search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "candidate list"

    • தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன
    • அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    இந்நிலையில், 1,085 வேட்பு மனுக்களில் 135 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் இறுதியாக போட்டியிடுகின்றனர். அதில், 874 ஆண் வேட்பாளர்களும், 76 பெண் வேட்பாளர்கள் அடங்கும்.

    அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்கள் மட்டும் போட்டி போடுகின்றனர்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-35

    3. தென்சென்னை-41

    4. மத்தியசென்னை-31

    5. ஸ்ரீபெரும்புதூர்-31

    6. காஞ்சிபுரம் (தனி)-11

    7. அரக்கோணம்-26

    8. வேலூர்-31

    9. கிருஷ்ணகிரி-27

    10. தர்மபுரி-24

    11. திருவண்ணாமலை-31

    12. ஆரணி-29

    13. விழுப்புரம் (தனி)-17

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-25

    16. நாமக்கல்-40

    17. ஈரோடு-31

    18. திருப்பூர்-13

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-37

    21. பொள்ளாச்சி-15

    22. திண்டுக்கல்-15

    23. கரூர்-54

    24. திருச்சி-35

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-14

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-12

    31. சிவகங்கை-20

    32. மதுரை-21

    33. தேனி-25

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-25

    36. தூத்துக்குடி-28

    37. தென்காசி (தனி)-15

    38. திருநெல்வேலி-23

    39. கன்னியாகுமரி-22

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை.
    • வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 1,403 பேர் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

    ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 1,749 ஆக இருந்தது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

    அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்தனர்.

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று காலை தொடங்கியது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் நடந்தன.

    வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் பெயர் இருந்ததால் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்பு அவர் தரப்பு விளக்கங்கள் பெறப்பட்ட பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

    சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தூத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, கோவையில் களம் இறங்கும் பா.ஜ.க. மாநில தலைவர் கே.அண்ணாமலை, நீலகிரியில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மத்திய இணை மந்திரி எல்.முருகன், கன்னியாகுமரியில் போட்டியிடும் பா.ஜ.க. மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

    தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (சனிக்கிழமை) கடைசி நாளாகும். இன்று (வெள்ளிக்கிழமை) கிறிஸ்தவர்களின் புனித வெள்ளி தினம் என்பதால் அரசு விடுமுறையாகும். இதனால் வேட்பு மனுக்களை இன்று திரும்பப் பெற முடியாது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களைத் திரும்ப பெற கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

    அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேட்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் நாளை மாலை நிறைவடைந்ததும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியாக உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.வும் கேட்டு உள்ளன.

    வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 17-ந்தேதி மாலையுடன் நிறைவடைகிறது. வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு மொத்தம் 18 நாட்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற உள்ளது.

    பாராளுமன்ற தொகுதி வாரியாக வேட்புமனுக்கள் ஏற்பு விவரம்:-

    1. திருவள்ளூர் (தனி)-14

    2. வடசென்னை-49

    3. தென்சென்னை-53

    4. மத்தியசென்னை-32

    5. ஸ்ரீபெரும்புதூர்-32

    6. காஞ்சிபுரம் (தனி)-13

    7. அரக்கோணம்-29

    8. வேலூர்-37

    9. கிருஷ்ணகிரி-34

    10. தர்மபுரி-25

    11. திருவண்ணாமலை-37

    12. ஆரணி-32

    13. விழுப்புரம் (தனி)-18

    14. கள்ளக்குறிச்சி-21

    15. சேலம்-27

    16. நாமக்கல்-48

    17. ஈரோடு-47

    18. திருப்பூர்-16

    19. நீலகிரி (தனி)-16

    20. கோவை-41

    21. பொள்ளாச்சி-18

    22. திண்டுக்கல்-18

    23. கரூர்-56

    24. திருச்சி-38

    25. பெரம்பலூர்-23

    26. கடலூர்-19

    27. சிதம்பரம் (தனி)-18

    28. மயிலாடுதுறை-17

    29. நாகப்பட்டினம் (தனி)-9

    30. தஞ்சாவூர்-13

    31. சிவகங்கை-21

    32. மதுரை-21

    33. தேனி-29

    34. விருதுநகர்-27

    35. ராமநாதபுரம்-27

    36. தூத்துக்குடி-31

    37. தென்காசி (தனி)-26

    38. திருநெல்வேலி-26

    39. கன்னியாகுமரி-27.

    • 111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
    • வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார்.

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    111 வேட்பாளர்கள் அடங்கிய 5ம் கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

    இதில், இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து, இன்று பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்கொள்கிறார்.

    ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.

    ஜார்கண்ட் மாநிலம் தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் போட்டியிடுகிறார்.

    ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராம ராவின் மகளும், அம்மாநில பாஜக தலைவருமான புரந்தேஷ்வரி, ஆந்திராவின் ராஜாமுந்திரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • கள்ளக்குறிச்சி தொகுதியில் குமரகுரு போட்டி.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் போட்டி.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

    தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள் தவிர மீதமுள்ள 32 பாராளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.

    நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று அ.தி.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    ஸ்ரீபெரும்புதூர்- பிரேம்குமார்

    தருமபுரி - அசோகன்

    கள்ளக்குறிச்சி-குமரகுரு

    வேலூர் - பசுபதி

    திருவண்ணாமலை - கலியபெருமாள்

    கோவை- ராமச்சந்திரன்

    திருச்சி- கருப்பையா

    பெரம்பலூர்- சந்திரமோகன்

    பொள்ளாச்சி- கார்த்திகேயன்

    திருப்பூர் - அருணாசலம்

    நீலகிரி (தனி) - லோகேஷ்

    மயிலாடுதுறை - பாபு

    திருநெல்வேலி- சிம்லா முத்துசோழன்

    சிவகங்கை -சேவியர் தாஸ்

    தூத்துக்குடி- சிவசாமி வேலுமணி

    கன்னியாகுமரி- பசிலியா நசரேத்

    புதுச்சேரி- தமிழ்வேந்தன்

    விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் - ராணி

    • அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது
    • எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

    இதனிடையே, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

    அதன்படி, திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 5 தொகுதிகள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

    இதற்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனுத் தாக்கல் செய்தார். விருப்ப மனுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் விஜய பிரபாகரன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
    • 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.

    இதனிடையே விருதுநகர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்து ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக வெளியிடப்பட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை. அதனால் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும்.
    • ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    மேலும் செல்வப்பெருந்தகை கூறியதாவது:- தேசிய காங்கிரஸ் தேர்தல் குழு ஆலோசனைக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை இரவுக்குள் வெளியிடப்படும். ஒரு தொகுதிக்கு 3 வேட்பாளர்கள் பெயரை பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.

    • தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டி.
    • கள்ளக்குறிச்சி தொகுதியில் மலையரசன் போட்டி.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்விவரம் வருமாறு

    வடசென்னை- கலாநிதி வீராச்சாமி

    தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்

    மத்தியசென்னை- தயாநிதிமாறன்

    ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு

    காஞ்சிபுரம்- க.செல்வம்

    அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்

    வேலூர்- கதிர்ஆனந்த்

    தூத்துக்குடி- கனிமொழி

    தேனி- தங்க தமிழ்ச்செல்வன்

    நீலகிரி- ஆ.ராசா

    கள்ளக்குறிச்சி- மலையரசன்

    பெரம்பலூர்- அருண் நேரு

    சேலம் - செல்வகணபதி

    தஞ்சாவூர்- முரசொலி

    தென்காசி- ராணி

    பொள்ளாச்சி- கே.ஈஸ்வரசாமி

    கோவை- கணபதி பி.ராஜ்குமார்

    ஈரோடு- கே.இ.பிரகாஷ்

    ஆரணி- தரணி வேந்தன்

    திருவண்ணாமலை- சி.என்.அண்ணாதுரை

    தருமபுரி- அ.மணி

    வேட்பாளர் பட்டியலில் 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 21 பேரில் 3 பேர் பெண்கள், 19 பேர் பட்டதாரிகள் ஆவர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
    • புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடுவோர் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்நிலையில், தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    அதன்பின் பேசிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளார். புதிய தமிழகம் கட்சிக்கு 1 தொகுதி, எஸ்டிபிஐ-க்கு 1 தொகுதி என ஒதுக்கப்படுகிறது.

    புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொகுதி உடன்பாட்டிற்கு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் தொகுதி உடன்பாட்டிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதில் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென் சென்னை தொகுதியில் ஜெயவர்த்தன் போட்டி.
    • ஆரணி தொகுதியில் கஜேந்திரன் போட்டி.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    தென்சென்னை- ஜெயவர்த்தன்

    வடசென்னை- ராயபுரம் மனோ

    காஞ்சிபுரம்- ராஜசேகர்

    ஆரணி-கஜேந்திரன்

    விழுப்புரம் பாக்கியராஜ்

    மதுரை- சரவணன்

    சேலம் -விக்னேஷ்

    ஈரோடு-ஆற்றல் அசோக்குமார்

    அரக்கோணம்- ஏ.எல்.விஜயன்

    கிருஷ்ணகிரி-ஜெயபிரகாஷ்

    நாமக்கல்- நாங்கள் தமிழ்மணி

    கரூர் - தங்கவேல்

    நாகை -கர்ஜித் சங்கர்

    தேனி- நாராயணசாமி

    ராமநாதபுரம்- ஜெயபெருமாள்

    சிதம்பரம்- சந்திரகாசன்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தே.மு.தி.க.வுடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் நாளைக்குள் தே.மு.தி.க.வுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

    இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் நாளை மறுநாள் (21-ந்தேதி) வெளியாக உள்ளது. அன்றைய தினம் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என்று தெரிகிறது. ஒருவேளை தேர்தல் அறிக்கை அன்று வெளியாகாவிட்டால் வருகிற 24-ந்தேதி திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசார தொடக்க விழா மேடையில் தேர்தல் அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் பல்வேறு விசயங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பெரிய கட்சிகள் சேராத நிலையில் சிறிய கட்சிகள் சிலவற்றுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்து உள்ளார்.

    தே.மு.தி.க. தவிர மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

    • கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
    • வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

    முதலில் இந்த பட்டியல் போலியானது என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த வேட்பாளர் பட்டியல் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    1 தென்சென்னை-தமிழிசை சவுந்தரராஜன், 2 கோவை-ஏ.பி.முருகானந்தம், 3 கரூர்- அண்ணாமலை குப்புசாமி, 4 திருச்சி-ஆசீர்வாதம் ஆசாரி, 5 கோவை-தடா பெரியசாமி, 6 சிவகங்கை-எம்.சத்தியானந்தன், 7 ராமநாதபுரம்-எம்.முருகானந்தம், 8 தூத்துக்குடி-ராதிகா சரத்குமார், 9 தென்காசி-ஆனந்தன் அய்யாசாமி, 10 திருநெல்வேலி-நைனார் பாலாஜி, 11 கன்னியாகுமரி-விஜயதாரணி.

    ×