search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரைப்புதூர் ஊராட்சியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
    X

    கரைப்புதூர் ஊராட்சியில் நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

    • எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,பூமி பூஜை நடத்தி நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
    • ஊராட்சி செயலாளர் காந்திராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சியில்,1வது வார்டுக்குட்பட்ட கே.பி. நகர் பகுதியில் 2 வீதிகளில் ரூ.13 லட்சம் மதிப்பில் சிறுபாலம் அமைத்து பேவர் பிளாக் சாலை அமைத்தல்,கரைப்புதூர் மெயின் வீதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல்,கரைப்புதூர் பகுதியில் நீண்ட நாட்களாக நிலவும் நல்ல தண்ணீர் சப்ளை பிரச்சனையை சரி செய்யும் பொருட்டு கரைப்புதூர் டேங்கிற்கு வடபுறம் ரூ.12 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல், 2 வது வார்டு ஸ்ரீ லட்சுமிநகர் பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைத்தல் உள்ளிட்ட ரூ.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,பூமி பூஜை நடத்தி நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட கவுன்சிலர் கரைபுதூர் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, மற்றும் தண்ணீர்பந்தல் நடராஜன்,கரைப்புதூர் ராமமூர்த்தி,விஸ்வநாதன், வக்கீல் பொன்னுசாமி, ஊராட்சி செயலாளர் காந்திராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×