பெரம்பலூரில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து விவசாயியிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி

தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.
பெரம்பலூரில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து விவசாயியிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி
Published on

பெரம்பலூர் :

பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள நாரணமங்கலத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 38), விவசாயி. இவர் வயலுக்கு உரம் போட பணம் எடுக்க கொகளக்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.

தியாகராஜனுக்கு ஏ.டி.எம். கார்டை பயன் படுத்தி பணம் எடுக்க ெதரியாததால், மையத்தின் வெளியே நின்ற சரத்குமார், பிரசாத், கபில் ஆகிய 3 பேரை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் வந்து தியாகராஜனின் ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு, அவரது கார்டுக்கு பதிலாகமாற்று ஏ.டி.எம். கார்டை கொடுத்து விட்டு, ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று கூறிஉள்ளனர்.

இந்நிலையில் ஏ.டி.எம். கார்டு மாற்றப்பட்டதை அறிந்த தியாகராஜன் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர்விரைந்து வந்தனர். பொது மக்கள் வருவதை பார்த்ததும் பிரசாந்த் தப்பியோடி விட்டார். சரத்குமார், கபிலை பிடித்து வைத்துக் கொண்டு மருவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நூதன முறையில் விவசாயிடம் பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் மருத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் தப்பியோடி பிரசாந்தை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com