தர்களின் வேண்டுதல்களை அவ்வப்பொழுது நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை அவர் அமர்ந்திருக்கும் மதில் சுவற்றில் உடைத்து நன்றி செலுத்துகின்றனர். இவரைத் தரிசித்து வழிபட் டால், ஏவல், பில்லி, சூனியம், மனவி யாதி அகலும். சத்ரு பயம் நீங்கி, வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும்.
கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.
செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.
புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.
வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
அஷ்ட ஐஸ்வர்யங்கள் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டுவோர் வளர்பிறை ‘அஷ்டமி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை ‘பிரதமை’யன்று கருட தரிசனம் ஆகும்.
சந்திரனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக வளர்பிறை ‘திரிதியை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை ஸப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக வளர்பிறை ‘சஷ்டி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க ‘வளர்பிறை சதுர்த்தி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும் வேண்டுவோர் வளர்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
கருட பகவானுக்கு உரிய திதி ‘பஞ்சமி’ ஆகும். எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு. பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.
தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்யவேண்டும்.
மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் ‘துவாதசி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும் வாழ்வில் நல்ல மேம்பாடு அடையவும் வேண்டுவோர் தேய்பிறை ‘தசமி’திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
முனிவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமானால் தேய்பிறை ‘சப்தமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.
குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை ‘பிரதமை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.
எமபயம் நீங்கவும் மரண பயம் விலகவும் தேய்பிறை ‘நவமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.
கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை ‘ஏகாதசி’ அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.
ராகு கேதுக்களின் அனுக்கிரகம் கிடைக்கவும் ராகு கேது தசாபுத்தி நடைமுறையில் உள்ளவர்கள் தேய்பிறை ‘அஷ்டமி’ அன்று கருட தரிசனம் செய்ய நல்ல பலன்கள் நடைமுறைக்கு வரும்.
அமாவாசை திதி அன்று கருட தரிசனம் செய்வது பித்ருக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். இதனால் அளப்பறிய நன்மைகள் வாழ்வில் உண்டாகும்.
ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.
பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.
சிவனின் அருளாசி கிட்ட தேய்பிறை ‘திரயோதசி’ பிரதோஷ காலத்தில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.
திருமண பாக்கியம் உண்டாக தேய்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். நல்ல வரன் கிடைக்கும்.
ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், லாபமும், அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுவோர் தேய்பிறை, ‘சஷ்டியில்’ கருட தரிசனம் செய்ய வேண்டும்.
எந்த திதி அன்று கருட தரிசனம் செய்தாலும் அத்திதியின் அதி தெய்வ அருளாசியால் நமக்கு நல்ல பலன்களே விளையும்.
எனவே ‘ நித்திய கருட தரிசனத்தை ஒரு வழக்கமாக பழக்கமாக, தவமாக, வழிபாடாகக் கொண்டால் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் பெற்று வாழலாம்.
ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தில் தவறாமல் கருட தரிசனம் செய்தே ஆக வேண்டும்.
இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும் என்று ஏற்கனவே அறிந்துள்ளோம். வேத மந்திரங்களைக் கூறி நடைபெறும் திருமணத்தில், வேத மந்திரங்களை ஒலிக்கும் போது ஏதாவது தோஷம் ஏற்பட்டாலும் கூட, இந்த கருடத்வனி அதனை நீக்கி விடுகிறது.
மேலும் திருமணத்தின் முக்கிய அங்கமான திருமாங்கல் யம் என்னும் தாலியைச் செய்யக் கொடுக்கும்போது கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும். அல்லது திருமாங்கல்யத்தை வாங்கும்போதாவது சுவாதி நட்சத்திரத்தில் வாங்குவது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு.
கருடன் தன் தாயின் ஆணைப்படி தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தைக் கொண்டு வரும் போது தேவேந்திரன், மகாவிஷ்ணு ஆகிய தேவர்கள், தெய்வம் ஆகியோர்களைப் போரிட்டு வென்று வெற்றி பெற்று அமிர்த கலசத்தை கொண்டு வந்தார். மேலும் ஒரு நிகழ்வில் பலாசுரன் என்ற அசுரனையும் விழுங்கிக் கொன்று துப்பினார். எனவே கருடன் தெய்வம் தேவர், அசுரர், நரர், மிருகாதிபட்சிகள் போன்ற அனைத்தையும் வென்று வீழ்த்தும் பலம், பராக்கிரமம் கொண்டவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
எனவேதான் “கருட தரிசனம் சத்ரு விநாசம்” என்று கருதப்படுகிறது. எப்பேர்பட்ட சத்ரு தொல்லைகளையும் கருட தரிசனம் நாசம் செய்துவிடும் என்பதற்கு கருடனின் மேற்கண்ட தேவ, அசுர, தெய்வப் போரிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
அபூர்வ சக்திகள்
பத்ம புராணப்படி கருடனுக்கு கீழ்க்கண்ட அபூர்வ சக்திகள் உண்டு.
1. பிறரை வசியம் செய்வது, 2. பகைவர்களை அடக்குவது, 3. உணர்வை வற்ற வைப்பது, 4. மயங்க வைத்தல், 5. வானத்தில் உலாவுவது, 6. காற்று, நீர், நெருப்புகளில் அச்சமின்றிபுகுவது, 7. இந்திரஜாலம் காட்டுவது, 8. படிப்பில் தேர்ச்சி, நல்ல ஞாபகசக்தி, 9. வாதத்திலும், போரிலும் வெற்றி பெறுதல்.
தசா புத்தியில் கருட வழிபாடு
ஒவ்வொருவருக்கும் எந்த தசா புத்தி நடப்பில் இருக்கிறதோ அந்த திசைக்குரிய அல்லது அந்த புத்திக்குரிய கிழமைகளில் ஸ்ரீ கருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, அமுத கலசம் என்னும் இனிப்பை படைத்து வழிபட்டு வந்தால் தசா புத்தியால் ஏற்படும் இன்னல்கள் உடனே நீங்கும்.
கருடா சவுக்கியமா?
பெருமாள் கருடனுக்கு அபயம் அளித்த தலம் “திருச்சிறு புலியூர்” என்ற தலமாகும். இது மாயவரம் அருகில் உள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரின் அருகாமையில் உள்ளது. இங்கு பூமிக்குக் கீழ் கருடன் சன்னதியும், பூமிக்கு மிக உயர்ந்த இடத்தில் ஆதிசேஷன் சந்நதியும் இருக்கிறது.
“கருடா சவுக்கியமா” என்று பாம்பு கேட்டதற்கு “அவரவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சவுக்கியமே” என்று கருடன் சொன்னதாக புராணங்களில் உள்ளது. இந்த நிகழ்வு நடந்தது இந்த தலத்தில்தான்.
கருட பத்து
கருடன் மீது அன்புடனே ஏறி வந்து அருள் செய்யும் ஸ்ரீமந்நாராயணனை துதி செய்யும் “கருட பத்து” என்று பத்து துதி பாடல்கள் உள்ளன. இதனை பாராயணம் செய்வதால் ஸ்ரீமந் நாராயணனின் அருளும், கருட தரிசனமும் கிடைக்கும். சகல நன்மைகளும் உண்டாகும்.
தர்ப்பை ரகசியம்
கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்த கலசத்தை எடுத்துக் கொண்டு வரும் போது கலசத்தில் ஒட்டிக் கொண்டு வந்த “அமிர்த வீரியம்“ என்பதுதான் தர்ப்பை ஆகும். இது ஒரு தேவலோகப் புல்லாகும். பூலோகத்தில் தர்ப்பை எனப்படுகிறது.
கருட பகவானின் அங்க லட்சணங்கள்
இரண்டு கரங்கள் - நான்கு கரங்களும் உண்டு. அருள் ததும்பும் முகம், கவலைக்குறியே இல்லாதவர், தனது இரண்டு இறக்கைகளை விரித்து மண்டலமிட்டு வானத்தில் பறப்பவர், சிறகுகளை விட உடல் பருத்திருக்கும், குண்டலங்களைக் காதுகளில் அணிந்தவர், வளைந்த புருவங்கள், உருண்டை கண்கள், நீண்ட மூக்கு, வெளுப்பான முகம் உடையவர். மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் ஸ்ரீகருடனுடைய இறக்கைகள், மூன்று வேதங்களாகக் கருதப்படுகின்றன.
கருடனின் நித்திய வாசஸ்தலம் திருப்பாற் கடலாகும். அவர் சூரிய மண்டலத்திலும், ஞானிகளின் உள்ளங்களிலும் இருப்பவர். பாமர மக்களைக் காப்பதில் திருமாலைப் போன்றவர். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று புருஷார்த்தங்களை நாடுபவர்களுக்கு ஸ்ரீகருடன் அவற்றைத் தந்து அருள் புரிகிறார்.
கருடன் வட்டமிடுதல்
பறவைகளுக்கு ராஜாவான பட்சிராஜன், கருடன் எப்போதும் பறக்கும் போது இறக்கை அசைக்காமல் பறக்கும். ஆகாயத்தில் அழகாய் கருடன் வட்டமிடும் கண்கொள்ளா காட்சியை காண்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். நாம் ஒரு காரியம் உத்தேசித்து, போகும் போது கருடன் வட்டமிடும் தரிசனம் கிடைத்தால் வெற்றி கிட்டும், கருடன் வட்டமிடு வதைவிட ஒரு உயர்ந்த சுப சகுணம் வேறெதுவும் இல்லை அரசயோகமே கிட்டுவதற்கு ஈடான பலனைத் தரும்.
கோவில் கொடியேற்றத்தில் கருடன்
நம் நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது, அக்கோவிலின் கொடி மரத்தில் வேத மந்திரங்களோடு கொடியை ஏற்றுவது வழக்கம். அந்த கொடியில் ஸ்ரீகருடனின் திருஉருவமே எழுதப்பட்டிருக்கும். அந்தக் கொடியையே மிகவும் பவித்ரமாக உயரே ஏற்றி வழிபடுகிறோம். இதற்கும் காரணம், கருடன் வேத வடிவானவன் என்பதால், இங்கு வேதத்திற்கே முதலிடம் கொடுத்து உயரே வைத்துள்ளனர்.
கருட மனையில் வீடுகட்டுங்கள்
மனை அமைப்புகளைக் கொண்டு வாஸ்துவில், சிங்க மனை, யானை மனை, கருடமனை எனப் பலவகை உள்ளன. இதில் கருடமனை அமைப்பில் வீடு கட்டினால் அந்த வீட்டிற்கு விஷஜந்துக்கள், சத்துருக்களால் எப்போதும் பாதிப்பு ஏற்படாது. கருடனின் அருட்கடாட்சம் எப்போதும் இருக்கும். வீடுகட்ட தொடங்கும்போது கருடன் தரிசனம் கொடுப்பதும், கருடன் வட்டமிடுவதுமான சகுணம் கண்டால் அந்த வீடு நல்ல முறையில் எளிதாகக்கட்டி முடித்து, கிரக பிரவேசம் செய்யப்படும். மேலும் அந்த வீட்டில் எப்போதும் சுபங்களே நடக்கும். நல்ல வெற்றி, முன்னேற்றம் உண்டாகும்.
திங்கள்: ஜாதகத்தில் சந்திரபலம் பெறவும், சந்திரகிரக தோஷம் நீங்கி சுபிட்சம் பெறவும், மாதுர் தோஷம், சாபம் நிவர்த்தி அடைய திங்கட்கிழமை கருடதரிசனம் செய்யவும். கடகராசி, லக்னகாரர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வை எதிர்நோக்கலாம்.
ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12ல் இருப்பவர்களும் நீச்சம், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருப்பது போன்ற சந்திர பாதிப்படைந்த ஜாதகர்கள் திங்கட்கிழமையில் சந்திர ஓரையில் கருட தரிசனம் செய்வது சந்திர தோஷ நிவர்த்தியும், சந்திர அனுக்கிரகமும் பெற்றுத்தரும்!
லக்னத்திற்கு 1, 5, 9ல் சந்திரன் இருப்பவர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் பெரிய முன்னேற்றங்களை அடையலாம்.
செவ்வாய்: செவ்வாய் கிரகம் 6, 8, 12ல் உள்ளவர்களும், நீச்சம்- அஸ்தமனம், பகை, வக்ரம், பாதகஸ் தானம், சனி, ராகு, கேது தொடர்பு பெற்றிருத்தல் போன்ற நிலையில் உள்ள ஜாதகர்கள் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்வது செவ்வாய் கிரக தோஷம் நீங்கி, யோக பலன் கள் சித்திக்கும்.
நிலம், வீடு, மனைகள் போன்ற வற்றில் குறைகள், பிரச்சினை கள் நிவர்த்தி அடைய செவ் வாய்க்கிழமை கருட தரிசனம் உத்தம பலன் தரும்!

புதன்: அறிவு கிரகமான புதன் கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். கல்விகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள் நீங்கி வெற்றிகள் ஏற்பட புதன்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்! புதனின் ராசி, லக்ன, நட்சத்திரங்களில் (மிதுனம், கன்னி, ஆயில்யம், கேட்டை, ரேவதி) பிறந்தவர்கள் புதன்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வு கிட்டும். புதன் ஜாதகத்தில் 6, 8, 12ல் பாதகம், நீச்சம், வக்கிரம், அஸ்தமனம், நீச்சாம்சம் போன்ற எதிரிடையான அமைப்பைப் பெற்றவர்கள் புதன்கிழமையில் கருட தரிசனம் செய்வது நல்லது.
வியாழன்: வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது வியாழக்கிழமை மாலை நேர கருட தரிசனம் ஆகும். இன்றும் வியாழக்கிழமை கருட தரிசனத் திற்காக ஏரிக்கரைகளில் பல கருட தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைபோகத்தைக் காணலாம்.
குருவார கருட தரிசனத்தால் எடுத்த காரிய வெற்றி, பணவரவு, சத்ரு ஜெயம்,தேர்வுகளில் வெற்றி போன்றவைக் கிட்டுவது உறுதி ஆகும்!!
புத்திரப்பேறு வேண்டுவோர் குருவார கருட தரிசன பலன் களை ஜோடியுடன் தரிசனம் செய்ய வேண்டும்.
வெள்ளி: வெள்ளிக்கிழமை கருட தரிசனம் நோய், கடன், சத்ரு உபாதைகள் நீங்க வழிவகுக்கும். கொடுத்த கடன் வசூல் ஆகும். சுக்கிரன் ஜாதகத்தில் 6, 8, 12லும், நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், பாதகம், பகை, பாபிகளின் சூழல் போன்ற எதிரிடையான தன்மையில் இருந்தால் வெள்ளிக்கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்! சுபிட்சங்கள் உண்டாகும். சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்னம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிர வார கருட தரிசனம் செய்வது வாழ்வில் உன்னத நிலையைத் தரும்.
சனி: வேலைக்காரர்கள், ஊழியர் கள், கடின உழைப்பாளிகள், வியர்வை சிந்த உழைப்பவர் கள்சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ் வில் நல்ல நிலை கிட்டும். சனி ஜாதகத்தில் 6, 8, 12லும், பாதகம், நீச்சம், பகை, அஸ்தமனம், வக்கிரம், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற கிரக தொடர்புகள் பெற்று எதிரிடையாக இருப்பின், சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் சனியின் எதிர்மறை பலன்கள் தணியும். சுபங்கள் உண்டாகும்.
அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.
இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.
பாம்பு கனவில் வந்தாலோ அல்லது கண்ணில் பட்டாலோ கருடனை வழிபட்டு பரிகாரம் தேடலாம். பெரியாழ்வார் கருடனின் அம்சமாகத் தோன்றியவர். அநேக கோவில்களில் பெருமாள் எதிரே இருக்கும் கருடாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள் மற்றும் ஆண்டாளின் அருகில் இருக்கிறார்.
ஆதிமூலமே, என்று அழைத்த கஜேந்திரன் என்னும் யானையின் துன்பத்தைத் தீர்க்க பெருமாள் கருடன் மீது விரைந்து வந்து அருள் செய்தார். பக்தர்களின் துயர் போக்கிட எப்போதும் விரித்த சிறகுகளுடன் கருடாழ்வார் வைகுண்டத்தில் காத்திருக்கிறார் என்பது ஐதீகம்.
திருக்காவளம்பாடி
திருஅரிமேயவிண்ணகரம்
திருவண்புருடோத்தமம்
திருச்செம்பொன்செய்கோவில்
திருமணி மாடக்கோவில்
திருவைகுந்த விண்ணகரம்
- இந்த ஆறுதலங்களும் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளன.
திருத்தேவனார்த் தொகை
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன்பள்ளி
ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இந்தப் பதினொரு பெருமாள்களும் எழுந்தருள்வார்கள். இந்த பதினொரு பெருமாள்களையும் திருமங்கை யாழ்வார் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களா சாசனம் செய்வார். பிறகு திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய் வார். இந்தக் கருட சேவையைக் காண்பதற்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வாரே இங்கு வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். திருநாங்கூரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் கருட சேவைக்கு முதல் நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று சப்தமிடும். இந்த சப்தத்தை கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் பிரவேசித்து விட்ட தாக பக்தர்கள் கூறுவார்கள். திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் அதிக நெல்விளையும் என்பதும் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகும்.
மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்தக் கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்தப் பதினொரு பெருமாள்களையும் கருடசேவையில் சேவிப்பது பதினொரு திவ்ய தேசங்களுக்கு சென்று வழிபட்டதற்கு நிகராகும்.