அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை

அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை
Published on

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பரம நகர் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் வடக்குப்பட்டி பள்ளிகளில் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனை சூற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் தொடங்கி வைத்தார். அப்போது பரமநகர் பள்ளியில் குழந்தைகள் அமைச்சரை பார்த்ததும் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

இதனை பார்த்ததும் நேராக குழந்தைகளிடம் சென்ற அமைச்சர் குழந்தைகளிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உங்களுக்கு வகுப்பறை கட்டுவது யார் தெரியுமா என்று கேட்க ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் என்ற மாணவன் தனது மழலை மொழியில் மெய்யநாதன் என்று கூறினார்.

இதை கேட்டதும் அமைச்சரும் அங்கிருந்த அதிகாரிகளும் சிரித்து மகிழ்ந்தனர். பூமி பூஜை நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் வள்ளியம்மை தங்கமணி,கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவி,கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவக்குமார், ஆலங்குடி நகர துணைச் செயலாளர் செங்கோல் , வடகாடு ஊராட்சித் தலைவர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com