search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது
    X

    அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது

    • வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
    • 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தமும் கையெழுத்து ஆனது.

    இதனிடையே விருதுநகர், தருமபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளை தே.மு.தி.க.வுக்கு ஒதுக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்து ஆகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகிறது. வருகிற 22-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட உள்ளது. அன்றே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக வெளியிடப்பட்ட 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறவில்லை. அதனால் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×