search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
    X

    விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்

    • பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    • குழந்தை திருமண தடுப்பு சட்டம், குற்றம் செய்பவர்களுக்கான தண்டனைகள், குழந்தை திருமணம் குறித்து தகவல் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சி, திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்தும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார்.

    ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராணி, தலைமையாசிரியர் பாலு, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்எஸ்ஐ. முருகவேல், குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், மாவட்ட குழந்தைகள் அலகு உறுப்பினர் வெங்கடாஜலபதி, சைல்டுலைன் பணியாளர் செந்தில்குமார் ஆகியோர் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், குற்றம் செய்பவர்களுக்கான தண்டனைகள், குழந்தைத் திருமணம் குறித்து தகவல் அளிக்க வேண்டிய இலவச தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

    இதில் கிராம நிர்வாக அலுவலர் முகம்மது யூசுப், கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ரவிச்சந்திரன், சேது முருகானந்தம்,ஊராட்சி துணைத்தலைவர் பாக்கியராஜ் செயலர் புவனேஸ்வரன் ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி ராமகிருஷ்ணன், அங்கன்வாடி ஆசிரியைகள், மகளிர் குழு பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×