என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் குறித்து விழிப்புணர்வு
Byமாலை மலர்26 March 2019 6:12 PM GMT (Updated: 26 March 2019 6:12 PM GMT)
அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அரியலூர்:
பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமங்கள் தோறும் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் தேர்தல் தொடர்பான குறும்படங்கள், திரையிடப்பட்டு வருகிறது. மேலும், துண்டு பிரசுரங்கள். ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைக்குழுவினர் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் எந்திரம் மூலம் செயல் விளக்கம் காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிக்குழுவின் செயலாளருமான சரவணன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தல் 2019-ஐ முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராமங்கள் தோறும் அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலம் தேர்தல் தொடர்பான குறும்படங்கள், திரையிடப்பட்டு வருகிறது. மேலும், துண்டு பிரசுரங்கள். ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாட்டுப்புற கலைக்குழுவினர் மூலம் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து வழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் வாக்களிப்பது குறித்தும், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என உறுதி செய்யும் எந்திரம் மூலம் செயல் விளக்கம் காட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்கு முதன்மை மாவட்ட நீதிபதி எம்.டி.சுமதி தலைமை தாங்கினார். இதில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிக்குழுவின் செயலாளருமான சரவணன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X