என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தகங்கள்"

    • 5-ம் வகுப்பு படிக்கும் போது 2 நண்பர்களிடையே உள்ள ஒழுக்கத்தை விளக்கும் புத்தகத்தை எழுதினார்.
    • விஷ்வ தேஜா எழுதிய 3 புத்தகங்கள் பள்ளிப் பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் சின்னகோடு அடுத்த அனந்தசகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சந்தியா. தம்பதியின் மகன் விஸ்வ தேஜா (வயது 11). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    விஸ்வ தேஜா 4-ம் வகுப்பு படிக்கும் போது நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

    5-ம் வகுப்பு படிக்கும் போது 2 நண்பர்களிடையே உள்ள ஒழுக்கத்தை விளக்கும் புத்தகத்தை எழுதினார்.

    கடந்த ஆண்டு 18 புத்தகங்களை எழுதினார். இதுவரை 22 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

    விஷ்வ தேஜா எழுதிய 3 புத்தகங்கள் பள்ளிப் பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது. விளையாட்டின் போது பார்வை இழந்த ஒரு சிறுவனின் கதை, கனிம வளங்கள் முக்கியத்துவம் மற்றும் பல தகவல் தரும் கதைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
    • புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் 25 புத்தகங்களை வெளியிடுவதற்கும் விநியோகிப்பதற்கும் அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் உள்ளதாகக்கூறி 25 புத்தகங்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தடை விதித்தது. அவை பாரதிய நியாய சன்ஹிதா, 2023-ன் பிரிவு 98 கீழ் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அருந்ததி ராயின் 'ஆசாதி', அரசியல் எழுத்தாளர் சுமந்திர போஸ் எழுதிய 'காஷ்மீர் அட் தி க்ராஸ்ரோட்ஸ்' உள்ளிட்ட புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் உள்துறை, துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஆகஸ்ட் 5-ந்தேதி பிறப்பித்த உத்தரவில், இந்தப் புத்தகங்கள் ஜம்மு-காஷ்மீர் பற்றிய ஒரு தவறான கதையை பரப்புகின்றன என்றும், அது வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் இளைஞர்கள் பங்கேற்பதற்குப் பின்னால் குறிப்பிடத்தக்க உந்துசக்தியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

    தடைசெய்யப்பட்ட 25 புத்தகங்களும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 152, 196 மற்றும் 197 இன் கீழ் வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிவினைவாதத்தை ஊக்குவித்தல் மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவித்தல் தொடர்பானது. இந்த விதிகளின் கீழ், இந்த புத்தகங்களுடன் தொடர்புடைய அனைத்து பிரதிகள், ஆவணங்கள் மற்றும் பொருட்களை மாநிலத்திற்கு பறிமுதல் செய்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

    • அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.
    • வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது திராவிட மாடல் அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.

    புத்தகத்தில் உலகை படித்தால் அறிவு செழிக்கும், உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    புத்தகங்கள் - புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம் வாழ்ந்து பார்க்காத வாழ்க்கை, நாம் சந்திக்காத மனிதர்கள், நாம் பார்த்திராத காலம் என அனைத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல நண்பன்தான் புத்தகங்கள்.

    அதனால்தான், சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பெயரில் மாபெரும் நூலகங்களை எழுப்பி வருகிறோம்.

    மாவட்டந்தோறும் புத்தகக் காட்சிகள், இலக்கியத் திருவிழாக்கள், சொற்பொழிவுகள் என வாசிப்புப் பழக்கத்தைத் தீவிரமாக நமது #DravidianModel அரசின் சார்பில் ஊக்குவித்து வருகிறோம்.

    "புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும்.
    • புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின்

    புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய புத்தகங்களைக் கொண்டாட ஒரு தினம் அர்ப்பணிக்கப்படுகிறது.

    1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது.

    உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

    புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி, உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.

    உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    "ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்" என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.

    2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும். இந்தக் கருப்பொருள் குழந்தைகள் வாசிப்பை ஒரு வேலையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த பாணியில் அதைக் கண்டறிந்து, அதில் மகிழ்ச்சி காண ஊக்குவிக்கிறது.

    வாசிப்பை ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.

    மேற்கோள்கள்:

    புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின் 

    ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகானந்தர்

    ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - ஒரு நூலகம் கட்டுவேன் - மகாத்மா காந்தி

    எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சேகுவாரா

    இந்த உலகத்தை ஒழுக்கமற்றது என்று அழைக்கும் புத்தகங்கள்தான் உலகத்தின் அசலான வடிவத்தை நம்மிடையே காட்டுகிறது - ஆஸ்கர் ஒயில்ட்.

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புத்தக திருவிழா வில் இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது.

    சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    இந்த புத்தகத் திருவிழா வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறுகின்றது. இப்புத்தகக் கண்காட்சி யானது தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் புத்தகத் திருவிழா வினை இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    இங்கு தினமும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 9-ம் நாளான இன்று காலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் ஸ்பெல் பீ போட்டி, பென்சில் ஓவியப்போட்டிகள் மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும், கலைமாமணி மைக்கேல் வழங்கும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, கராத்தே நிகழ்ச்சி மற்றும் திருச்செங்கோடு டாக்டர்.ஜெயக்குமாரின் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெற வுள்ளது.

    மாலையில் சேலம் பெரி யார் பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் "காலநிலை மாற்றம்" என்ற தலைப்பிலும், கவிஞர் ஆத்தூர் சுந்தரம் "தட்டி எழுப்பும் தாலாட்டுகள்" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள். 

    • கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம்.
    • 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் செம்மொழி நூலகத்தினை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் எம்.பி. இன்று திறந்து வைத்தார்.

    பின்னர் எஸ் .எஸ். பழநிமாணிக்கம் தெ எம்.பி. கூறியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவினை வளர்க்கவும்.

    அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அடைவதை நோக்கமாக கொண்டும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபிரனர் மற்றும் சிறுபான்மையினர் நல துறையின் கீழ் இயங்கிடும் 259 கல்லூரி விடுதிகளில் விடுதி ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் என்ற பெயரில் 250 நூலகங்களை அமைத்திட இந்த 1 லட்சம் ரூபாயில் ரூ.50,000- செலவில் புத்தகங்களையும் ரூ.50,000- செலவில் தளவாட சாமான்களையும் அரசால் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரயினர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கட்டுப்பாட்டில் உள்ள 18 கல்லூரி விடுதிகளில் ரூ. 18 லட்சம் செலவில் செம்மொழி நூலகம் திறக்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் ஆங்கில அறிவை வளர்க்கும் புத்தகங்கள் , உலகளாவிய தலைவர்கள் குறித்த புத்தகங்கள், தொழில் மற்றும் திறன் வளர்ச்சி சார்ந்த புத்தகங்கள், பொது அறிவு சார்ந்த புத்தகங்கள், மாணவ மாணவியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் புத்தகங்கள் போன்ற பல்வேறு புத்தகங்கள் இவ்நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

    கல்லூரி மாணவ மாணவிகள் இடையே வாசிப்புத்திறனை மேம்படுத்திடவும் அதேபோல் புத்தகம் வாசிக்கும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகப்ப டுத்தும் நோக்கத்துடனும் இந்த நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் , துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர்உஷா புண்ணியமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ரேணுகாதேவி, விடுதி காப்பாளர் தெய்வநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.
    • கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    குத்தாலம்:

    யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர்.

    கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள்.

    இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தேரழுந்தூர்.

    இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் 93-ஆம் ஆண்டு கம்பர் விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.

    தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயிலில் கம்பர் வழிபாடு நடைபெற்றது.

    தொடர்ந்து கம்பர் இயற்றிய கம்பராமாயண புத்தகங்களையும், சீர் வரிசைகளையும் தமிழ் அறிஞர்கள் தங்கள் தலைகளில் சுமந்து வீதி உலாவாக கம்பர் கோட்டத்தை அடைந்தனர்.

    அங்கு அமைந்துள்ள கம்பர் சிலையின் முன்பு தமிழர்கள் அவருக்கு புகழாரம் சூட்டி பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தமிழறிஞர்கள் வழக்காடு மன்றம், சொற்பொழிவு, உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு கம்பரின் புகழ்பாடினர்.

    இதில், எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் சிவக்கொழுந்து, உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், புதுக்கோட்டை கம்பன் கழகம் ராமசாமி, ராமச்சந்திரன், ராமேஸ்வரம் கம்பன் கழக தலைவர் முரளிதரன், தேரழுந்தூர் முத்துசானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.
    • ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை:

    மதுரை மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காக சிறை நிர்வாகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கைதிகளுக்கு கைத்தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன.

    அவர்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களை விற்க சிறை வளாகத்தில் அங்காடி உருவாக்கப்பட்டு உள்ளது. மதுரை மத்திய ஜெயிலுக்குள் ஸ்டேஷனரி பொருட்கள், நெசவு, விவசாய உற்பத்தி உள்பட பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சென்னை புழல் சிறையைத் தொடர்ந்து, மதுரை மத்திய ஜெயிலிலும் கைதிகளின் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து 1 லட்சம் புத்தகங்களை பெறுவது என்று ஜெயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    மதுரை மத்திய ஜெயில் நூலகத்திற்கு பொதுமக்களிடம் இருந்து இதுவரை சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பெறப்பட்டு உள்ளன.

    சிறைத்துறை டி.ஐ.ஜி முருகேசன் தலைமையிலான குழுவினர் முகாமிட்டு புத்தகங்களை சேகரித்து வருகின்றனர். 'புத்தக திருவிழா முடிவதற்குள் சுமார் 1 லட்சம் புத்தகங்களை பொதுமக்களிடம் இருந்து நன்கொடையாக பெற முடியும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

    இந்தநிலையில் மதுரை கூடல்நகர், ரெயிலார் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த நெசவு தொழிலாளி பாலகிருஷ்ணன் (வயது 92) என்பவர் மதுரை மத்திய ஜெயிலுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் "தன்னிடம் உள்ள 300 புத்தகங்களை, ஜெயில் நூலகத்திற்கு இலவசமாக வழங்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேலும் வயது முதிர்வு காரணமாக தன்னால் நேரில் வர முடியாது. அதனை நேரில் வந்து பெற்றுச்செல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மதுரை மத்திய ஜெயிலில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் பாலகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று அவரிடம் இருந்து 300 புத்தகங்களை பெற்றுக்கொண்டனர்.

    ஜெயில் கைதிகளுக்காக சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வழங்கிய பாலகிருஷ்ணனுக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். இதுபற்றி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    வள்ளலார் கொள்கையில் ஈடுபாடு ஏற்பட்டு, ஏராளமான புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன். ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை வாங்கி, வீட்டில் நூலகம் அமைத்து பராமரித்து வந்தேன். எனக்கு புத்தகங்களே சொத்து, பொழுதுபோக்கு, வெளியில் யாரை பார்க்கச் சென்றாலும், என்னை பார்க்க வருவோருக்கும் புத்தகமே பரிசாக அளிப்பேன்.

    என்னிடம் சுமார் 1500 புத்தகங்கள் உள்ளன. அவற்றை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போது தான் மதுரை சிறைச்சாலையில் நூலகம் அமைப்பது தெரியவந்தது. அதனால் என்னிடம் இருந்த 300 புத்தகங்களை வழங்கி உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.
    • மக்கள் புத்தகங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை,

    தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள், பெண்கள் சிறைகளில் கைதிகளின் பயன்பாட்டுக்காக நூலகங்கள் உள்ளன.

    இங்கு சுழற்சி முறையில் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு கைதிகள் படிப்பதற்காக வைக்கப்படுகின்றன. கோவை மத்திய சிறை வளாகத்திலும் நூலகம் உள்ளது. இந்தநிலையில் சிறைத்துறை டி.ஜி.ப.அமரேஷ் பூஜாரியின் உத்தரவின் பேரில் கைதிகளின் பயன்பாட்டுக்காக புத்தகங்கள் தானம் பெறும் கூண்டுக்குள் வானம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூரில் சமீபத்தில் நடந்த புத்தக திருவிழாவில் சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்வதற்கான அரங்கு அமைக்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களால் தானமாக வழங்கப்பட்டதாக சிறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் எதிரே சிறைத்துறைக்கு சொந்தமான பெட்ரோல் பல்க் வளாகத்தில் புத்தக தானம் பெறுவதற்கான மையம் அமைக்கப்பட்டு உள்ளது. சிறைவாசிகளின் நலனுக்காக புத்தக தானம் வழங்க விரும்பும் பொது மக்கள் புத்த கங்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது . 

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம்
    • இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்து, புத்தகத்திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி தொடங்கிய புத்தக திருவிழா நேற்று வரை தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாளும் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தக அரங்குகளை பார்வை யிட்டதோடு, தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கி பயனடைந்துள்ளனர்.

    வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறையில் எண்ணும், எழுத்தும் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்டம், சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் நமது சமுதாயத்தை குறிப்பாக, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும். புத்தகம் வாசிப்பானது நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு பெரிய பங்கு வகிப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை புத்தகம் வாசிப்பதில் ஊக்குவிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் மாணவ-மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மாவட்ட மைய நூலகம் பல்லாயிரக்கணக்கான அறிவுசார்ந்த நூலகங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை போல் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் 21 கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் மொத்தம் 109 கிராமபுற நூலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    தற்போதைய தொழில்நுட்பவியல் காலத்தில் மாவட்ட மைய நூலகங்கள் டிஜிட்டல் மையமாக மாற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட மைய நூலகம் முழுமை யாக கணினி மயமாக்கப்பட் டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இளைய தலை முறையினர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசினையும், வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சிறந்த படைப்பாளிகள் மற்றும் நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்புகழேந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, தாசில்தார்கள்ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), வினை தீர்த்தான் (தோவாளை), தனிவட்டாட்சியர் கோலப்பன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    • அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • பரிசு கிடைக்கவில்லை என்றாலும் மாணவர்கள் சோர்வடைய தேவையில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் புனித ஜோசப் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ ர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. அதனை கலெக்டர் வினீத் தலைமையில், சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கான்ஸ்ட ன்டைன் ரவீந்திரன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது:-

    தலை நிமிரும் தமிழகம் என்றலட்சியத்தை தமிழகக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.பேச்சுப் போட்டிக்கு தயாராகும் மாணவர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்கள் தான். போட்டியில் கலந்து கொண்டு பரிசு கிடைக்கவில்லை என்றாலும்மாணவர்கள் சோர்வடைய தேவையி ல்லை. எனவே, அனைத்து மாணவர்களும்தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். புத்தகங்களை அதிகம் படிக்க வேண்டும் என்பது எனதுவேண்டுகோள். எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூல்நிலையங்களுக்கு சென்றுஅறிவு சார்ந்த புத்தகங்களை படியுங்கள். நல்ல நூல்களை படிக்கும் போது தான்நமக்குரிய சிறந்த அனுபவங்கள் கிடைக்கும். பேரறிஞர் அண்ணா நல்லபுத்தகங்கள் தான் நல்ல நண்பன் என்பார்கள். அந்தளவிற்கு மாணவர்களாகிய நீங்கள்அ வசியம் புத்தகங்களை படிக்க வேண்டும்.

    புத்தகம் வாசிப்பு மற்றும் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. மாணவ,மாணவிகள் எந்த தேர்வாக இருந்தாலும் சரி அல்லது இது போன்ற போட்டியாகஇருந்தாலும் சரி வாய்ப்பை இழக்கும் பொழுது சோர்வடைந்து விடாமல் எந்தசூழ்நிலைக்கும் ஆட்படாமல் இலட்சியத்தை அடையும் வரையிலும் முயற்சி செய்யுங்கள்.மாணவர்களாகிய நீங்கள் விடாமுயற்சியுடன் நீங்கள் போட்டி தேர்வை எதிர் கொண்டுவாழ்வில் மேன்மையடைய வாழ்த்துகிறேன் என்றார். மாநில சிறுபான்மையினர் நல வாரிய உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்ததாவது:-

    இந்திய மொழிகளில் 114நாடுகளில் தமிழ்மொழி பேச்சு மொழியாக இருக்கிறது. மாணவர்கள் ஆகிய உங்களுக்குகொடுக்கப்பட்ட தலைப்புகளில் மற்றவர்கள் சிந்தித்து பார்கின்ற அளவிற்குஉங்களுடைய பேச்சுக்கள் இருக்க வேண்டும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ் பற்றுடன் இருத்தல் வேண்டும். மாணவர்கள் பேச்சுப்போட்டிகளில் சிறந்து விளங்கவேண்டும் என்றால் அதிகளவில் நூலகங்களுக்கு சென்று நல்ல புத்தகங்களை யெல்லாம்சேகரித்து படிக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்ப னவர், துணை மேயர் பாலசுப்பிரமணியன் , திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், 3-ம் மண்டலத்த லைவர்கோவி ந்தசாமி, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி செயலர் குழந்தைதெரஸ் ,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் மற்றும்கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன்கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.
    • இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் நிலையத்தில்புகார் தாரர்கள் மற்றும் பொது மக்கள் காத்திருப்பதற்காக புதிதாக நுாலகத்துடன் கூடிய வரவேற்பறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நடந்தது. இதில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா கலந்துகொண்டு நூலகத்துடன்கூடிய வரவேற்பறையை திறந்து வைத்து பேசினார்.

    இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டிபோலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். திறப்பு விழாவில் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரண்யா, தங்கவேலு, புஷ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்த புதிய நூலகத்தில் பயனுள்ள புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    ×