search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாள் தோறும் 40 லட்சம் பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்கின்றனர்
    X

    நாள் தோறும் 40 லட்சம் பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்கின்றனர்

    • செந்துறையில் சமுதாய வளைகாப்பு விழா
    • கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் 5 வகையான கலவை சாதங்களை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து அமைச்சர் பேசும் போது,

    கருணாநிதி பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

    அந்த வகையில் தற்போ தைய முதலமைச்சர் பெண் கள் கல்லூரியில் படிக்கும் பொழுது மாதம் 1000 வழங்கப்படும் என்ற சிற ப்பானத் திட்டத்தை செய ல்படுத்தி உள்ளார். பெண்க ளின் முன்னேற்றமே குடும்ப த்தின் முன்னேற்றம். குடும்ப த்தின் முன்னேற்றம் சமுதா யம் மற்றும் நாட்டின் முன் னேற்றம் என்பதை கருத்தில் கொண்டு இதுபோன்றத் திட்டங்கள் செயல்படுத்த ப்படுவதுடன், தமிழகத்தில் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்ப ட்டு வருகிறது.

    இதன் பயனாக அனைத்துத்தரப்பு பெண்களும் மிகுந்த பயன்பெறுவதுடன் தினசரி 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியாக உள்ளது.

    இந்தியாவிலேயே முதல் முறையாக இத்திட்டத்தினை செயல்படுத்தியது நம்மு டைய முதலமைச்சர்தான் அதனைப் பின்பற்றியே தற்போது பிற மாநிலங்கள் இதுபோன்ற சிறப்புத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

    மேலும், இச்சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின்படி சத்தான உணவுகளை சாப்பிட்டு நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுப்பதுடன் கல்வியே அழியாத செல்வம் என்பதை உணர்ந்து தங்களது குழந்தைகளை நல்ல முறையில் கல்வி கற்க வைத்து, சிறந்தவர்களாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    Next Story
    ×