search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் டெல்லி மேலிடம் கடும் அதிர்ச்சி
    X

    பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் டெல்லி மேலிடம் கடும் அதிர்ச்சி

    • கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
    • வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்கள் 11 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் நேற்று இரவு வெளியானது. கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பே யார்-யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றிய விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

    முதலில் இந்த பட்டியல் போலியானது என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த வேட்பாளர் பட்டியல் கசிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேட்பாளர் பட்டியல் கசிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள டெல்லி மேலிட தலைவர்கள் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டியலில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-

    1 தென்சென்னை-தமிழிசை சவுந்தரராஜன், 2 கோவை-ஏ.பி.முருகானந்தம், 3 கரூர்- அண்ணாமலை குப்புசாமி, 4 திருச்சி-ஆசீர்வாதம் ஆசாரி, 5 கோவை-தடா பெரியசாமி, 6 சிவகங்கை-எம்.சத்தியானந்தன், 7 ராமநாதபுரம்-எம்.முருகானந்தம், 8 தூத்துக்குடி-ராதிகா சரத்குமார், 9 தென்காசி-ஆனந்தன் அய்யாசாமி, 10 திருநெல்வேலி-நைனார் பாலாஜி, 11 கன்னியாகுமரி-விஜயதாரணி.

    Next Story
    ×