என் மலர்
நீங்கள் தேடியது "Airstrikes"
- மியான்மரில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.
- நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவினர் போராடி வருகின்றனர்.
பாங்காக்:
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.
நாட்டின் பல பகுதிகளில் ராணுவத்துக்கு எதிராக பல்வேறு பிரிவினர் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இந்தக் குழுக்களை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.
இந்நிலையில், மியான்மரின் மத்திய பகுதியில் சகாயிங் பிராந்தியத்துக்கு உட்பட்ட லின்டாலு கிராமத்தில் உள்ள புத்த மடாலயம் ஒன்றில் நேற்று திடீரென ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் அங்கே தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள் என 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 10 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த பிராந்தியத்தில் போராடி வரும் எதிர்ப்பு முன்னணிக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிர் பிழைப்பதற்காக ஏராளமான மக்கள் அந்த மடாலயத்தில் தஞ்சம் அடைந்திருந்தனர்.
புத்த மடாலயத்தில் தங்கியவர்கள் மீது ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல் மியான்மர் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
- அவ்னர் நெதன்யாகு, இன்று தனது காதலி அமித் யார்தேனியை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.
அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகனின் திருமணம் ஈரான் தாக்குதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெதன்யாகுவின் மகன் அவ்னர் நெதன்யாகு, இன்று தனது காதலி அமித் யார்தேனியை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.
இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னமும் காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நெதன்யாகு குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா? என்று இஸ்ரேலில் எதிர்ப்பு எழுந்த நிலையில், திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- ஏமனில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
- இந்தத் தாக்குதலில் 74 பேர் பலியாகினர். மேலும் 171 பேர் காயம் அடைந்தனர்.
துபாய்:
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கு ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்து வருகின்றது. செங்கடல் பகுதியில் அமெரிக்காவின் சரக்கு கப்பல்கள் உள்ளிட்டவற்றின் மீது ஹவுதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, ஏமனில் ஹவுதி பயங்கரவாதிகள் உள்ள பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர். 171 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, ஹவுதிகள் இஸ்ரேலை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவியதாகவும், அதனை இஸ்ரேல் இடைமறித்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
- ஏமனில் உள்ள ஹவுதி குழுவை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது.
- அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாக ஹவுதி தெரிவித்துள்ளது.
ஏமன் தலைநகரில் அமெரிக்க நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் டிரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு கடற்பகுதியில் செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ஹவுதி குழுவிற்கு எதிராக அமெரிக்கா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையாக தாக்குதலை நடத்தி வருகிறது.
வான்தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான வீடியோவை ஹவுதி வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் இது தொடர்பாக தகவல் எதுவும் வெளியிடவில்லை.
கடந்த 2023ஆம் நவம்பர் மாதத்தில் இருந்து 100-க்கும் அதிகமான வணிக கப்பல்களை குறிவைத்து ஹவுதி தாக்கல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
- இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.
- இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.
ஜெருசலேம்:
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. மேலும் பாலஸ் தீனத்தில் உள்ள காசா முனை பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே இஸ்ரேல் வசம் உள்ள மேற்குகரை பகுதியில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலில் மதவழிபாட்டுத்தலம் அருகே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 7 இஸ்ரேலியர்கள் பலியானார்கள். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.
இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா முனைபகுதியில் இன்று வான்வழி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் மத்திய காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பின் முகாம்கள் மீது குண்டுகளை வீசின.
இந்நிலையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் போராளிகள் அமைப்பினர் ராக்கெட்டுகளை ஏவினர். சில ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் வழிமறித்து அழித்தது. தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
இஸ்ரேலில் மத வழிபாட்டு தலம் அருகே நடந்த துப்பாக்கி சூட்டுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தான் காசா முனை பகுதியில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதட்டம் தொடர்கிறது.
- காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
- இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் குண்டுகள் மற்றும் 25 ஜெட் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
டமாஸ்கஸ்:
இஸ்ரேல்-காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இடையே போரில் லெபானாவில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் சிரியாவில் வடக்கு நகரமான அலெப்போவில் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் வான்விழத் தாக்குதல் நடத்தியது. சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டதில் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் 5 பேர் உள்பட 38 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து சிரியாவின் பாதுகாப்பு அமைச்சர் கூறும் போது, அலெப்போ மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவித்தார்.
சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் ஈரானில் புரட்சிகர காவல்படை மீது இஸ்ரேல் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானும் அதன் ஆதரவு இயக்கங்களும் சிரியா முழுவதும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. காசா போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு 2 ஆயிரம் குண்டுகள் மற்றும் 25 ஜெட் விமானங்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் ஆயுத உதவிகளையும் வழங்குகிறது.
- பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
- வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
ஜெனின்:
பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் படையினர் கடந்த 7 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்கள் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை நகரமான ஜெனினில் உள்ள ஒரு கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது.
மேலும் அந்த வீட்டை சுற்றி வளைத்த இஸ்ரேல் ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
- 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர்.
அங்காரா:
துருக்கி தலைநகர் அங்காராவில் அரசுக்கு சொந்தமான ராணுவ மற்றும் வான்வெளி தொழில்நுட்ப தொழிற்சாலையில் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த ஒரு ஆண், ஒரு பெண் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் பலியானார்கள். 14 பேர் காயம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய 2 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்படும் குர்திஷ் படைகள் நடத்தியதாக துருக்கி தெரிவித்தது.
இந்த நிலையில் ஈராக், சிரியாவில் குர்திஷ் போராளிகள் படைகள் மீது துருக்கி பதிலடி தாக்குதலை நடத்தியது. வடக்கு ஈராக் மற்றும் வடக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் முகாம்களை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியது. இதில் குர்திஷ் படையினரின் 32 முகாம்கள் அழிக்கப்பட்டு உள்ளதாகவும், குர்திஷ் படையை சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தாக்குதல் குறித்த விவரங்களை துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடவில்லை. ஆனால் குர்திஷ் இலக்குகள் எதிர் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.
- ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நீடிப்பு.
- சிரியா, ஈராக், ஈரான் ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு சரியான பாடம் புகட்டுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது. ஆனால் உடனடியாக தாக்குதல் ஏதும் நடத்தவில்லை. கடந்த 1-ந்தேதி திடீரென சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் அனைத்து ஏவுகணைகளையும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தால் தடுத்து முறியடித்தது.
அதில் இருந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 25 நாட்கள் கழித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதனால் ஈரான் எப்போது வேண்டுமென்றாலும் பதிலடி தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் போர் சூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரான், ஈரான் மற்றும் சிரியா ஆகிய மூன்று நாடுகள் உடனடியாக தங்களது வான் எல்லைகளை மூடியுள்ளது. விமான சேவையை ரத்து செய்துள்ளது.
ஆனால் ஈரான் விரைவில் விமான சேவையை தொடங்குவோம் எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஈரான் ஒத்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில் ஈரான் வான் எல்லையில் சுதந்திரமாக பறக்கும் வகையில் வான் எல்லைகள் திறக்கப்படடுள்ளன இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட குளோபன் ஹைட்ஸ் பகுதியில் இருந்தும், லெபனானில் இருந்து தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது வான் பாதுகாப்பை ஏற்படுத்தும் தேவையை அதிரிக்க வைத்துள்ளது என சிரியா தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள ஷியா மற்றும் அரசியல் குழுக்கள் ஈரான் ஆதரவுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
- துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.
- மூன்று கட்டங்களாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து 8இன்று ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. துல்லியமாக ஈரான் நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல்களை சில மணிநேரங்களிலேயே நடத்தி முடித்துள்ளது இஸ்ரேல்.

இதற்காக 100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வானுக்குள் வந்துள்ளன. ஈரான் அணுசக்தி நிலையங்களுக்கும் எண்ணெய் கிணறுகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் துல்லியமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மூன்று கட்டங்களாக நடந்த இந்த தாக்குதலில் முதற்கட்டமாக ஈரான் பாதுகாப்பு அமைப்பிகள் தாக்கப்பட்டன. இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தாக்குதலில் ஈரானின் மிசைல்கள் மற்றும் டிரோன்கள் உள்ள தளவாடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் உள்ள துல்லியத்தன்மை இதை இஸ்ரேல் வெகு காலமாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது புலனாகிறது. இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் சிரியா, ஈராக் என மற்ற நாடுகள் உள்ளதால் மிகவும் தொலைவில் இருக்கும் ஈரானை ஏவுகணை மூலம் தாக்கினால் அணுசக்தி நிலையங்கள் மீது ஏவுகணைகள் விழலாம். அது சர்வதேச சிக்கலில் முடியும். எனவே பைட்டர் பிளேன்களை 2000 கிலோமீட்டர் அனுப்பி மட்டுமே இந்த தாக்குதலை செயல்படுத்த முடியும் என்று இஸ்ரேல் யோசித்து இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கிறது.
கடந்த 25 நாட்களாக வானிலை மோசமாக இருந்ததால் பைட்டர் பிளேன்கள் குறிவைப்பதில் சிரமம் இருந்ததால் தற்போது இத்தனை நாட்கள் தள்ளி இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனாலும் இந்த தாக்குதலை ஈரான் திறம்பட சமாளித்துள்ளது. இந்த தாக்குதல்களில் 2 ஈரானிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த தாக்குதல்களால் தங்களுக்கு அதிக பாதிப்பு இல்லை எனவும் இஸ்ரேலுக்கு தங்களின் எதிர் தாக்குதலால் பாதிப்பு எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்து ஈரான் என்ன செய்யும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தினால் ஈரான் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அழுத்தத்தால் ஈரான் உடனே தாக்குதல் நடத்தப் பார்க்காது என்றே ஈரான் அதிகார வட்டாரங்களில் இருந்து செய்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. ஆனாலும் மத்திய கிழக்கில் போர் உருவாகும் பதற்றம் முன்னெப்போதையும் விட தற்போது அதிகரித்துள்ளது.
- வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள குடியிருப்பு கட்டடம் தாக்கப்பட்டுள்ளது.
- இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது
லெபனான் தலைநகர் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகளில் இன்று(நவ. 17) இஸ்ரேல் தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குடியிருப்பு கட்டடங்களில் தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தில் வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 72 பேர் உயிரிழந்துள்ளதாக காசா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வடக்கு இஸ்ரேலில் செசாரியா [Caesarea] பகுதியில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் இல்லத்தின் மீது நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது. இதில் வீட்டின் தோட்டத் பகுதி தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியானது.
முன்னதாக கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நேதன்யாகுவின் வீட்டைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது 2 வது தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா குடியிருப்பு கட்டடம் மீது தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 3,452 பேரும், காசாவில் இதுவரை 43,846 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.
- இந்த வான்வழி தாக்குதலில் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் பல்வேறு கிளர்ச்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானி தலிபான் என்ற கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தங்கள் நாட்டின்மீது பயங்கரவாத தாக்குதல் நடத்துவதாகவும், இது பயங்கரவாத அமைப்பு என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இந்த அமைப்பைக் குறிவைத்து அவ்வப்போது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவருகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள 7 கிராமங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 15 பேர் உயிரிழந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் அனைவரும் பொதுமக்கள் என்றும், இதில் பெண்கள், குழந்தைகளே அதிகம் என்றும் தகவல் வெளியானது.
இந்த தாக்குதலை அடுத்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.






