என் மலர்
நீங்கள் தேடியது "candidate list"
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பாராளுமன்றத் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணி பலம் எதுவுமின்றி எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும் சேர்ந்து போட்டியிடுகிறது.
எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியை விட்டுக் கொடுத்துள்ள அ.ம.மு.க. மற்ற 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதுபோல 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் டி.டி.வி.தினகரன் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 தொகுதிகளில் போட்டியிடும் அ.ம.மு.க.வின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ந்தேதி டி.டி.வி. தினகரன் வெளியிட்டார். அதில் 24 பாராளுமன்ற, 9 சட்டசபை இடைத்தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
9 சட்டசபை தொகுதியிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 பேருக்கும் மீண்டும் போட்டியிட டி.டி.வி.தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட் டியலை வெளியிட்டார்.
இந்த 2-ம் கட்ட பட்டியலில் தமிழகத்தில் 14 பாராளுமன்ற தொகுதிக்கும், 8 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
1. வடசென்னை- சந்தான கிருஷ்ணன் (வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர்)
2. அரக்கோணம்- பார்த்திபன் (வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர்)
3. வேலூர்- பாண்டு ரங்கன் (முன்னாள் அமைச்சர்)
4. கிருஷ்ணகிரி- கணேசகுமார் (கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர்)
5. தர்மபுரி- பழனியப்பன் (முன்னாள் அமைச்சர்)
6. திருவண்ணாமலை- ஞானசேகர் (வேலூர் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர்)
7. ஆரணி- செந்தமிழன் (முன்னாள் அமைச்சர்)
8. கள்ளக்குறிச்சி- கோமுகி மணியன் (விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர்)
9. திண்டுக்கல்-ஜோதி முருகன் (தாளாளர், சுரபி கல்வி நிறுவனங்கள்)
10. கடலூர்- கார்த்திக் (கழக பொறியாளர் அணி செயலாளர்)
11. தேனி-தங்க தமிழ்ச் செல்வன் (கழக கொள்கை பரப்புச் செயலாளர்)
12. விருதுநகர்-பரமசிவ ஐயப்பன் (கழக அம்மா பேரவை இணைச் செயலாளர்)
13. தூத்துக்குடி- டாக்டர் புவனேஸ்வரன் (தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக இளைஞர் பாசறை செயலாளர்)
14. கன்னியாகுமரி- லெட்சுமணன் (புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்).

தங்க தமிழ்ச்செல்வன் கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆகி இருந்தார். டி.டி.வி. தினகரனை ஆதரித்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர் மீண்டும் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் களம் இறக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பட்டது.
ஆனால் தேனி எம்.பி. தொகுதிக்கு அவர் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை போல தகுதி நீக்கம் செய்யப்பட்ட மேலும் சிலரும் பாராளுமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் சட்டசபை இடைத்தேர்தலில் புதுமுகங்களுக்கு டி.டி.வி. தினகரன் வாய்ப்பு அளித்துள்ளார்.
இன்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியல் மூலம் முன்னாள் அமைச்சர்கள் பாண்டுரங்கன், பழனியப்பன், செந்தமிழன் ஆகிய 3 முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன், பார்த்திபன், பழனியப்பன் ஆகியோர் பாராளுமன்ற தேர்தலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் ஆண்டிப்பட்டி, தர்மபுரி, சோளிங்கர் தொகுதிக்கு புதிய வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். #LSPolls #TTVDhinakaran #AMMK
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 11-ந்தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலில் 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு முதல் கட்டமாக தேர்தல் நடக்கிறது.
மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி வருகிறது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியாக வெளியிட்டு வருகின்றன. பா.ஜனதாவின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாக உள்ளன.

இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் முதலாவது வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்கும் வகையில் மோடி ஆலோசனையின்படி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. தற்போதைய பா.ஜனதா எம்.பி.க்கள் மக்களுக்கு செய்த பணிகளும் கருத்தில் கொள்ளப்படுகின்றன. அதன் அடிப்படையில் பா.ஜனதாவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிடும் தொகுதியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #LSPolls #BJP #NarendraModi
திருவனந்தபுரம்:
கேரளாவில் மொத்த முள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதியும், பிரேமச்சந்திரன் கட்சிக்கு 1 தொகுதியும், மானி காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சிகளுக்கு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. தொகுதி பங்கீடு முடிவடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பதை கண்டறியும் கூட்டம் நடந்து வந்தது.
கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க இப்போது பதவியில் இருக்கும் எம்.பி.க் களும், எம்.எல்.ஏ.க்களில் சிலரும் முயற்சி மேற்கொண்டனர்.
வேட்பாளர் தேர்வு செய்யும் பணியில் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி ஆகியோர் நேற்று விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப் பள்ளி ராமச்சந்திரனும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டது.
இதுபற்றி உம்மன்சாண்டியிடம் கேட்டபோது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நான் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதை கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார், என்று கூறினார்.
இதற்கிடையே கேரள காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து மாநில நிர்வாகிகள் எடுத்த முடிவுகள் மேலிட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
மாநில நிர்வாகிகள் இன்று பட்டியலுடன் டெல்லி செல்கிறார்கள். அங்கு ராகுல்காந்தியுடன் இறுதி ஆலோசனை நடக்கிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது. #parliamentelection #congress #oommenchandy