search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free"

    • இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.
    • தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    மதுரை:

    இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.

    ஐ.பி.எல். கோப்பையை இதுவரை சென்னை, மும்பை இந்தியன்ஸ் அணிகளும் தலா 5 முறை வென்றுள்ளன. கடந்தாண்டு நடந்த இறுதிப் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டோனி தலைமையில் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று தமிழக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.

    இதையொட்டி நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். ரசிகர் பூங்கா என்ற பெயரில் பெரிய திரைகளை அமைத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    அதன்படி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டிகளை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

    நவீன ஒலி, ஒளி அமைப்பில் ராட்சத திரையின் மூலம் போட்டிகளை ரசிகர்கள் காணலாம். இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டிகளை அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 22-ந் தேதி மாலை தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் போட்டி நேரடியாக இந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.

    இந்த ஆண்டு 27 நகரங்களில் இது போன்ற பெரிய திரை அமைத்து பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். போட்டி நடைபெறும் அன்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கலாம்.

    இரவு 10 மணிக்கு மேல் கிரிக்கெட் போட்டியின் சத்தம் நிறுத்தப்பட்டு ஒளிபரப்பப்படும். மேலும் ரசிகர்களின் வசதிக்காக அருகிலேயே உணவு மற்றும் பானங்கள் ஸ்டால்கள் அமைக்கப் படும். இந்தாண்டு மார்ச் 22-ந் தேதி முதல் இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளையும் ரேஸே் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் திருமணத்திற்கான அனைத்து செலவுகளும் கோவிலில் சார்பில் செய்யப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    விழுப்புரம்:

    வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமண நடத்தப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கோவில்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி செஞ்சியை அருகே சிங்கவரத்தில் உள்ள ரங்கநாதர் கோவிலில் வறுமை கோட்டுக்கு கீழுள்ள கோனை கிராமத்தை சேர்ந்த செல்வகணபதி-தேவகி ஆகியோர் திருமணம் நடைபெற்றது.

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம் தலைமையில் திருமணத்திற்கான அனைத்து செலவுகளும் கோவிலில் சார்பில் செய்யப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் மணமக்களுக்கு ரூ.50ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை உதவி ஆணையர் ஜீவானந்தம் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் இளங்கீர்த்தி செய்திருந்தார்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் திருப்பூர் வட்டார அளவிலான தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

    மங்கலம்,அக்.2-

    திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் திருப்பூர் வட்டார அளவிலான தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமானது சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.முகாமிற்கு திருப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். நித்யா முருகேசன் தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி இலவச சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வகித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திமுக., கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன், திருப்பூர் ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, பெருமாநல்லூர் வட்டார மேற்பார்வையாளர் வரதராசன், மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.சங்கவி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் முகமது இத்ரீஸ், ராதாநந்தகுமார், பால்ராஜ் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவ குழுவினர் இருதய நோய் , சர்க்கரை நோய், தோல் நோய், காசநோய், கண் நோய்,பொது மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.

    • செந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா
    • கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.

    செந்துறை, 

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து அமைச்சர் பேசும் போது,

    கருணாநிதி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    அந்த வகையில் தற்போ தைய முதலமைச்சர் பெண் கள் கல்லூரியில் படிக்கும் பொழுது மாதம் 1000 வழங்கப்படும் என்ற சிற ப்பானத் திட்டத்தை செய ல்படுத்தி உள்ளார். பெண்க ளின் முன்னேற்றமே குடும்ப த்தின் முன்னேற்றம். குடும்ப த்தின் முன்னேற்றம் சமுதா யம் மற்றும் நாட்டின் முன் னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இதுபோன்றத் திட்டங்கள் செயல்படுத்த ப்படுவதுடன், தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்ப ட்டு வருகிறது.

    இதன் பயனாக அனைத்துத்தரப்பு பெண்களும் மிகுந்த பயன்பெறுவதுடன் தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியாக உள்ளது.

    இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டத்தினை செயல்படுத்தியது நம்மு டைய முதலமைச்சர்தான் அதனைப் பின்பற்றியே தற்போது பிற மாநிலங்கள் இதுபோன்ற சிறப்புத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

    மேலும், இச்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி சத்தான உணவுகளை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதுடன் கல்வியே அழியாத செல்வம் என்பதை உணர்ந்து தங்களது குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க வைத்து, சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    • தமிழ்நாடு வனத்துறை சார்பாக தாராபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஊர்வலம் நடைபெற்றது.
    • அனைவரும் வாங்கி மரக்கன்றுகள் நட்டு மழை பெறுவோம் என்றார்.

    தாராபுரம்

    தமிழ்நாடு வனத்துறை சார்பாக தாராபுரத்தில் மரக்கன்றுகள் நடும் விழா ஊர்வலம் நடைபெற்றது. இதில் வனத்துறை வனச்சரகர் சுப்புராஜ் ,வனவர் சேக்உமர், உதவி இயக்குனர் கணேஷ் ராம், துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா, கல்லூரி முதல்வர் விக்டர் லூயிஸ் மற்றும் அலுவலர்கள், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் தாராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு அண்ணா நகர், சி .எஸ். ஐ. நகர் வழியாக கொட்டாம்புளி பாளையம் ரோட்டில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வரை நடைபெற்றது.

    விழாவில் வனச்சரகர் கூறும் போது, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பூர் வனவியல் விரிவாக்க சரகத்தின் மூலம் விவசாயிகள், தொழிற்சாலைகள், தன்னார்வலர்கள், பூங்காக்கள் ,அரசு அலுவலர்கள் ,தனியார் நிலங்கள், மாநகராட்சி ,நகராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது .

    இதனை பயன்படுத்தி அனைவரும் வாங்கி மரக்கன்றுகள் நட்டு மழை பெறுவோம் என்றார்.  

    • மழையூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. முத்துராஜா மாணவர்களுக்கு வழங்கினார்

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள மழையூர் அரசு மேல்நி லைபள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் டாக்டர். முத்துராஜா இரண்டு நாள் பயிற்சி பெற்ற ஜூனியர் ரெட்கிராஸ் சங்க மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். மேலும் பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் தவ.பாஞ்சாலன் , ராஜேந்திரன், சந்திரசேகர், பிரபுகாந்தி, சேகர், கணேசன், மணிகண்டன், மதி, ரெங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
    • மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    சென்னை:

    ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ.25 -க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.25-க்கும் விற்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்களுக்கு பாதி விலையில் இந்த பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

    தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து, ரேசன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.

    தற்போது மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.

    இது வரஇருக்கிற தேர்தலில் எதிரொலிக்க கூடும் என்பதால் மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    இதற்காக தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது.

    இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் மற்றும் தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    காமராஜரின் 121 வது பிறந்தநாளையொட்டி விஜய் மக்கள் இயக்கத்தின் திருப்பூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில்அனுப்பர்பாளையத்தில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு இளைஞர் அணி தலைவர் சுகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வெங்கடாசலபதி மாநகராட்சி பள்ளியில் 150 மாணவ மாணவிகளுக்கும், தாயம்மாள் லே அவுட் மாநகராட்சி பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கும் பேனா பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது .

    இதில் மத்திய மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் அப்பாஸ்,மத்திய மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்,மத்திய மாவட்ட கௌரவ ஆலோசகர் லோகு ,மத்திய மாவட்ட ஆலோசகர் வசந்த் ,மாவட்ட நிர்வாகி மகேந்திரன் , மருது, தெற்கு நகர நிர்வாகிகள் ஹரிஸ் ராம்,முருகன், சரவணக்குமார், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    திருப்பூர்:

    கனரா வங்கியின் சாா்பில் நடத்தப்படும் இலவச அழகு கலைப் பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

    இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச முழு நேர அழகுக்கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு எழுதப் படிக்கத் தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின்போது காலை, மாலை வேளைகளில் தேநீா், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி முடித்த அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தொழில் தொடங்க கடன் ஆலோசனைகளும் வழங்கப்படும்.

    இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், போக்குவரத்து சிக்னல் அருகில், அவிநாசி சாலை, அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா்-641652 என்ற முகவரிக்கு நேரில் வரவும்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
    • தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

    தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வில் 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

    மேலும், 2022-ல், சீருடைப்பணியாளர்கள் எஸ்.ஐ., தேர்வில் 5 பேர், போலீஸ் தேர்வில் 17 பேர் என, மொத்தம் 22 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்து வகுப்பை தொடங்கி வைத்தார்.

    இப்பயிற்சி வகுப்பில், மாவட்டம் முழுவதும் இருந்து, 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்திருந்தனர். முதல் நாளான நேற்று 73 பேர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:

    டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கி உள்ளது. 6 மாதத்துக்கு தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பு நடைபெறும்.

    இந்த இலவச நேரடி பயிற்சி வகுப்பு, தினமும் காலை 10.30 முதல், மதியம் 1.30 மணி வரை நடக்கும். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    வாரம் தோறும், செவ்வாய், வெள்ளிக் கிழமை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். தினமும், பயிற்சி தாள் வழங்கப்படும். இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி பயிற்சி செய்தால், போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம் என கூறினார். 

    • பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது.

    இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர்.

    அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டி லில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.
    • இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov. என்ற இணை யதளம் மூலம் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 129 பணிக்காலியிடங்கள் கொண்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகள், 621 பணிக்காலி யிடங்கள் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov. என்ற இணை யதளம் மூலம் வருகிற 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இலவச பயிற்சி வகுப்பிற்கு புதிதாக அறிவிக்கப்பட் டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, நேரடியாக நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

    2023-ம் ஆண்டிற்கான உதவி ஆய்வாளர் தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் onlineclassnkl@gmail.com என்ற இ.மெயில் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர் மற்றும் சுயவிவரத்தினை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    ×