search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car bomb attack"

    • அரசு தலைமை அலுவலகத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
    • கொடூர தாக்குதலுக்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    ஹிரன்:

    ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. அல்கொய்தாவுடன் தொடர்புடைய இந்த பயங்கரவாத அமைப்பு, சோமாலியா மக்கள் மற்றும் ராணுவத்தை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ஹிரன் மாகாணத்தில் உள்ள பெலேட்வேய்ன் நகரில் உள்ள அரசு தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு கார் வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் அந்த மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஹிர்ஷபெல்லே, சுகாதார ஆணையர் மற்றும் அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த கொடூர தாக்குதலுக்க அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தற்கொலை படை போல் செயல்பட்டு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்ஷபா அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை கடந்த சனிக்கிழமை சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாணத்தில் இன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் அம்மாகாண கவர்னர் மயிரிழையில் உயிர் தப்பினார். அவரது பாதுகாவலர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். #Carbombattack #Afghanistan
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் லோகார் மாகாண கவர்னரின் கார் பாதுகாப்பு வாகனங்களுடன் முஹம்மது அகா மாவட்டம் வழியாக இன்று சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது தலிபான் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் நடத்திய கார்குண்டு தாக்குதலில் கவர்னரின் பாதுகாப்பு அதிகாரி உள்பட 8 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். பத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலில் கவர்னர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக சில ஊடகங்களும், காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக வேறுசில ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. #Carbombattack #Afghanistan 
    சோமாலியா நாட்டில் அரசு அலுவலகம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. #Somaliaexplosion #Mogadishuexplosion
    மொகடிஷு:

    சோமாலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹாவ்லே வாடாக் மாவட்டத்தில் உள்ள அம்மாவட்ட தலைமை நிர்வாக அலுவலகத்தின் மீது நேற்று வேகமாக வந்த ஒரு கார் மோதி வெடித்துச் சிதறியது.

    இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 6 குழந்தைகள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர் என முதல் கட்டமாக தகவல் வெளியானது.

    கார் குண்டு வெடித்து சிதறிய வேகத்தில் அருகாமையில் இருந்த ஒரு பள்ளிக்கூட கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. ஒரு மசூதியின் மேற்கூரை மற்றும் சில வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.

    இந்நிலையில், கார் குண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். #Somaliaexplosion #Mogadishuexplosion
    ×