என் மலர்
சிக்கிம்
- முதலமைச்சர் கலந்துகொண்ட இசைப்போட்டியின் இறுதிப்போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.
- முதலமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரங்போ மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பிரேம்சிங் தமாங்கிற்கு மூக்கில் திடீரென ரத்த கசிவு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. முதல்வர் கலந்துகொண்ட இசைப்போட்டியின் இறுதிப்போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்து சிகிச்சைக்காக கேங்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆதித்யா கூறுகையில்,
மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப்பிறகு அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். அவருக்கு மூக்கில் ரத்தப்போக்கு ஏற்பட்ட வரலாறு இருந்தாலும், சாத்தியமான அபாயங்களைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதல்வரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
மேலும் சிக்கல்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.
- இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
சிக்கிம் மாநிலத்தில் வேலைக்குச் செல்லாத குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.40,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பிரேம் சிங் தமங் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்திற்காக ரூ.128 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக 32,000 குடும்பத் தலைவிகளுக்கு முதல் தவணையாக ரூ.20,000 வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற அந்த பெண்கள் வேலைக்குச் செல்லாதவர்களாகவும், குழந்தையைப் பெற்றிருப்பதும் அவசியமாகும்.
- சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
- லாச்சென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர்.
காங்டோக்:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. டீஸ்டா நதி நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங்கில் நிலச்சரிவு காரணமாக பல சாலைகள் மூடப்பட்டன.
இதற்கிடையே, சிக்கிமின் வடக்கே லாச்சென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் 30க்கும் மேற்பட்டோரை அங்கிருந்து பத்திரமாக மீட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
- மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் கனமழையால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சிக்கிமின் சத்தானில் உள்ள ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காணாமல் போயுள்ளனர்.
பலத்த மழைக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
உடனடி மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சிக்கிமில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன.
டீஸ்டா நதி நீர் அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு சிக்கிமில் உள்ள தீங் மற்றும் சுங்தாங்கில் நிலச்சரிவுகள் காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கிடையில் அசாமில் உள்ள பல முக்கிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடுவதால், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மக்கள் வெள்ளத்தை எதிர்கொள்கின்றனர்.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
- சிக்கிம் மாநிலத்தில் இடைவிடாத கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு.
- முக்கிய சாலை தடைபட்டதால் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு.
வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கின்றன.
குறிப்பாக சிக்கிம் மாநிலத்தில பெய்யும் இடைவிடாத மழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முக்கிய சாலை தடைப்பட்டதால் 500-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளனர்.
இதற்கிடையில் மங்கன் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 11 பேருடன் சென்ற சுற்றுலா வாகனம் டீஸ்ட்லா ஆற்றில் மூழ்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயம் அடைந்தனர். 8 சுற்றுலாப் பயணிகள் மாயமானார்கள். கனமழையால் அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் வடக்கு சிக்கிம் பகுதிகளுக்கு சுற்றலாப் பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- வடக்கு சிக்கிமின் தீங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- சாலைகள் மட்டும் வீடுகளிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், அசாம், மிசோரம் ஆகியவற்றில் கனமழை பெய்து வருகிறது. சிக்கிமில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
வடக்கு சிக்கிமின் தீங் மற்றும் சுங்தாங் பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு கணிசமான அளவு பொருட்சேதங்கள் ஏற்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. கனமழை காரணமாக டீஸ்டா அணையின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், தலைநகர் கௌஹாத்தி உட்பட அசாமின் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததால் நேற்று பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சாலைகள் மட்டும் வீடுகளிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழையானது பெய்து வருகிறது.
- பஹல்காம் சம்பவம் இந்தியாவின் ஆன்மா மற்றும் ஒற்றுமையின் மீதான தாக்குதலாகும்.
- பாகிஸ்தானில் பயங்கரவாத உள் கட்டமைப்பு மற்றும் பல விமான தளங்களை அழித்துள்ளோம்.
பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.69,420 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டது.
சிக்கிம் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் இன்று காலை கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார்.
இதற்காக சிக்கிமின் காங் டாக்கில் மிகப்பெரிய அளவில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 11 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சி ஒரு மணிநேரம் முன்னதாக காலை 10 மணிக்கே தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் சிக்கிம் பயணம் திடீரென்று ரத்து செய்யப்படுவதாகவும், மக்கள் மத்தியில் மேற்கு வங்காளத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் உரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால், சாலைகளில் கூடியிருந்த சிக்கிம் மக்களும் பா.ஜ.க. தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர். மோசமான வானிலை காரணமாக மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
சிக்கிம் 50 ஆண்டுகள் விழாவில் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். நம்சி மாவட்டத்தில் ரூ. 750 கோடி மதிப்பில் 500 படுக்கையுடன் கட்டப்பட்டுள்ள மாவட்ட அரசு மருத்துவமனை, பயணிகள் ரோப் வசதி, வாஜ்பாய் சிலை உள்ளிட்டவற்றை மோடி திறந்து வைத்தார்.
காணொலி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
சிக்கிம் மாநிலம் உதயமான 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்க விரும்பினேன். ஆனால் வானிலை அங்கு வரவிடாமல் செய்து விட்டது. மாநிலம் உதயமாகி 50-வது ஆண்டுகள் ஆவதையொட்டி சிக்கிம் மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிக்கிம் வளமிக்க மாநிலமாகும். இயற்கை பாதுகாப்பில் முன்மாதிரியாக உள்ளது. இந்தியாவை விளையாட்டு வல்லரசாக மாற்றுவதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. சிக்கிம் சாகச விளையாட்டுகளின் மையமாக மாறும் ஆற்றலை கொண்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆபரேசன் சிந்தூர் மூலம் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் பயங்கரவாதிகளின் செயல் மனித குலத்தின் மீதான தாக்குதல். தற்போது பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டுள்ளோம்.
பஹல்காம் சம்பவம் இந்தியாவின் ஆன்மா மற்றும் ஒற்றுமையின் மீதான தாக்குதலாகும். இதற்கு பொருத்தமான பதிலடி கொடுத்துள்ளோம். பாகிஸ்தானில் பயங்கரவாத உள் கட்டமைப்பு மற்றும் பல விமான தளங்களை அழித்துள்ளோம்.
இவ்வாறு மோடி பேசினார்.
பிரதமர் மோடி பிற்பகலில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அலிப்பூர்துவார் மற்றும் கூச்பெஹர் மாவ்டடங்களில் நகர எரிவாயு வினியோக திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.1,010 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டம் இதுவாகும்.
இன்று மாலை மோடி அங்கிருந்து பீகாருக்கு செல்கிறார். மாலை 5.45 மணியளவில் பாட்னா விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். ரூ.1,200 கோடி செலவில் இது கட்டப்பட்டுள்ளது.
பிஹ்தா விமான நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.1,410 கோடி மதிப்புள்ள திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். பாட்னாவில் உள்ள ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி.க்கு அருகில் பிஹ்தா பகுதி உள்ளதால் கல்வியியல் மையமாக திகழ்கிறது.
நாளை காலை 11 மணியளவில் பீகார் மாநிலம் கரகாட்டில் ரூ.48,520 கோடிக்கும் அதிக மதிப்பு உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
பல்வேறு 4 வழிச்சாலைகளையும் திறந்து வைக்கிறார். ரூ.1,330 கோடி மதிப்புள்ள கோன்நகர்-முகமது கஞ்ச் இடையேயான 3-வது ரெயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
முன்னதாக பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்துகிறார். பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார். பீகார் மாநிலத்தில் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
பீகாரில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு பிரதமர் மோடி உத்தரபிரதேசம் செல்கிறார். கான்பூரில் ரூ.20,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.
- சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சுங்டாங்.
- அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் நேற்று பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நிலச்சரிவைத் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிக்கிமின் தலைநகரான காங்டாக்கிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுங்டாங்கில் சுமார் 200 சுற்றுலா வாகனங்கள் சிக்கித் தவிப்பதாகவும், பயணிகள் அங்குள்ள ஒரு குருத்வாராவில் தங்கியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
லாச்சென்-சுங்தாங் சாலையில் முன்ஷிடாங்கிலும், லாச்சுங்-சுங்தாங் சாலையில் லெமா பாப் பகுதியிலும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மறு அறிவிப்பு வரும் வரை வடக்கு சிக்கிமிற்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று (ஏப்ரல் 25), சுற்றுலாப் பயணிகள் இந்தப் பகுதியைப் பார்வையிட வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் ரத்து செய்தனர். லாச்சுங் மற்றும் லாச்சென் நகரங்களுக்கான போக்குவரத்து அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- சிறுவனின் செயலை வீடியோ எடுத்த அவர்கள் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர்.
- வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் அன்பான செயலை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் பல்வேறு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன. அங்குள்ள மலைகள், காடுகள் போன்ற இயற்கை சூழலை காண சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர். ஜூலுக் நகருக்கு சுற்றுலா பயணிகள் சிலர் சென்றிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சிறுவன் தனது தம்பியின் கையை பிடித்துக்கொண்டு சென்றான். சுற்றுலா பயணிகளை பார்த்த அந்த சிறுவன் அவர்களிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என தனது மழலைக்குரலில் கேட்டான். அதற்கு அவர்கள் ஐதராபாத்தில் இருந்து வருவதாக கூறினர்.
இதனையடுத்து வாலிபர்கள் அந்த சிறுவனிடம் ஊரை கேட்டனர். அதற்கு தான் இதே பகுதியைச் சேர்ந்தவன்தான் என கூறிவிட்டுச் சென்றான். சிறிதுதூரம் நடந்து சென்ற அவன் உங்களுக்கு மிட்டாய் வேண்டுமா? என கேட்டான். அப்போது அவர்களின் பதிலுக்காக காத்திராமல் தனது கையில் இருந்த இனிப்புகளை அவர்களுக்கு வழங்கி விட்டு பின்னர் தனது தம்பியுடன் சென்றான். சிறுவனின் இந்த செயலை வீடியோ எடுத்த அவர்கள் அதனை சமூகவலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுவனின் அன்பான செயலை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
- ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.
மேற்கு வங்காள மாநிலம் பெடோங்கில் இருந்து சிக்கிமில் உள்ள ஜூலுக் நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிக்கிம் மாநிலம் பாக்யோங் மாவட்டத்தில் உள்ள சில்க் ரோட்டில் இந்த விபத்து நடந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த பீட்டர், அரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபேதார் கே தங்கபாண்டி ஆகியோர் அடங்குவர் என்று இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து ராணுவ வீரர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள பினாகுரி பகுதியில் பணியில் இருந்தவர்கள் ஆவர்.
- டீஸ்டா ஸ்டேஜ் 5 அணை மின் நிலையம் 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறனுடையது.
- நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர் மின் நிலையம் பயங்கர நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது .
510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது.
அதனால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இந்த டீஸ்டா அணையின் சிலபகுதிகள் அடித்து செல்லப்பட்டதால், அணை செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.
- சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
- நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. சிக்கிமின் சோராங் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து வீடுகள் லேசாக அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித் தகவல் எதுவும் வெளியாகவில்லை.






