என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gas"

    • முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.
    • இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும்.

    அமெரிக்காவில் இருந்து வருடத்திற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா சென்று அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும். தற்போது, இந்தியா தனது LPG தேவைகளில் 50% க்கும் அதிகமாக இறக்குமதியை சார்ந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
    • மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.

    தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக சுமார் 5,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தன. இவை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தன.

    இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கோரப்பட்டு லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் இருந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே புதிய ஒப்பந்தத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    அந்த ஒப்பந்தத்தில் 21 டன் கியாஸ் ஏற்றும் 3 ஆக்சில் லாரிகளுக்கு முன்னுரிமை போன்ற விதிமுறைகள் இருந்தன. இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சில நிபந்தனைகளை தளர்த்தின.

    இதற்கிடையே 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக விவாதிக்க நேற்று நாமக்கல்லில் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.

    இந்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று(நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.

    இதையொட்டி சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும். அடுத்த கட்டமாக கியாஸ் இறக்கும் பணியும் நிறுத்தப்படும். இந்த போராட்டத்தால் 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும். ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து லாரிகளுக்கும் வேலை கிடைக்கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும்.

    அதுவரை தென் இந்தியா முழுவதும் உள்ள 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஓட்டாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைக்கான உத்தரவு வழங்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களில் எரிவாயு எடுக்க அனுமதி
    • சென்னைக்கு அருகே 1 இடத்தில் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    தமிழ்நாட்டில் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதில், கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    • எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 29ந் தேதி நடைபெறும்.
    • கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 29ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனா். ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோா், எரிவாயு சேவை தொடா்பாக புகாா்கள், குறைபாடுகள் இருந்தால் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் சமையல் எரிவாயு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், ராமேசுவரம். கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

    • எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்களுக்கான திருப்பூர் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று பிற்பகல் 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் (அறை எண்.120) திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது.

    இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பொதுகழிப்பறை, சட்டநாதர் கோவில் கீழவீதி, நகராட்சி குப்பை கிடங்கு, மற்றும் குப்பைகளை பதப்படுத்தி உரம் தயாரிக்கும் பகுதிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொது கழிப்பறை ஆய்வின்போது கழிவறையை சுகாதாரமாக பாதுகாத்த தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

    ஆய்வின் போது பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்பொழுது குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை எனவும், கோயில் அருகே குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதாகவும் பொதுமக்கள் சிலர் குறைகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து உடனடியாக அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தினார்.

    மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மேலாளர் காதர் கான், உடன் இருந்தனர்.

    • சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் ஒப்பந்த ஊழியருக்கு காயம் ஏற்பட்டது.
    • திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி வீட்டு உபயோகத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வெளிபகுதிகளுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் அதன் அருகே நின்று இருந்த ஒப்பந்த ஊழியர் குருபாதம் முகம், கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உடனடியாக 108 மூலம் சென்னை திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் பழமையான சோதனைக்கு உட்படுத்தப்படாத சிலிண்டர்களை பயன்படுத்துவதாகவும், இதில் வேலை செய்கின்ற 150 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் நடைபெற்றது

    • எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் இன்று அதிகாலை திடீர் கசிவு ஏற்பட்டது.
    • கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள களமசேரி, காக்கநாடு, எடப்பள்ளி, குசாட் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரியவாயு நிறுவனம் உள்ளது.

    இந்த நிறுவனத்தில் இருந்து எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் இன்று அதிகாலை திடீர் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழாயில் இருந்து கசிந்த ரசாயனம் அந்த பகுதி முழுவதும் பரவியது.

    இதனால் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள களமசேரி, காக்கநாடு, எடப்பள்ளி, குசாட் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியது.

    கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது பற்றி அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் நிறுவன அதிகாரிகளும் விரைந்து சென்று குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் கூறும்போது, குழாயில் இருந்து கசிந்த ரசாயனம், சமையல் எரிவாயுவில் கலக்கப்படும் ரசாயணம் என்றும் ரசாயன கசிவால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும், குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணி விரைவில் முடியும் என்றும் தெரிவித்தனர்.

    • பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது.
    • எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பழைய கிராமத்தை இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனத்தில் பிளான்ட் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    தொழில்துறை செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி வட்டம் பழையபா ளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல்பாடு களையும், தடையின்மை சான்று பெறப்படாமல் இயக்கத்திலி ருக்கும் துறப்பணக்கிண றுளின் நிலைப்பாடு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை

    எரிவாயுவை கெயில் நிறுவனத்தினர்

    பயன்படுத்து வது தொடர்பான சாத்திய கூறுகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பான தடையின்மைக்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின் போது மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்,

    சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஓ.என்.ஜி.சி, கெயில், நிறுவனங்க ளின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை

    மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவல் மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைநேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×