என் மலர்
செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி
தெற்கு காஷ்மீரில் உள்ள ரெஷிபோரா பகுதியில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். #JammuKashmir #MilitantsAttack
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம், ரெஷிபோரா பகுதியில் வசித்து வந்தவர் மோஷின் வானி. இன்று தன்து வீட்டின் அருகே மோஷின் வானி நின்று கொண்டிருந்தார். அப்போது, துப்பாக்கிகளுடன் அங்கு வந்த பயங்கரவாதிகள் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MilitantsAttack
Next Story






