search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LPG"

    • திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
    • மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன்

    அண்மையில் ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர் அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகள் அதற்கு ஆயத்தமாகி வருகின்றன.

    இதில், இந்தியா கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காளத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

    இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 42 வேட்பாளர்களையும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்நிகழ்வில் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்துவது, கூடுதல் மத்திய படைகளை நிறுத்துவதற்கு டெல்லி தலைவர்களும், அதிகாரிகளும் கொடுத்த அழுத்தத்திற்கு பணியாத அருண் கோயலுக்கு சல்யூட் செய்கிறேன். மக்களவை தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிக்க பாஜக முயற்சிக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த விட மாட்டேன். பாஜகவை தோற்கடிப்பதில் முழு நாட்டிற்கும் திரிணாமுல் காங்கிரஸ் வழிவகுக்கும்

    தேர்தலுக்கு முன்பு பாஜக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு 100 ரூபாய் உயர்த்துவார்கள். சிலிண்டர் விலை உயர்வு மூலம் ரூ.70,000 கோடி சம்பாதித்துள்ளனர் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
    • எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    நாமக்கல்லை தலைமை யிடமாக கொண்டு தென் மண்டல எஸ்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்க உறுப்பினர்களின் எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகள் ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டு சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

    டெண்டர் நீட்டிக்க கோரிக்கை

    இதற்காக 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் டெண்டர் மூலம் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் 2023 ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்து இருந்ததால் டெண்டரை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என சங்கம் சார்பில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்தும் அடிக்கடி சங்க நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்து வந்தனர். இந்த நிலையில் 3 ஆயில் நிறுவனங்களும் தற்போது நடைமுறையில் உள்ள டெண்டர் காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.

    ஒப்பந்தம் கையெழுத்து

    நேற்றுடன் நடைமுறையில் உள்ள டெண்டர் முடிவடைந்துள்ளதால் கால நீட்டிப்பு செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஐ.ஓ.சி. ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் கையெழுத்திட நேற்று நாமக்கல் வந்தனர்.

    செல்லப்பம்பட்டியில் உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஆயில் நிறுவன உயர் அதிகாரிகள் சங்கத்தலைவர் எஸ்.எல்.எஸ்.சுந்தர்ராஜன் முன்னிலையில் சங்க உறுப்பினர்களின் வாகனங்களுக்கு ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கடிதம் வழங்கினர்.

    பின்னர் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தர்ரான் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    சங்கத்தின் சார்பில் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கான வாடகை டெண்டர் காலத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ. தலைவர் அண்ணாமலை ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம். அது ஏற்கப்பட்டு 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆயில் நிறுவனங்கள் 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

    இதன் மூலம் தென் மண்டலம் மற்றும் பிற மண்டலங்களில் இயக்கப்படும் 7,500 எல்.பி.ஜி. வாகனங்களுக்கு ஒப்பந்த காலம் மேலும் 2 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. #LPG #UjjwalaLPGSCheme
    புதுடெல்லி:

    இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க “பிரதமர் உஜ்வலா யோஜனா” எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    இந்த திட்டத்துக்காக பணக்காரர்கள், சமையல் எரிவாயுக்கு பெறும் மானியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று சுமார் 5 கோடி பேர் மானியத்தை விட்டுக் கொடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மலைவாழ்-பழங்குடி இன மக்களுக்கும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டது.


    இதற்கிடையே இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தை மேலும் விரிவுபடுத்த பிரதமர் மோடி முடிவு செய்தார். அவரது உத்தரவின் பேரில் யார்-யாருக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்வது என்று ஆய்வு செய்யப்பட்டது.

    அந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதுபற்றி டெல்லியில் நேற்று நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    இறுதியில் அனைத்து ஏழைகளுக்கும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏழை-எளியவர்கள் பயன் பெறுவார்கள்.

    மத்திய மந்திரிசபை கூட்டத்தில், பீகார் மாநிலம் பாட்னாவில் கங்கை நதியின் குறுக்கே ரூ.2926 கோடி செலவில் புதிய பாலம் கட்டவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. #LPG #UjjwalaLPGSCheme
    சமையல் கியாஸ் சிலிண்டர் விலை இன்று 6.52 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. #LPG #Cylinder
    புதுடெல்லி:

    வீட்டு உபயோகத்துக்கு ஆண்டுக்கு, 14.2 கிலோ எடையுள்ள 12 சமையல் கியாஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த சிலிண்டர்களை சந்தை விலையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மானிய தொகை அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
     
    இந்நிலையில், வீட்டு உபயோகத்துக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டருக்கான விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இன்று 6.52 ரூபாய் குறைத்துள்ளன. இதேபோல், மானியமில்லாத சிலிண்டர் விலை 133 ரூபாய் குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.500.90க்கு விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூன் மாதத்தில் இருந்து 6 மாதங்கள் தொடர்ச்சியாக விலை உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது குறைந்துள்ளது. இந்த விலை குறைப்புக்கு முன்னதாக, சிலிண்டருக்கு ரூபாய் 14.13 ஆக உயர்ந்து இருந்தது. இப்போதைய விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

    உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்து செலவை பொறுத்து இந்த விலையில் சிறிது மாற்றம் இருக்கும். இதுபற்றிய அறிவிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன. #LPG #Cylinder
    ×