search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணி முகாமை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
    X
    தூய்மை பணி முகாமை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி உறுதிமொழி ஏற்பு

    சீர்காழி நகராட்சியில் பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மெகா தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபாலன், துணை தலைவர் சுப்பராயன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், வேல்முருகன், ராஜசேகரன், முபாரக்அலி, ரம்யா, ஜெயந்தி, வள்ளி, ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செ ல்வம் பங்கேற்று தூய்மைபணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு கடையாக நெகிழி ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மஞ்சல் பைகளை எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார்.

    கைவிளா ஞ்சேரி பிரதானசாலை முதல் கச்சேரி சாலை வரையில் ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுசேகரி க்கும் பணி, நீர்நிலைகளை சீரமைக்கும் பணி,பிளா ஸ்டிக் நெகிழிபொரு ட்கள் தனியே சேகரித்து பொதும க்களுக்குவிழிப்பு ணர்வு ஏற்படுத்துவதுஆகிய பணிகளை தூய்மைப்பணி முகாமில் சுமார் 90 க்கும்மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்று மேற்கொ ண்டனர்.

    இதில் நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், திமுக ஒன்றிய பொறுப்பா ளர் பிரபாகரன்,மாவட்ட கவுன்சிலர் விஜேயே ஸ்வரன், பந்தல். முத்து, ஜெ.கே.செந்தில், இரா.தனராஜ், பாரூக், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×