என் மலர்
நீங்கள் தேடியது "ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி சுட்டுக் கொலை"
- ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் பயங்கரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.
பஹாவல்பூரில் இந்தியத் தாக்குதல்களில் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அழிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவுஃப் அசார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
IC-814 விமான கடத்தல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவன் அப்துல் ரவுஃப் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடுதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். #PulwamaEncounter
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் உள்ள அவந்திபுரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர சண்டை நடைபெற்றது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். #PulwamaEncounter






