search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhumi Pooja"

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • குடிநீர் தேக்க தொட்டி மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை ஊசுடு தொகுதிக் குட்பட்ட கோனேரிக்குப்பம், உளவாய்க்கால் மற்றும் அகரம் பகுதியில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் வலியுறுத்தி மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் நிதி உதவியுடன் ரூ. 4. 7 கோடி மதிப்பில் அதற்கான பூமி பூஜை கோனேரிகுப்பத்தில் நடந்தது.

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை யில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டி கட்டுமான பணியை பெயர் பலகையை திறந்து வைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்தத் திட்டத்தின் கீழ் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி மற்றும் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட உள்ளது.

    இதனுடன் நீர் உந்து மோட்டார் பொருத்தப்பட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு நீர் இறவை செய்யும் வகையில் செய்யப்பட்டு உள்ளது. மேலும் குடிநீரில் இரும்பு தாதுக்களை நீக்கும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய குடிநீர் விநியோக குழாய் பதிக்கும் பணிகளும் நடக்க உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் உளவாய்க்கால், கோனேரிக்குப்பம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெறு வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், ஜல்ஜீவன் திட்ட இயக்குனர் வல்லவன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வம், உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர் உட்கோட்ட உதவி பொறியாளர் பீனா ராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, ஜல்ஜீவன் திட்ட ஒருங்கிணைப் பாளர் பால முருகன், இள நிலைய பொறியாளர் கருத்தையன், பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், கோனேரிகுப்பம் தாமோதரன், அகரம் கணேசன், ஆனந்தபாஸ்கர், உளவாய்க்கால் கலையரசன், முத்தையன், முருகவேல் மற்றும் தொகுதி குடிநீர் பொறுப்பாளர் பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ. 20 லட்சம் செலவில் பூமி பூஜை செய்து இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கட்டிட ரூ. 20 லட்சம் செலவில் பூமி பூஜை செய்து இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பூமி பூஜை செய்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் மகாதேவன் பாகூர் தாசில்தார் கோபால கிருஷ்ணன் துணை தாசில்தார் விமலன் செயற் பொறியாளர் சீனு திருஞானம் உதவி பொறியாளர் பாவாடை மற்றும் மணப்பட்டு காட்டுக்குப்பம், கன்னிய கோவில், வார்கால்ஓடை, புதுநகர் பகுதியைச் சேர்ந்த ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேஷ் ஏற்பாடு
    • ஆற்றில் உயிர்பலியை தடுக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறையில் சில தினங்களுக்கு முன்பு கோவை பகுதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு சுற்றுலா வந்த 10 கல்லூரி மாணவர்களின் 5 மாணவர்கள் ஆற்றில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறந்தனர்.

    இதையடுத்து கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அப்பகுதியை பார்வையிட்டார்.

    ஆற்றில் உயிர் பலியை தடுக்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வால்பாறை முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேசன் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைத்து தருவதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி அறிவுறுத்தல் படியும், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனை படியும் நகர செயலாளர் சுதாகர் முன்னிலையில் அப்பகுதியில் தடுப்பு வேலி அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

    எஸ்டேட் மேலாளர், மற்றும் தி.மு.க. முன்னாள் நகரமன்ற தலைவர் கோழி கடை கணேஷ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.  

    • ரூ.1.17 ேகாடி மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் : 

    வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.17 ேகாடி மதிப்பில் 6 வகுப்பறைகள் கட்டுவதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருப்பூர் கூலிப்பாளையம் விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி , பள்ளியின் தலைமை ஆசிரியர் பூமாரி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர் சிவன்மலை , பள்ளி மேலாண்மை குழு தலைவர் கங்கா தேவி , பள்ளி கட்டிட வளர்ச்சி குழு தலைவர் சுப்பிரமணியம், அருண் பழனிச்சாமி, செந்தில் சுப்பிரமணியன், ஜோதி ரமேஷ் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வேலுமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் வகுப்பறை கட்டிடப்பணி ஒப்பந்ததாரர் என்ஜினீயர் சுகுமாருக்கு , விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பொன்னாடை போர்த்தினார். 

    • அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பரம நகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் வடக்குப்பட்டி பள்ளிகளில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை சூற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைத்தார். அப்போது பரமநகர் பள்ளியில் குழந்தைகள் அமைச்சரை பார்த்ததும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

    இதனை பார்த்ததும் நேராக குழந்தைகளிடம் சென்ற அமைச்சர் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுக்கு வகுப்பறை கட்டுவது யார் தெரியுமா என்று கேட்க ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் என்ற மாணவன் தனது மழலை மொழியில் மெய்யநாதன் என்று கூறினார்.

    இதை கேட்டதும் அமைச்சரும் அங்கிருந்த அதிகாரிகளும் சிரித்து மகிழ்ந்தனர். பூமி பூஜை நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி,கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி,கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், ஆலங்குடி நகர துணைச் செயலாளர் செங்கோல் , வடகாடு ஊராட்சித் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தொரவலூர் ஊராட்சி கந்தாம்பாளையம் கிராமத்தில் திருப்பூர் வடக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு யிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதனை திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சொர்ணம்மாள் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் பஸ் நிலையத்தில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது.
    • இதில் நகரசபை தலைவர் பங்கேற்றார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் டவுன் பஸ் நிலையமான பழைய பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிக்காக இடிக்கப்பட்டு மறு நிர்மாணம் செய்யப்படுகிறது. தற்பொழுது முழுவதுமாக இடிக்கப்பட்ட நிலையில் புதிய கட்டிடத்திற்கான பூமி பூஜை நடந்தது. நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் பூமிபூஜையை நடத்தி வைத்தார்.

    ஆணையாளர் பார்த்தசாரதி, துணைதலைவர் கல்பனா குழந்தைவேலு மற்றும் கவுன்சிலர்கள், பொறியாளர், இளநிலை பொறியாளர், அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவாக கட்டுமானத்தை முடிக்க வேண்டும் என்று நகரசபை தலைவர் வலியுறுத்தினார். 

    • செம்மிபாளையம் ஊராட்சி சாமிகவுண்டம்பாளையத்தில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது.
    • ஆசிரியைகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி சாமிகவுண்டம்பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இதன் கட்டடங்கள் பழுதடைந்ததை அடுத்து, ரூ.62 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி குழு தலைவர் புண்ணியமூர்த்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள்,பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தை சீரமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • தரைத்தளத்தை சீரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தரைத்தளம் மிகவும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. இதனால் பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. இந்த நிலையில் கந்தர்வகோட்டை பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிலைய தரைத்தளத்தை சீரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, அரசு ஒப்பந்தக்காரர் ராஜ்குமார், வார்டு உறுப்பினர்கள் முத்துராமன், வினோதா, சாமிநாதன், ரவி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,பூமி பூஜை நடத்தி நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
    • ஊராட்சி செயலாளர் காந்திராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில்,1வது வார்டுக்குட்பட்ட கே.பி. நகர் பகுதியில் 2 வீதிகளில் ரூ.13 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைத்து பேவர் பிளாக் சாலை அமைத்தல்,கரைப்புதூர் மெயின் வீதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல்,கரைப்புதூர் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் நல்ல தண்ணீர் சப்ளை பிரச்சனையை சரி செய்யும் பொருட்டு கரைப்புதூர் டேங்கிற்கு வடபுறம் ரூ.12 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், 2 வது வார்டு ஸ்ரீ லட்சுமிநகர் பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,பூமி பூஜை நடத்தி நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட கவுன்சிலர் கரைபுதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, மற்றும் தண்ணீர்பந்தல் நடராஜன்,கரைப்புதூர் ராமமூர்த்தி,விஸ்வநாதன், வக்கீல் பொன்னுசாமி, ஊராட்சி செயலாளர் காந்திராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இடையூறை தவிர்ப்பதற்காக அதில் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • ஊராட்சி செயலர் சிவகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி, சக்தி நகர் பகுதிகளில் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மேடு பள்ளமான மண் சாலைகள் இருந்து வருகிறது. இந்த நிலையில் இடையூறை தவிர்ப்பதற்காக அதில் ரூ.6 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. 

    இந்த நிகழ்ச்சிக்கு பொங்கலூர் ஊராட்சி தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் எஸ். குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் ,ஊராட்சி செயலர் சிவகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.
    • செங்கப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தாமணி துரைசாமி வரவேற்றார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சி லட்சுமி விநாயகர் நகரில் ஒன்றிய பொது நிதியில் இருந்து செங்கப்பள்ளி காடபாளையம் சாலையிலிருந்து லட்சுமி விநாயகர் நகர் பகுதியில் மேட்டூர் சாலை சந்திப்பு வரை ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். செங்கப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தாமணி துரைசாமி வரவேற்றார்.

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

    ×