என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Book Day"

    • 2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும்.
    • புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின்

    புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அத்தகைய புத்தகங்களைக் கொண்டாட ஒரு தினம் அர்ப்பணிக்கப்படுகிறது.

    1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது.

    உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

    புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி, உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.

    உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    "ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்" என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.

    2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும். இந்தக் கருப்பொருள் குழந்தைகள் வாசிப்பை ஒரு வேலையாகப் பார்ப்பதற்குப் பதிலாக, தங்கள் சொந்த பாணியில் அதைக் கண்டறிந்து, அதில் மகிழ்ச்சி காண ஊக்குவிக்கிறது.

    வாசிப்பை ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட அனுபவமாக மாற்றுவதன் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது.

    மேற்கோள்கள்:

    புரட்சிப் பாதையில் கைதுப்பாக்கிகளை விட பெரிய ஆயுதம் புத்தகம் மட்டுமே - லெனின் 

    ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும் - விவேகானந்தர்

    ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? - ஒரு நூலகம் கட்டுவேன் - மகாத்மா காந்தி

    எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சேகுவாரா

    இந்த உலகத்தை ஒழுக்கமற்றது என்று அழைக்கும் புத்தகங்கள்தான் உலகத்தின் அசலான வடிவத்தை நம்மிடையே காட்டுகிறது - ஆஸ்கர் ஒயில்ட்.

    • ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது.
    • புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக புத்தக தினத்தை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:-

    ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது!

    அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம்.

    புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் நடைபெற்றது,
    • மாணவர்களின் முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு என்னும் தலைப்பில் பேசினார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நூலகத் துறை சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.

     உலக புத்தக தினத்தை யொட்டி மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவ நூல்கள் எனும் தலைப்பில் வினாடி வினா போட்டி மணக்குள விநாயகர் அறக்கட்டளை தலைவர் தனசேகரன் , துணைத் தலைவர் சுகுமாரன் , செயலாளர் நாராயணசாமி , மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. நூலகர் இளங்கோவன் வரவேற்று பேசினார்.

    மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயக்குனர் ராஜகோவிந்தன் , முதல்வர் டாக்டர் காக்னே மற்றும் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் ய பேசினார்கள்.

    புதுவை பல்கலைக் கழக நூலகர் விஜயகுமார் மாணவர்களின் முன்னேற்றத்தில் நூலகத்தின் பங்கு என்னும் தலைப்பில் பேசினார்.

    மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் சான்றி தழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசி ரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    லட்சுமி காந்தன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நூலகத்துறை சார்பில் துணை நூலகர் ஆனந்தன் மற்றும் நூலக ஊழியர்கள் செய்தி ருந்தனர்.

    • புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது.
    • மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.

    மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

    புத்தக வாசிப்பால் கிடைக்கும் அளவற்ற மகிழ்ச்சியை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்தினால் எழுத்து மீதான ஆர்வம் தூண்டப்பட்டு அவர்களின் எழுத்துகளை பின்னாளில் பிரசுரிக்கவும் உதவும் என நம்பப்படுகிறது.

    புத்தகம் வாசிப்பதன் மூலம் மனிதர்களுக்கு ஏராளமான நன்மைகள், கல்வி அறிவு , புரிதல் ,தெளிவு கிடைக்கிறது. மனிதர்களை புதிய உலகத்துக்கு புத்தகங்கள் அழைத்து செல்கின்றன.




    உலக புத்தக தினம் 1995 -ம் ஆண்டு ஏப்ரல் 23 - ந்தேதி முதன் முதலாக கொண்டாடப்பட்டது, அன்றைய தினம் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் மக்கள் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை தற்போது மேம்படுத்தி வருகிறார்கள்.வாசிப்பின் சக்தியை மக்கள் அடையாளம் காண இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

    உலகம் முழுவதும் உள்ள எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் விதமாக உலக புத்தக தினம் யுனெஸ்கோ சார்பில் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் வாசிப்பு மீதான காதல், எழுத்து மீதான ஆர்வம், மொழிப்பெயர்ப்பு, ஆகியவற்றை ஊக்கப்படுத்துவது இதன் நோக்கம்.


    ஒரு மனிதனுக்கு புத்தகம் சிறந்த தோழன் ஆக உள்ளது. உலகின் சிறந்த எழுத்தாளர்களான வில்லியம் சேக்ஸ்பியர், பிரபல ஸ்பானிஷ் வரலாற்று ஆசிரியர் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரின் நினைவு நாளாக இது அமைந்துள்ளது.

    புத்தக வாசிப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் யுனெஸ்கோ, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலக்கிய பரிசுகளை வழங்கி வருகிறது.




    இந்த தினத்தில் புத்தகங்களை நன்கொடையாக வழங்குங்கள். நூலகங்கள், பள்ளிகள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக கொடுங்கள். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க நண்பர்கள், உறவினர்களுக்கு உதவிடுங்கள்

    • இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.
    • கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

    புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்!

    புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.

    கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    ×