என் மலர்
நீங்கள் தேடியது "வருங்கால வைப்பு நிதி"
- தற்போது உறுப்பினர்கள் பணம் பெற கட்டாயமாக கோரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
- ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன.
சென்னை:
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், தற்போது தங்களது கணக்கில் உள்ள பணத்தை வங்கி மூலம் பெறுகின்றனர். இந்தநிலையில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் தங்களுடைய தொகையை 'யு.பி.ஐ.' மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாக உள்ளது.
இதற்கான பணிகளை தொழிலாளர் அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 8 கோடி வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பயன் அடைவார்கள். தற்போது வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் பணத்தை பெற ஆன்லைன் விண்ணப்பம் தாக்கல் செய்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், அந்த நடைமுறை தேவையற்றதாக ஆகிறது.
புதிய முறைப்படி, வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், கணக்கில் இருந்து பெற தகுதியான தொகையை உறுப்பினர்கள் தங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட 'யு.பி.ஐ.' மூலம் நேரடியாக மாற்றிக்கொள்ள முடியும். பாதுகாப்பை உறுதி செய்ய, 'யு.பி.ஐ.' 'பின்' பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்ட பிறகு, அதை டிஜிட்டல் கட்டணமாகவோ, ஏ.டி.எம். மூலம் பணமாகவோ எடுத்துக்கொள்ள முடியும்.
இந்த திட்டத்தை சீராக செயல்படுத்த, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தங்களது மென்பொருள் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து வருகிறது.
தற்போது உறுப்பினர்கள் பணம் பெற கட்டாயமாக கோரிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆண்டுதோறும் 5 கோடிக்கும் அதிகமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படுகின்றன. இந்த நடைமுறை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு கூடுதல் நிர்வாக சுமையை ஏற்படுத்தி வருகிறது. இதனை தவிர்க்கவே, நேரடி பணப்பரிமாற்ற முறை உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய மாற்றம், வருங்கால உறுப்பினர்களின் வாழ்க்கை எளிமையாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு இணையான சேவைகளை வழங்கும் அமைப்பாக வருங்கால வைப்பு நிதியை மேம்படுத்துவதற்கான முக்கிய பணியாக இந்த 'யு.பி.ஐ.' மூலம் நேரடி பணம் பெறும் திட்டமாகும் என்றார்.
- நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.
- வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது.
மத்திய அரசு, தொழிலாளர்களின் நலனுக்காக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பணியாற்றும் நிறுவனமும், தொழிலாளர்களும் செலுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 8 கோடிக்கும் அதிகமானோர் சந்தாதாரர்களாக உள்ளனர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது சந்தாதாரர்களுக்கு தற்போது வழங்கி வரும் டிஜிட்டல் சேவையை மேலும் நவீன அம்சங்களுடன் மேம்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். எந்திரத்தின் மூலமாக எடுக்கும் வசதி அடுத்த மாதம் அமல்படுத்தப்பட உள்ளது.
இதேபோல வருங்கால வைப்பு நிதி கணக்கை, யு.பி.ஐ. எண்ணுடன் இணைத்து வங்கிக்கணக்கில் நேரடியாகவும் பணத்தை வரவு வைத்துக்கொள்ளும் வசதியும் அறிமுகமாக உள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் டெல்லியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10, 11-ந்தேதிகளில் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை ஏ.டி.எம். கார்டு மூலம் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகை பரிசாக இந்த வசதி அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
- எவ்வித சான்றிதழ்களும் இன்றி தானியங்கி முறையில் முன்பணம் எடுக்கலாம்.
- Auto Claim வரம்பை மத்திய அரசு 5 மடங்கு உயர்த்தியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கிலிருந்து முன்பணம் எடுப்பதற்கான Auto Claim (தானியங்கி) வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளபடி, இனி நீங்கள் ரூ.5 லட்சம் வரை எவ்வித சான்றிதழ்களும் இன்றி தானியங்கி முறையில் முன்பணம் எடுக்கலாம்.
உடல்நலக் குறைவு, வீட்டுக் கடன் அல்லது திருமணம் போன்ற அவசரத் தேவைகளுக்காக இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
ஆட்டோ கிளைம் வரம்பை 5 மடங்கு உயர்த்தும் மத்திய அரசின் முடிவு, அவசரத் தேவைகளுக்கான நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய பிஎஃப் சந்தாதாரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
- பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் முடிவு.
- அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் வழங்கப்படும்.
2022-23ம் ஆண்டிற்கான பணியளர்களின் வருங்கால வைப்பு நிதி தொகைக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை ஓய்வூதிய நிதி அமைப்பு இபிஎப்ஓ அதன் கூட்டத்தின்போது நிர்ணயித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இபிஎப்ஓ 2021-22க்கான வைப்பு நிதி மீதான வட்டியை 8.5 சதவீதத்தில் இருந்து கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் 8.1 சதவீதமாக குறைத்தது.
பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு சார்பில் இன்று நடந்த கூட்டத்தில் 2022-23ம் ஆண்டிற்கான பணியாளர்களின் வைப்பு நிதிக்கு 8.15 சதவீத வட்டி விகிதத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
epfo2020-21ம் ஆண்டிற்கான ஊழியர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021ல் மத்திய அறங்காவலர் குழுவால் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அறங்காவலர் குழுயின் முடிவிற்குப் பிறகு, 2022-23க்கான பணியாளர்களின் வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
அரசின் ஒப்புதலுக்குப் பிறகு, 2022-23க்கான வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் இபிஎப்ஓவின் ஐந்து கோடி சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
- சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
கன்னயாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மாத சம்பளம் ரூபாய் 30,000 வரை பெறும் தொழிலாளர்களை இ.எஸ்.ஐ எனப்படும் தொழிலாளர் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணிபுரியும் சமூக பாதுகாப்பு உதவியாளர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்ற உறுதி (MACP) சலுகைகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
- வேலையில் இருந்து நின்று ஒரு மாதத்திற்குப் பிறகு 75 சதவீதம் பணத்த எடுக்கலாம்.
- அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து மீதமுள்ள பணத்தை பெறலாம்.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நபர்களுக்கு அவர்களுடைய சம்பளத்தில் குறிப்பிட்ட தொகை வருங்கால வைப்பு நிதியாக பிடிக்கப்படும். தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் தொகை எவ்வளவோ, அவ்வளவு தொகை நிறுவனமும் செலுத்தும். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட வட்டி வழங்கும்.
வேலையில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் உதவும். தற்போது புதிய பென்சன் திட்டத்தின்படி நிறுவனம் அளிக்கும் பங்கீட்டில் மிகப்பெரிய தொகை பென்சனுக்காக பிடித்தம் செய்யப்படுகிறது.
தற்போது வீடு கட்ட வேண்டும் அல்லது அவசர தேவைக்கு பணம் வேண்டும் என்றால் இணைய தளம் மூலம் ரிஜிஸ்டர் செய்து பணத்தை எடுக்க முடியும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டில் இருந்து ஏடிஎம் மெஷின்களில் வருங்கால வைப்பு நிதி பணத்தை எடுக்கும் வகையில் மென்பொருள் மேம்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரிமை கோருபவர்கள், பயனாளிகள் அதிகப்பட்டியான மனிதர்கள் தலையீடு இல்லாமல் இனிமேல் பணத்தை எடுக்க முடியும்.
அடுத்த ஆண்டு ஐ.டி. 2.1 மேம்படுத்தல் நடைமுறைக்கு வந்தவுடன் EPFO இன் ஐ.டி. உள்கட்டமைப்பு வங்கி அமைப்புகளுக்கு இணையாக இருக்கும். இதனால் அவர்கள் எளிதாக பணத்தை பெற முடியும். உரிமைகோரல் தீர்வை எளிமையாக்க எங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்பை மேம்படுத்துகிறோம். ஏடிஎம்கள் மூலம் வருங்கால வைப்பு நிதியை எடுப்பது விரைவில் நடைமுறைக்கு வரும் என அமைச்சக செயலாளர் சுமிதா தவ்ரா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்ட உடன் பணத்தை எடுப்பதற்கான கார்டு வழங்கப்படும். இது வங்கிகள் வழங்கும் ஏடிஎம் கார்டுகள் போன்று இருக்கும். எனினும் மொத்த தொகையில் 50 சதவீதம் வரை மட்டுமே எடுக்க முடியும்.
பணத்தை எடுக்கும் முறையில் மாற்றம் ஏதும் இல்லை. வேலையில் இருக்கும்போது பணத்தை எடுக்க முடியாது. வேலையில் இருந்து நின்று ஒரு மாதத்திற்குப் பிறகு 75 சதவீதம் பணத்தை எடுக்கலாம். அதன்பின் இரண்டு மாதங்கள் கழித்து மீதமுள்ள பணத்தை பெறலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2021-22க்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 இல் வழங்கப்பட்ட 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்தது.
இபிஎஃப்ஓ அறிவித்த உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இபிஎஃப் திட்டத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 2021-22 ஆம் ஆண்டிற்கான 8.1 சதவீத வட்டி விகிதத்தை வரவு வைக்க மத்திய அரசின் ஒப்புதலைத் தெரிவித்துள்ளது.
இதற்காக தொழிலாளர் அமைச்சகம் தனது ஒப்புதலுக்கான முன்மொழிவை நிதி அமைச்சகத்திற்கு அனுப்பியது.
இஅரசாங்கத்தின் வட்டி விகிதத்தை உறுதிப்படுத்திய பிறகு, இபிஎஃப்ஓ நிதியாண்டிற்கான நிலையான வட்டி விகிதத்தை இபிஎஃப் கணக்குகளில் வரவு வைக்கத் தொடங்கும்.
2020-21 ஆம் ஆண்டிற்கான வைப்பு நிதி டெபாசிட்டுகளுக்கான 8.5 சதவீத வட்டி விகிதம் மார்ச் 2021-ல் மத்திய அறங்காவலர் வாரியத்தால் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்.. தமிழகம் தலை நிமிரத் தொடங்கிவிட்டது- முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு






