என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருடாழ்வார் வழிபாடு"

    • பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.
    • கோவிலில் கருட பகவானை வணங்கிய பின்பு பெருமாளை வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது.

    1-8-2025 (இன்று) ஆடி சுவாதி

    பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார், ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதியில் அவதரித்ததாக புராணம் கூறுகிறது. பறவைகளின் தலைவனான கருடன், விஷ்ணுவின் வாகனமாக திகழ்கிறார்.

    கசியப முனிவருக்கு கத்ரு, வினதை என்ற இரு மனைவிகள் இருந்தனர். அதில் வினதைக்கு பிறந்தவர் தான் கருடாழ்வார். இவரது சகோதரன் அருணன். இவர் சூரிய பகவானின் தேரோட்டியாக திகழ்கிறார். கசியப முனிவரின் மற்றொரு மனைவியான கத்ருக்கு ஆயிரம் பாம்புகள் குழந்தைகளாக இருந்தனர்.

    ஒரு சமயம் வினதை, வானத்தில் வெள்ளை குதிரை பவனி செல்வதை பார்த்து, அதன் அழகை புகழ்ந்தார். அப்போது கத்ரு, அது முழுமையான வெள்ளைக் குதிரை இல்லை. அதன் வால் கருப்பு என்றாள். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் யார் சொல்வது தவறோ, அவர் மற்றவருக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். இதையடுத்து கத்ரு தனது குழந்தைகளான ஆயிரம் பாம்புகளில் ஒருவரான கார்க்கோடகனை வெள்ளைக் குதிரையின் வாலில் சுற்றி கருப்பு நிறமாக தோன்ற செய்தாள். இதைக் கண்ட வினதை ஏமாந்து, தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். கத்ருவின் அடிமையானாள். இதையடுத்து கத்ரு, வினதைக்கு பல கொடுமைகள் செய்து வந்தாள்.

    தன் தாயின் நிலைமையை கண்டு வருந்திய கருடன், தன் தாயை விடுவிக்க எண்ணினார். அதற்காக தேவலோகத்தில் இருக்கும் அமிர்த கலசத்தை கொண்டு வந்து தன் தாயை அடிமை வாழ்வில் இருந்து மீட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

    பெருமாள் கோவில்களில் பெருமாள் சன்னிதியின் முன்பாக கருடன் வீற்றிருப்பார். கோவிலில் கருட பகவானை வணங்கிய பின்பு பெருமாளை வணங்குவதே சிறப்பாக கருதப்படுகிறது. ஆடி சுவாதி நாளில் விரதம் இருந்து கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும், மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும், எதிரிகளின் பயம் விலகும், வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

    • சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
    • திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கருடாழ்வார் வழிபாடு மூலம் நமக்கு உண்டாகும் பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். நமக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும் கருட பகவான் என்பவர் திருமாலின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் ஆவார். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார். கருட பகவானைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

    கருட பகவான் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் திகழ்கிறார்.

    கருடனுடைய மகிமையை பற்றி ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்ப வர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். கருட பகவானுக்கு சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகா மோதர், மல்லீபுஷ்ய பிரியர். மங்களாலயர், சோமகார், பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகரு டன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக் கொழுந்து, கதிர்ப்பச்சை. சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

    குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டு மென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது. உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க் கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது. எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்ப வர்களும் கருடாழ்வாரை புதன் கிழமை வழிபடுவது நல்லது. நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.

    வீட்டில் பணப் பிரச்சினை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள். இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள். தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்கள் சிறு துரும்பாக மாறும்.

    • சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
    • திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கருடாழ்வார் வழிபாடு மூலம் நமக்கு உண்டாகும் பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். நமக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும் கருட பகவான் என்பவர் திருமாலின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் ஆவார். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார். கருட பகவானைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

    கருட பகவான் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் திகழ்கிறார்.

    கருடனுடைய மகிமையை பற்றி ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்ப வர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். கருட பகவானுக்கு சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகா மோதர், மல்லீபுஷ்ய பிரியர். மங்களாலயர், சோமகார், பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகரு டன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக் கொழுந்து, கதிர்ப்பச்சை. சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

    குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டு மென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது. உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க் கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது. எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்ப வர்களும் கருடாழ்வாரை புதன் கிழமை வழிபடுவது நல்லது. நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.

    வீட்டில் பணப் பிரச்சினை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள். இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள். தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்கள் சிறு துரும்பாக மாறும்.

    ×