என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை
- ரூ.14லட்சம் மதிப்பில் புதிய மேல் நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
- மேல்நிலை குடிநீர் தொட்டி திட்டப்பணியை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சி தங்கம்மன் நகரில் ரூ.14லட்சம் மதிப்பில் புதிய மேல் நிலை குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தலைமை வகித்தார்.
பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். ஊராட்சி துணைத்தலைவர் முத்துகுமார் வரவேற்றார்.இதில் மேல்நிலை குடிநீர் தொட்டி திட்டப்பணியை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் குமார்,பல்லடம் ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஊராட்சி செயலர் பிரபுசங்கர் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்