search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அதிகாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் கொள்ளை
    X

    அரசு அதிகாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் கொள்ளை

    • விருதுநகரில் அரசு அதிகாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் கொள்ளையடித்தனர்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் என்.ஜி.ஓ.கால னியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது71). இவர் அரசு புள்ளியியல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் சம்பவத்தன்று ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு வந்தார். பணத்தை எடுப்ப தற்கு முன் வரவு-செலவு கணக்கு விபரங்களை சரி பார்க்க நினைத்தார்.

    அப்போது அருகில் இருந்த 35வயது மதிக்கத்தக்க 2 பேர் சீனிவாசனிடம் நைசாக பேசி தாங்கள் விபரங்களை எடுத்து தருகிறோம் என கூறி ஏ.டி.எம். கார்டுகளை வாங்கி யுள்ளனர். அதன் பின் மர்ம நபர்கள் சீனிவாசனின் ஏ.டி.எம். கார்டை வைத்துக் கொண்டு மற்றொரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினர்.

    இதை அறியாத சீனிவாசன் ஏ.டி.எம். கார்டை எந்திரத்தில் செலுத்தியபோது ரகசிய குறியீடு எண் தவறு என காட்டப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எம். கார்டை பார்த்தபோது அது தன்னுடையது இல்லை என சீனிவாசன் உணர்ந்தார். இதற்கிடையே ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபர்கள் சீனிவாசன் கணக்கில் இருந்து ரூ.40 ஆயிரத்தை எடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×