என் மலர்
செய்திகள்

புல்வாமா தாக்குதல்- உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி
பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பத்துக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. #IshaFoundation #PulwamaAttack
சென்னை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த அவர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து, உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வகையில், உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்ப நலனுக்காக ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும், குறிப்பாக, பல்வேறு படை பிரிவுகளில் உள்ள வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சத்குருவால் வடிவகைப்பட்ட சிறப்பு யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தேசத்தை பாதுகாக்கும் பணியில் தைரியம் மற்றும் தியாக உணர்வுடன் ஈடுபட்டு வரும் இளம் வீரர், வீராங்கணைகள் குறித்து சத்குரு கூறும்போது, “நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். #IshaFoundation #PulwamaAttack
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த 14-ம் தேதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த அவர்களின் குடும்பத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து, உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வகையில், உயிர் தியாகம் செய்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்ப நலனுக்காக ஈஷா அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளது.
இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களின் நலனுக்காக ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து செயலாற்றி வருவதாகவும், குறிப்பாக, பல்வேறு படை பிரிவுகளில் உள்ள வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு சத்குருவால் வடிவகைப்பட்ட சிறப்பு யோகா பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
தேசத்தை பாதுகாக்கும் பணியில் தைரியம் மற்றும் தியாக உணர்வுடன் ஈடுபட்டு வரும் இளம் வீரர், வீராங்கணைகள் குறித்து சத்குரு கூறும்போது, “நம்முடைய அனைத்து செயல்கள் மற்றும் சாதனைகளுக்கு, தைரியமிக்க நம் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் சேவையே அடித்தளமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார். #IshaFoundation #PulwamaAttack
Next Story






