பல்லடம் அருகே அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை

செம்மிபாளையம் ஊராட்சி சாமிகவுண்டம்பாளையத்தில் அரசு துவக்கப் பள்ளி உள்ளது.ஆசிரியைகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் அருகே அரசு  பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம் ஊராட்சி சாமிகவுண்டம்பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இதன் கட்டடங்கள் பழுதடைந்ததை அடுத்து, ரூ.62 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி குழு தலைவர் புண்ணியமூர்த்தி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள்,பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com