search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசாரம்
    X
    பிரசாரம்

    திடக்கழிவு விழிப்புணர்வு பிரசாரம்

    திடக்கழிவு விழிப்புணர்வு பேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார்.
    மானாமதுரை

    சிவகங்கை  மாவட்டம்  மானாமதுரை  சட்டமன்ற  தொகுதியில் உள்ள இளை யான்குடி  பேரூராட்சியில்  உள்ள தெருக்களில் வீடு, வீடாக திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்க  குடியிருப்பு தாரர்களுக்கு   விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

    பேரூராட்சிதலைவர் செய்யதுஜமிமா தலைமை யில் மன்ற  உறுப்பினர்கள்,  செயல் அலுவலர் கோபிநாத்  மற்றும் சுகாதர  ஆய்வாளர்  அலுவலக பணியாளர்கள்   ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு   பரிசுகள் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.  மேலும் பிளாஸ்டிக்கை ஒழித்து  முதல்வரின் மஞ்சப்பை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து  வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர முயற்சி செய்வோம் என்று விழிப்புணர்வு பிரசாரம்  செய்யப்பட்டது.

    தொடர்ந்து மக்களி டையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்தி  பிளாஸ்டிக்கை ஒழித்து மண்வளத்தை  பாதுகாக்க வேண்டும் எனபேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார். 
    Next Story
    ×