என் மலர்

    நீங்கள் தேடியது "books"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலைமை ஆசிரியை ரூ.20 ஆயிரத்துக்கு புத்தகங்களை நூலகப் பொறுப்பாசிரியர்கள் வலன்றீன் இளங்கோ, ஆசிரியை பெல்லா ஆகியோரிடம் வழங்கினார்.
    • புத்தகங்கள் வழங்கிய மாணவ -மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை பிளாரன்ஸ் மற்றும் தாளாளர் லெரின் டிரோஸ் அடிகளார் ஆகியோர் வாழ்த்தினர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு ஆண்டு தோறும் மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பல்வேறு புத்தகங்களை வழங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு மாணவ-மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியை பிளாரன்ஸ்சிடம் ரூ.19 ஆயிரத்திற்க்கான நூல்களை வழங்கினர். தலைமை ஆசிரியை ரூ,1,000 வழங்கி ரூ.20 ஆயிரத்துக்கு பள்ளி நூலகத்திற்கான புத்தகங்களைப் பெற்று நூலகப் பொறுப்பாசிரியர்கள் வலன்றீன் இளங்கோ, ஆசிரியை பெல்லா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கிய மாணவ -மாணவிகளை பள்ளித் தலைமை ஆசிரியை பிளாரன்ஸ் மற்றும் தாளாளர் லெரின் டிரோஸ் அடிகளார் ஆகியோர் வாழ்த்தினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.
    • மக்கள் புத்தகங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள், பெண்கள் சிறைகளில் கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.

    இங்கு சுழற்சி முறையில் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு கைதிகள் படிப்பதற்காக வைக்கப்படுகின்றன. கோவை மத்திய சிறை வளாகத்திலும் நூலகம் உள்ளது. இந்தநிலையில் சிறைத்துறை டி.ஜி.ப.அமரேஷ் பூஜாரியின் உத்தரவின் பேரில் கைதிகளின் பயன்பாட்டுக்காக புத்தகங்கள் தானம் பெறும் கூண்டுக்குள் வானம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூரில் சமீபத்தில் நடந்த புத்தக திருவிழாவில் சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்வதற்கான அரங்கு அமைக்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களால் தானமாக வழங்கப்பட்டதாக சிறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே சிறைத்துறைக்கு சொந்தமான பெட்ரோல் பல்க் வளாகத்தில் புத்தக தானம் பெறுவதற்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சிறைவாசிகளின் நலனுக்காக புத்தக தானம் வழங்க விரும்பும் பொது மக்கள் புத்த கங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது . 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
    • கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    குத்தாலம்:

    யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.

    இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர்.

    இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 93-ஆம் ஆண்டு கம்பர் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.

    தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர்.

    அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பரின் புகழ்பாடினர்.

    இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுக்கோட்டை கம்பன் கழகம் ராமசாமி, ராமச்சந்திரன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், தேரழுந்தூர் முத்துசானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம்.
    • 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செம்மொழி நூலகத்தினை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் எஸ் .எஸ். பழநிமாணிக்கம் தெ எம்.பி. கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும்.

    அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபிரனர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கீழ் இயங்கிடும் 259 கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 250 நூலகங்களை அமைத்திட இந்த 1 லட்சம் ரூபாயில் ரூ.50,000- செலவில் புத்தகங்களையும் ரூ.50,000- செலவில் தளவாட சாமான்களையும் அரசால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரயினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் ஆங்கில அறிவை வளர்க்கும் புத்தகங்கள் , உலகளாவிய தலைவர்கள் குறித்த புத்தகங்கள், தொழில் மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்த புத்தகங்கள், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள், மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் புத்தகங்கள் போன்ற பல்வேறு புத்தகங்கள் இவ்நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

    கல்லூரி மாணவ மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்படுத்திடவும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்ப டுத்தும் நோக்கத்துடனும் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, விடுதி காப்பாளர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புத்தக திருவிழா வில் இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது.

    சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    இந்த புத்தகத் திருவிழா வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறுகின்றது. இப்புத்தகக் கண்காட்சி யானது தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் புத்தகத் திருவிழா வினை இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    இங்கு தினமும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 9-ம் நாளான இன்று காலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் ஸ்பெல் பீ போட்டி, பென்சில் ஓவியப்போட்டிகள் மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும், கலைமாமணி மைக்கேல் வழங்கும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, கராத்தே நிகழ்ச்சி மற்றும் திருச்செங்கோடு டாக்டர்.ஜெயக்குமாரின் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெற வுள்ளது.

    மாலையில் சேலம் பெரி யார் பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் "காலநிலை மாற்றம்" என்ற தலைப்பிலும், கவிஞர் ஆத்தூர் சுந்தரம் "தட்டி எழுப்பும் தாலாட்டுகள்" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மெய்நிகர் நூலகம் திறப்புவிழா தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ் குமார் தலைமையில் நடை பெற்றது.
    • விழாவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் இராம.கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் மெய்நிகர் நூலகம் திறப்புவிழா தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ் குமார் தலைமையில் நடை பெற்றது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பெண்கள் கல்லூரி முதல்வர் சின்னத்தாய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பொத்தக்காலன்விளை நூலகர் நல்நூலகர் விருது பெற்ற சுப்பிரமணியன் வரவேற்றார்.

    பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர். மிதிவண்டி வழி விழிப்புணர்வு பரப்புரையாளர் மாடசாமி கவுரவிக்கப்பட்டார்.

    வாசகர் வட்டம் தலைவர் கவிஞர் நடராசன், யோகா பயிற்றுநர் ராஜலட்சுமி, ஓய்வுபெற்ற அஞ்சலக அலுவலர் அனந்த கிருஷ்ணன்,புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பவுலின்,வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றம் செயலாளர் பால்துரை உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் யோகா பயிற்றுநர் கமலம், வாசகர் வட்ட துணைத்தலைவர் பொறியாளர் கனகராஜ், அ.தி.மு.க. முன்னாள் ஒன்றியச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நூலகர் சித்திரைலிங்கம் மெய்நிகர் நூலகம் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பிரேம்குமார் நன்றி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
    • ரூ. 1000 பணத்தை வைத்து பல நல்ல புத்தகங்கள் வாங்கி என்னுடைய லட்சியப்படி நான் ஆட்சியராவேன்.

    தரங்கம்பாடி:

    உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப்பெண்" திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை சுற்றுச் சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்சிவ.வீ.மெ ய்யநாதன் வழங்கினார்.

    புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்று பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

    இது குறித்து மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி கயல்விழி கூறும்போது:-

    என் உடன் பிறந்தோர் மூன்று பெண்கள், நான் மூத்தப்பெண். என் போன்ற ஏழை மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் வரபிரசாதமாகும்.

    வறுமைக்கோட்டிற்கு கீழே வாழுகின்ற பெண்கள் வாட்டமின்றி, வருத்தமின்றி பட்டப்படிப்பு வரை மகிழ்வோடு பயில இயலும் உரிய – உயரிய அரசுப்பணிக்கு செல்லமுடியும். நான் ரூ. 1000-ம் பணத்தை வைத்து பல நல்ல புத்தகங்கள் வாங்கி என்னுடைய லட்சியப்படி நான் ஆட்சியராக ஆவேன் என்றார்.

    ஏ.வி.சி. கல்லூரி மாணவி ஹரினி கூறும்போது:-முதலமைச்சர் அவர்கள் வழங்கிய ரூ.1000-ம் பணத்தை நான் கல்விக்காக பயன்படுத்துவேன். மீண்டும் ஒருமுறை முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.கலைமகள் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ கூறு ம்போது

    புதுமைப்பெண் திட்ட த்தின் கீழ் ரூ.1000-ம் பெற்றுக்கொண்டேன். என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.
    • சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் 1958-ம் ஆண்டு நூலகம் தொடங்கப்பட்டது.

    நூலகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    கடந்த 2017-ம் ஆண்டு நூலகத்திற்கு சொந்தமான கட்டிடம் பழுதடைந்து இடிக்கப்பட்டது.

    அன்று முதல் வேதாரண்யம் பயணியர் மாளிகை செல்லும் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொழில் பயிற்சி கூடத்தில் நூலகம் இயங்கி வருகிறது.

    தற்போது இந்த கட்டிடமும் பழுதடைந்து மழை காலங்களில் தண்ணீர் உள்ளே வருகிறது.

    தற்போது நூலகத்தில் 45 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.

    இதில் 4,100 நபர்கள் உறுப்பினராகவும், 32 புரவலர்களும் உள்ளனர்.

    நாள்தோறும், இந்நூலகத்தில் 40 முதல் 100 பேர் வரை தினசரி மாத இதழ் மற்றும் நூல்களை படித்து வருகின்றனர்.

    மேலும், தமிழக அரசு நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான 1000-க்கும் மேற்பட்ட புத்தகங்களும் இந்த நூலகத்தில் உள்ளன.

    சிறிய கட்டடத்தில் நூலகம் இயங்குவதால் 45 ஆயிரம் புத்தகங்களை வைக்கவே இடம் போதுமானதாக உள்ளது.

    நிறைய வாசகர்கள் ஒரே நேரத்தில் படிக்க வந்தால் படிக்க முடியாமல் இடநெருக்கடியும் ஏற்படுகிறது.

    இதனால் வாசகர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    வேதாரண்யம் நூலகத்திற்கு வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முன்பு நூலகம் இயங்கிவந்த சுமார் 3000 ஆயிரம் சதுர அடி இடம் காலியாக உள்ளது.

    எனவே, வேறு ஒரு துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கும் நூலகத்திற்கு புதிதாக காலியாக உள்ள பழைய இடத்தில் நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என வாசகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெருந்தலைவர் காமராஜர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் கணிப்பொறி பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன.
    • பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    கடையம்:

    அகத்தியர், தேரையர் சித்தர் வழிபட்ட தோரண மலை முருகன் கோவில் தென்காசி மாவட்டம் கடையம் அருகில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமை அதிகாலையில் பக்தர்கள் மலை மீதிருந்து சுனை நீரை கலசத்தில் எடுத்து வந்து அடிவாரத்தில் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.இதனை அடுத்து விவசாயம் தழைக்க, விவசாயி செழிக்க வருண கலச பூஜையும் நடைபெற்று வருகிறது.

    இன்று அதிகாலை மலை அடிவாரம் மற்றும் மலை மீதுள்ள தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நாள் முழுதும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    தற்போது இந்த கோவிலின் அடிவாரத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகம் அமைய இருக்கிறது. அதை இப்பகுதி மாணவ மாணவிகள் பயன்படுத்தும் விதமாக புத்தகம் சேமிக்கும் பணிகள் நடக்கிறது.

    தோரணமலை அருகிலுள்ள மடத்தூர் மற்றும் சிவநாடானூர் கிராம பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது தலைமை ஆசிரியரோடு வருகை தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் விதமாக பெருந்தலைவர் காமராஜர், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு மற்றும் கணிப்பொறி பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக தோரணமலை கோவில் நிர்வாகம் சார்பாக புத்தகங்கள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு காலை, மதியம் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது

    நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் சேதுராமலிங்கம், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இன்பசேகரன், பாலன் தொழிலதிபர் கே.டி.ஆர். சுந்தர், பள்ளி நிர்வாகிகள் முருகன், சவந்திர பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பக ராமன் செய்திருந்தார்.

    மாணவர்களிடையே கைபேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்தும் நேரம் அதிகமாகி, புத்தகம் படிக்கும் பழக்கம் குறைவதை தடுத்து, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடந்தது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் தங்க.குழந்தைவேலு தலைமை வகித்தார்.
    • இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழுடன் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனார் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ -மாணவியர்களுக்கு பரிசளிப்பு பாராட்டு விழா நடைபெற்றது.கூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் தங்க .குழந்தைவேலு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில்ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுரு.பாண்டியன் , பள்ளிக் குழுத் தலைவர் தமிழரசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராமன்,பள்ளியின் முகவர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெருமன்ற அமைப்பின் மாவட்டத் தலைவர் கவிஞர் புயல் குமார், செயலாளர் அம்பிகாபதி, மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி, தலைமையாசியர் (பொ) உஷா, ஆசிரியர்கள் சத்தியசிவம், தருமலிங்கம், பூமிநாதன், கார்த்திகேயன், கவிஞர் கெளதம் - சுகிதா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழுடன் புத்தகம், எழுதுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print