search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு"

    • மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
    • பேரணியானது தலைஞாயிறு பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக இளநிலை உதவியாளர் குமார் அனை வரையும் வரவேற்றார்.

    ஊர்வலமானது தலைஞாயிறு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி சின்ன கடற்கரை, மேலத்தெரு அக்ரஹரம், பஸ் நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலகம் சென்றடைந்தது.

    இதில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    இதில் ஏராளமான பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சீர்காழி நகராட்சியில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராஜசேகரன், முபாரக்அலி, ரம்யா, ஜெயந்தி, வள்ளி, ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செ ல்வம் பங்கேற்று தூய்மைபணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு கடையாக நெகிழி ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மஞ்சல் பைகளை எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார்.

    கைவிளா ஞ்சேரி பிரதானசாலை முதல் கச்சேரி சாலை வரையில் ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுசேகரி க்கும் பணி, நீர்நிலைகளை சீரமைக்கும் பணி,பிளா ஸ்டிக் நெகிழிபொரு ட்கள் தனியே சேகரித்து பொதும க்களுக்குவிழிப்பு ணர்வு ஏற்படுத்துவதுஆகிய பணிகளை தூய்மைப்பணி முகாமில் சுமார் 90 க்கும்மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்று மேற்கொ ண்டனர்.

    இதில் நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், திமுக ஒன்றிய பொறுப்பா ளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜேயே ஸ்வரன், பந்தல். முத்து, ஜெ.கே.செந்தில், இரா.தனராஜ், பாரூக், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பேளூர் பேரூராட்சியில் தூய்மை மக்கள் இயக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பேளூர் பேரூராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்   நடைபெற்றது. 

    இந்த முகாமை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி  பேளூர் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி  தொடங்கி வைத்தார். 

    துணைத் தலைவர் பேபி, செயல் அலுவலர் ராமு மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தீவிர தூய்மைப்பணி மேற்கொண்டு குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்தினர்.
    தாரமங்கலத்தில் நகராட்சி தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சியில் நகரத்தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு கூட்டமும், அதனை தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் மங்கையர்கரசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகரை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்வது,  தூய்மை பணிக்காக நேரம் ஒதுக்குவது, பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது, குப்பையை வீட்டிலேயே தரம் பிரித்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. 

    பின்னர் பதாகை ஏந்தி விழிப்புணர் ஊர்வலம் நடத்தப்பட்டு பேரூந்துநிலையம் மற்றும் அதனை சுற்றிய பொது இடங்களை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர் .இந்தநிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் நகராட்சி பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    திடக்கழிவு விழிப்புணர்வு பேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார்.
    மானாமதுரை

    சிவகங்கை  மாவட்டம்  மானாமதுரை  சட்டமன்ற  தொகுதியில் உள்ள இளை யான்குடி  பேரூராட்சியில்  உள்ள தெருக்களில் வீடு, வீடாக திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்க  குடியிருப்பு தாரர்களுக்கு   விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

    பேரூராட்சிதலைவர் செய்யதுஜமிமா தலைமை யில் மன்ற  உறுப்பினர்கள்,  செயல் அலுவலர் கோபிநாத்  மற்றும் சுகாதர  ஆய்வாளர்  அலுவலக பணியாளர்கள்   ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு   பரிசுகள் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.  மேலும் பிளாஸ்டிக்கை ஒழித்து  முதல்வரின் மஞ்சப்பை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து  வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர முயற்சி செய்வோம் என்று விழிப்புணர்வு பிரசாரம்  செய்யப்பட்டது.

    தொடர்ந்து மக்களி டையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்தி  பிளாஸ்டிக்கை ஒழித்து மண்வளத்தை  பாதுகாக்க வேண்டும் எனபேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார். 
    நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

    இப்போட்டியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் மற்றும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் திரளாக பங்கேற்றனர். 

    இந்த மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
    திருப்பூர் வடக்கு தொகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை 5,83,659 ஆகும்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பெரும்பாலான பகுதிகளில் ஓட்டுப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாகவே இருந்தது. மக்கள் தொகை எண்ணிக்கையில் வாக்காளர் எண்ணிக்கை என்பது சராசரியாக 71 முதல் 72 சதவீதம் என்பது தேர்தல் கமிஷனின் கணக்கீடு.

    கடந்த 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இது 75.12 சதவீதம் என்ற அளவில் இருந்தது.பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்வதில் நிலவிய சிக்கல்கள் காரணமாக பல தொகுதிகளிலும் இந்த கணக்கீட்டுக்கு ஏற்ப ஓட்டுப் பதிவு சதவீதம் இல்லை.

    பல தொகுதிகளில் இந்த கணக்கீடு 80 சதவீதத்துக்கு மேல் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளிலும், 65 சதவீதத்துக்கு குறைவாக ஓட்டுப் பதிவான தொகுதிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது

    மக்கள் தொகையில் 80 சதவீதத்துக்கும் மேல் வாக்காளர்கள் உள்ள 39 சட்டசபை தொகுதிகள், 65 சதவீதத்துக்கும் குறைவாக ஓட்டுப்பதிவு நடந்த 31 தொகுதிகளில் உரிய கலெக்டர் வாயிலாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிறப்பு முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை 5,83,659 ஆகும். இதில் வாக்காளர் எண்ணிக்கை 3,79,113. இதில் ஓட்டுப்பதிவு 62.44 சதவீதம். அதே போல் திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் தொகை 4,50,490. இதில் வாக்காளர் எண்ணிக்கை 2,76,473. ஓட்டுப் பதிவு 62.75 சதவீதம்.

    வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, விடுபட்ட வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், அடையாள அட்டை பெறுதல், உரிய வாக்காளர் பெயர் நீக்கம் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் ஆகியவை  சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் இயக்குனர் கலாவதி தலைமையில் நடந்தது. 

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் விஜய்கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் பங்கேற்று இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்கள் கூறினார்கள். 

    இதில் விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய  உதவிக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. இதில் இணை செயலர் மணிகண்டன், விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×