search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தை சீரமைப்பதற்கான பூமி பூஜை
    X

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தை சீரமைப்பதற்கான பூமி பூஜை

    • கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தரைத்தளத்தை சீரமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • தரைத்தளத்தை சீரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தரைத்தளம் மிகவும் சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது. இதனால் பயணிகளுக்கும், பேருந்து ஓட்டுனர்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. இந்த நிலையில் கந்தர்வகோட்டை பொதுமக்கள் மற்றும் வர்த்தக சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பேருந்து நிலைய தரைத்தளத்தை சீரமைக்க ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்தார். அதற்கான பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை தலைமையில் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், துணைத் தலைவர் செந்தாமரை குமார், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர் வெங்கடேசன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா, அரசு ஒப்பந்தக்காரர் ராஜ்குமார், வார்டு உறுப்பினர்கள் முத்துராமன், வினோதா, சாமிநாதன், ரவி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×