என் மலர்
நீங்கள் தேடியது "தீவிரவாதிகள் சுட்டுக்கொலை"
- தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல்.
- தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ராணுவ தளத்தின் சுவர் மீது வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட 2 கார்களை மோதி வெடிக்க வைத்தனர். சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் மற்ற தீவிரவாதிகள் ராணுவ தளத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
காரில் நிரப்பப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 12 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
ராணுவ தளத்துக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ தரப்பில் கூறும் போது, கார் குண்டு தாக்குதலுக்கு பிறகு ராணுவ தளத்தின் சுவர் உடைக்கப்பட்டு, பல தீவிரவாதிகள் உள்ளே நுழைய முயன்றனர், அவர்களில் 6 பேர் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர்.
அனைத்து பயங்கரவாதிகளும் அழிக்கப்படும் வரை நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்தது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கைபர் பக்துன்க்வா மாகாண முதலமைச்சர் அலி அமின் கந்தாபூர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் இத்தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல் பர்சன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பிரிவுகளில் ஒன்றாகும்.
- குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
- ஆயுதம் மற்றும் மனித கடத்தல்காரராக பணியாற்றி வந்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற குல்பூஷண் ஜாதவ் ஈரானின் சபாஹ ரில் ஒரு தொழிலை நடத்தி வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு குல்பூஷண் ஜாதவை ஒரு கும்பல் கடத்தி சென்று ஈரான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்தது. குல்பூஷண் ஜாதவ் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதையடுத்து அவருக்கு 2017-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சர்வதேச கோர்ட்டில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.
தண்டனையை மறுபரிசீலனை செய்ய சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டதால் 2019-ம் ஆண்டு குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் குல்பூஷண் ஜாதவை ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்ல உதவிய தீவிரவாதி முப்தி ஷா மிர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பலுசிஸ்தானின் துர்பட் பகுதியில் முப்தி ஷா மிர்ரை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி சென்றனர்.
ஜாமியத் உலமா அமைப்பு உறுப்பினரான முப்தி ஷா மிர், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு நெருக்கமாக இருந்துள்ளார். ஆயுதம் மற்றும் மனித கடத்தல்காரராக பணியாற்றி வந்துள்ளார்.
குல்பூஷண் யாதவை ஜெய்ஷ் அல்-அதில் அமைப்பின் முல்லா உமர் இரானி தலைமையிலான குழு கடத்திச் சென்றது. பின்னர் அவர் முப்தி ஷா மிர் உள்பட பல இடைத்தரகர்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதில் முப்தி ஷா மிர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஏற்கனவே 2020-ம் ஆண்டு இரானியும் அவரது 2 மகன்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பி டத்தக்கது.
முப்தி ஷா மிர் கடந்த ஆண்டு 2 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பி இருந்தார். அவர் பலுசிஸ்தானில் தீவிரவாதத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டம் ஹஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அந்த பகுதிக்கு சென்றனர். பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் தீவிரவாதிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படையினர் சுட்டதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநில போலீசார் 3 தரப்பினரும் இந்த அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார், எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #KashmirAttack #Bandipora
காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாத் பகுதியில் 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பாதுகாப்பு படை வீரர்கள் கோகர்நாத் பகுதியில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது கடோல் எனும் கிராமத்துக்குள் 3 தீவிரவாதிகளும் தஞ்சம் அடைந்து இருக்கும் தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் அந்த கிராமத்தை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
ராணுவ வீரர்கள் நாலாபுறமும் சூழ்ந்து கொண்டதை தொடர்ந்து இனி தப்பிச்செல்ல இயலாது என்பதை உணர்ந்த தீவிரவாதிகள், திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட தொடங்கினார்கள். இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் 3 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளும் வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அனந்த்நாக் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மாவட்டம் முழுவதும் செல்போன் தகவல் தொடர்பு சேவை முடக்கப்பட்டுள்ளது. #AnantnagEncounter






