search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை - 2 அமைச்சர்கள் பங்கேற்பு
    X

    தார்ச்சாலை அமைக்க பூமி பூஜை - 2 அமைச்சர்கள் பங்கேற்பு

    • ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார்.
    • செங்கப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தாமணி துரைசாமி வரவேற்றார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சி லட்சுமி விநாயகர் நகரில் ஒன்றிய பொது நிதியில் இருந்து செங்கப்பள்ளி காடபாளையம் சாலையிலிருந்து லட்சுமி விநாயகர் நகர் பகுதியில் மேட்டூர் சாலை சந்திப்பு வரை ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். செங்கப்பள்ளி ஊராட்சி தலைவர் சாந்தாமணி துரைசாமி வரவேற்றார்.

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தார்ச்சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினர்.

    Next Story
    ×