search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "atm card"

    • தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கமலாம்பாள் வீதியைச்சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சங்கீதா (வயது 37). இவர், கடந்த 10-ந் தேதி கும்பகோணத்திற்கு பஸ்சில் சென்று விட்டு, அன்று மாலை திருநள்ளாறு திரும்பி கொண்டிருந்தார். வீடு சென்று பார்த்தபோது, தன் கைப்பையில் வைத்திருந்த 3 ஏ.டி.எம். கார்டுகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தொடர்ந்து, குறிப்பிட்ட வங்கிக்கு சங்கீதா சென்று கார்டை பிளாக் செய்ய சொல்லியதாக கூறப்படுகிறது. ஆனால், அன்றைய தினமே, ரூ.40 ஆயிரம், 11-ந் தேதி ரூ.40 ஆயிரம், 12-ந் தேதி ரூ.40 ஆயிரம், 13-ந் தேதி ரூ.40 ஆயிரம் என 4 நாட்கள் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுத்ததாக சங்கீதாவின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை தாமதமாக கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, இது குறித்து, திருநள்ளாறு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நடைபெற்றது.
    • கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கியின் மூலம் 10-ம் வகுப்பு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி மாணவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    தலைமை விருந்தினராக பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தலைமை மேலாளர் ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினராக வங்கியின் முதன்மை அதிகாரி அனுபாமா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான வங்கி கணக்கின் அவசியத்தை குறித்து விளக்கம் அளித்தனர்.

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கோரிஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

    தொழிலதிபர் சுதாகர், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • ஏ.டி.எம். கார்டை வாங்கி பெண்ணிடம் ரூ.30ஆயிரம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
    • பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    மேலூர்

    மேலூர் காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிர மணியன். இவரது மனைவி வைகை ஜோதி (வயது42). பாலசுப்பிரமணியம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    அவர் அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்புவது வழக்கம். அதேபோல் கணவர் பணம் அனுப்பியதால் அதை எடுப்பதற்காக வைகை ஜோதி மேலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஏ.டி.எம். சென்டர் சென்றார். அப்போது அங்கு பணம் எடுக்க பலர் நின்றிருந்தனர். இந்த நிலையில் வரிசையில் நின்றிருந்த வாலிபர் ஒருவர் வைகை ஜோதியிடம் பணம் எடுத்து தருவதாக கூறினார்.

    அதை நம்பி வைகை ஜோதி அவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பின் நம்பரையும் தெரிவித்து ள்ளார். அந்த வாலிபர் பணம் வரவில்லை என்று வேறு கார்டை அவரிடம் மாற்றி கொடுத்து விட்டு வைகை ஜோதியின் ஏ.டி.எம் .கார்டில் இருந்து ரூ.30,ஆயிரம் எடுத்து ள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வைகை ஜோதி மேலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் வழக்குப்பதிவு பதிவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

    • விருதுநகரில் அரசு அதிகாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் கொள்ளையடித்தனர்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ.கால னியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது71). இவர் அரசு புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் சம்பவத்தன்று ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். பணத்தை எடுப்ப தற்கு முன் வரவு-செலவு கணக்கு விபரங்களை சரி பார்க்க நினைத்தார்.

    அப்போது அருகில் இருந்த 35வயது மதிக்கத்தக்க 2 பேர் சீனிவாசனிடம் நைசாக பேசி தாங்கள் விபரங்களை எடுத்து தருகிறோம் என கூறி ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி யுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் சீனிவாசனின் ஏ.டி.எம். கார்டை வைத்துக் கொண்டு மற்றொரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

    இதை அறியாத சீனிவாசன் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தியபோது ரகசிய குறியீடு எண் தவறு என காட்டப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது தன்னுடையது இல்லை என சீனிவாசன் உணர்ந்தார். இதற்கிடையே ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் சீனிவாசன் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருச்சி அதிகாரியின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.30 ஆயிரம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்
    • அதிகாரி ரங்கநாதன் நினைவூட்டலுக்காக தனது ஏடிஎம் கார்டில் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது

    திருச்சி:

    சேலம் குமரன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 57). இவர் திருச்சி துவாக்குடி நீர் பாசன மேலாண்மை பயிற்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் சேலத்தில் இருக்கும் அவரது தாயாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் அவசர அவசரமாக பஸ்சில் சேலம் புறப்பட்டுச் சென்றார். இந்த அவசரத்தில் ஏ.டி.எம். கார்டு இருந்த கைப்பையை அவர் தொலைத்து விட்டார்.

    பின்னர் பஸ்சில் சென்று கொண்டிருந்தபோது திருவெறும்பூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.30,000 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்த போலீசார் திருவெறும்பூர் தனியார் வங்கி ஏ.டி.எம். மைய சிசிடிவி காமிரா பதிவுகளை வைத்து துப்பு துலக்கினர்.

    இதில் அதிகாரிக்கு சொந்தமான ஏ.டி.எம். மூலம் ரூ.30,000 திருடிய திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகர் மூன்றாவது தெரு பகுதி சேர்ந்த நாகராஜ் (46) என்பவரை கைது செய்தனர்.

    அதிகாரி ரங்கநாதன் நினைவூட்டலுக்காக தனது ஏடிஎம் கார்டில் ரகசிய எண்களை எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

    இதனை கொள்ளையன் தனக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்கிறான் என போலீசார் தெரிவித்தனர்.

    • தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
    • தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொகளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

    தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் வந்து தியாகராஜனின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு, அவரது கார்டுக்கு பதிலாகமாற்று ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு, ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறிஉள்ளனர்.

    இந்நிலையில் ஏ.டி.எம். கார்டு மாற்றப்பட்டதை அறிந்த தியாகராஜன் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர்விரைந்து வந்தனர். பொது மக்கள் வருவதை பார்த்ததும் பிரசாந்த் தப்பியோடி விட்டார். சரத்குமார், கபிலை பிடித்து வைத்துக் கொண்டு மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நூதன முறையில் விவசாயிடம் பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இது குறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மருத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பியோடி பிரசாந்தை தேடி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டத்தை கலக்கிய ஏ.டி.எம். கார்டு கொள்ளையர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • 2 பேர் மீது முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (30).

    நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு, பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம், பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து, அசல் ஏ.டி.எம். கார்டுகளை வாங்கிக்கொண்டு போலி கார்டுகளை மாற்றி கொடுத்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளனர்.

    இருவர் மீதும் கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டு எடப்பாடி பகுதியில், முதியவர்களிடம் ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் நேற்று வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த இளைஞர்கள் 5 ஆண்டுகளாக ஏடிஎம் பணக் கொள்கையடித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து 38 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இருவரையும் எடப்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

    சோழிங்கநல்லூரில் ஏ.டி.எம். கொள்ளையன் பிடிபட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதியில் பல்கேரியா நாட்டை சேர்ந்த பீட்டர் (வயது 47) தனது நண்பருடன் தங்கி இருந்தார். நேற்று காலை அவர்கள் ஓட்டல் அறையை காலி செய்து விட்டு வெளியே வரும்போது அவர்களது பையில் இருந்து ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் இந்திய பணம் மற்றும் அமெரிக்க டாலர்கள் கீழே விழுந்தன. இதை பார்த்த விடுதி ஊழியர் சந்தேகத்தின் பேரில் பீட்டரை பிடித்து செம்மஞ்சேரி போலீசில் ஒப்படைத்தார்.

    அவருடன் தங்கி இருந்த அவரது நண்பர் தப்பி ஓடி விட்டார். போலீஸ் விசாரணையில் அவர்கள் போலியாக ஏ.டி.எம். கார்டுகள் தயாரித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவரிடம் இருந்து 50 போலி ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.10 லட்சம் இந்திய பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், போலி ஏ.டி.எம். கார்டுகள் தயாரிக்க பயன்படும் ‘ஸ்கிம்மர்’ கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

    தப்பி ஓடிய அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். எந்தெந்த ஏ.டி.எம்.களில் அவர்கள் பணத்தை கொள்ளையடித்தனர்?. எவ்வளவு பணம் அவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
    ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் மூலம் இனி பணம் எடுக்கவோ, கடைகளில் பொருட்கள் வாங்கவோ முடியாது. எனவே பழைய கார்டுகளை வங்கிகளில் செலுத்தி புதிய கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #ATMCardChip
    சென்னை:

    வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி உள்ள ஏ.டி.எம். கார்டு மூலம் எளிதாக மோசடி நடந்து வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர். எனவே மோசடியை தடுக்க பழைய முறையிலான ஏ.டி.எம். கார்டுகளுக்கு பதிலாக ‘சிப்’ வைக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனைத்து வங்கிகளுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது. ‘சிப்’ இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் செயல்படாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனவே பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பழைய ஏ.டி.எம். கார்டுகளை கொடுத்து ‘சிப்’ உள்ள புதிய ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி விட்டனர்.

    ஆனால் சிலர் இன்னமும் புதிய ஏ.டி.எம். கார்டு வாங்காமல் உள்ளனர். இதனை கண்டுகொள்ளாமல் இருந்த வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகள் நேற்று முதல் செயல்படவில்லை.

    குறிப்பாக சென்னையில் பல வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஷாப்பிங் மால்களில் பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:-

    ‘சிப்’ இல்லாத டெபிட், கிரெடிட் ஏ.டி.எம். கார்டுகள் ஜனவரி 1-ந்தேதி (நேற்று) முதல் வேலை செய்யாது என்பதால் அந்த கார்டுகளை வைத்து ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கவோ, கடைகளில் ‘ஸ்வைப்’ செய்து பொருட்கள் வாங்கவோ முடியாது.

    எனவே பழைய கார்டுகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் கொடுத்து ‘சிப்’ வைத்த புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயர் இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் ஒரே நாளிலும், பெயருடன் கூடிய கார்டுகள் 7 நாட்கள் அவகாசத்திலும் வழங்கப்படுகிறது. சாதாரண வகை கார்டுகளை வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு பதிவு தபாலில் அனுப்பி வருகிறது. மஞ்சள் நிற மாஸ்டர் கார்டுகளை வாடிக்கையாளர்கள் வங்கிகளில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த உத்தரவு அனைத்து சர்வதேச, உள்நாட்டு வங்கிகளின் டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கும் பொருந்தும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ATMCardChip
    நண்பரின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ. 5 ஆயிரம் பணம் திருடிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஆரல்வாய்மொழி:

    ஆரல்வாய்மொழி செண்பகராமன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பகவதியப்பன் (வயது27). இவர் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    அதே பகுதியைச் சேர்ந்த சக்தி(20). இவர் காற்றாலையில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று சக்தி தனது நண்பர் பகவதியப்பன் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டில் இருந்த ஏ.டி.எம். கார்டை நண்பருக்கு தெரியாமல் எடுத்து வந்தார்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ. 5 ஆயிரம் பணத்தை எடுத்தார். மீண்டும் ஏ.டி.எம். கார்டை நண்பன் வீட்டில் வைத்து விட்டார். பணம் எடுத்தற்கான குறுச்செய்தி பகவதியப்பன் செல்போனுக்கு வந்தது.

    அதிர்ச்சி அடைந்த பகவதியப்பன் வீட்டிற்கு வந்து விசாரித்தார். ஆனால் ஏ.டி.எம்.மில் யாரும் பணம் எடுக்கவில்லை என கூறினார்கள். அப்போது தனது நண்பர் சக்தி வீட்டிற்கு வந்தது தெரியவந்தது. தனது நண்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. 
    இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். 

    விசாரணையில் சக்தி தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சக்தி மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
    வத்தலக்குண்டுவில் பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை பெற்று ரூ.20ஆயிரம் பணத்தை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகில் உள்ள மேலக்கோவில் பட்டியை சேர்ந்தவர் கண்ணன். கூலிதொழிலாளி. இவரது மனைவி சசிகலா(25). நேற்று மாலை மதுரை மெயின்ரோட்டில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தார். பணம் எடுப்பது குறித்த தகவல் சரிவர தெரியாததால் அருகில் இருந்த ஒரு வாலிபரிடம் தனது அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது என பார்க்குமாறு கூறியுள்ளார்.

    கார்டை வாங்கிய அந்த வாலிபர் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் அக்கவுண்டில் பணம் இல்லை என கூறி சென்றுவிட்டார். அவர் சென்றபிறகு ரூ.20ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக தனது செல்போன் எண்ணுக்கு வந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் பணத்தை எடுத்தது தேனி மாவட்டம் டி.வாடிப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சாமிக்கண்ணு மகன் கனகராஜ்(30) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×