search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் புத்தகத் திருவிழாவில் இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
    X

    சேலம் புத்தகத் திருவிழாவில் இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புத்தக திருவிழா வில் இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது.

    சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தகத் திருவிழாவினை அமைச்சர் கே.என். நேரு கடந்த 20-ந்தேதி தொடங்கி வைத்தார்.

    இந்த புத்தகத் திருவிழா வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெறுகின்றது. இப்புத்தகக் கண்காட்சி யானது தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் புத்தகத் திருவிழா வினை இதுவரை சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இதுவரை ரூ.1.50 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட் டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் 456 புத்தகங்கள் ரூ.63,578/-க்கு விற்பனை செய்யப் பட்டுள்ளன.

    இங்கு தினமும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், 9-ம் நாளான இன்று காலை பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் ஸ்பெல் பீ போட்டி, பென்சில் ஓவியப்போட்டிகள் மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும், கலைமாமணி மைக்கேல் வழங்கும் டிரம்ஸ் இசை நிகழ்ச்சி, கராத்தே நிகழ்ச்சி மற்றும் திருச்செங்கோடு டாக்டர்.ஜெயக்குமாரின் சாக்ஸஃபோன் இசை நிகழ்ச்சியும் நடைபெற வுள்ளது.

    மாலையில் சேலம் பெரி யார் பல்கலைக்கழ கத்தின் துணை வேந்தர் ஜெகநாதன் "காலநிலை மாற்றம்" என்ற தலைப்பிலும், கவிஞர் ஆத்தூர் சுந்தரம் "தட்டி எழுப்பும் தாலாட்டுகள்" என்ற தலைப்பிலும் பேசுகிறார்கள்.

    Next Story
    ×