search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "M. P. Saminathan"

    • முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
    • காங்கயம் வட்டார மருத்துவமனை தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.

    காங்கயம் :

    காங்கயம் அருகே சம்மந்தம்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். விழாவில் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கி பேசியதாவது:- முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு மக்களின் மருத்துவ தேவையை அறிந்து 2 தலைமை மருத்துவமனை தந்திருக்கிறார். அதில் ஒன்று காங்கயம் வட்டார மருத்துவமனை தற்போது ரூ.12 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தேவையாக புதிய கட்டிடம் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டும் பணி நடைபெற்று கொண்டுள்ளது. படியூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார மையம் வேண்டும் என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தாராபுரம் தாலுகா வடசின்னாரி பாளையம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த 41 பேருக்கும், வருவாய்த் துறையின் சார்பில் வெள்ளகோவில் நகராட்சி பகுதியைச் சேர்ந்த 6 பேருக்கும், சின்னமுத்தூர் கிராம பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 48 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு காங்கயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சி, சென்னிமலை சாலை, நல்லிகவுண்டன் வலசு பகுதியில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்சசியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல. பத்மநாபன், குண்டடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவ.செந்தில்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் ராசி முத்துக்குமார், வெள்ளகோவில் நகரதி.மு.க. செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 4700 நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் :

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், முத்தூர்பேரூராட்சி, மகாலட்சுமி நகரில் மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம்மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில்நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட மேம்பாட்டுப் பணிகளைபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது :- வெள்ளகோவில் நகராட்சியில் 2022-23ம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டு தீத்தாம்பாளையம் மற்றும் தண்ணீர்பந்தல் ஆகிய பகுதியில் 1 லட்சம்கொள்ளளவு கொண்ட மேல்நிலை த்தொட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்தமேல்நிலைத் தொட்டியிலிருந்து சுமார் 1150 குடியிருப்புகளில் வசிக்கும் 4700 நபர்களுக்குநாள் ஒன்றுக்கு 270 லிட்டர் வீதம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

    முத்தூர் பேரூராட்சி மகாலட்சுமி நகரில்மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.35லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்பூங்காவை திறந்து வைத்தும், வெள்ளகோவில் நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ்தீர்த்தாம்பாளையம் மற்றும் தண்ணீர் பந்தலில் ரூ.36.44 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்ட மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தேன் என்றார். இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர்குமரேசன்,வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், வெள்ளகோவில் நகராட்சிபொறியாளர் மணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

     காங்கயம் :

    திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.20.30 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.41.53 கோடியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி பகுதியில் குடிநீர் மேம்பாட்டுப்பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பதுமன் குளம் மேம்பாட்டு பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிக்குட்பட்ட மூர்த்திரெட்டிபாளையம் பகுதியில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், கோட்டைமேடு பகுதியில் ரூ.7.10 லட்சத்தில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், ஏ.சி.நகரில் ரூ.5.20 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், காங்கயம் நகராட்சி தண்ணீர் தொட்டி வீதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.37.49 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளையும், பதுமன் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பதுமன்குளம் மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், ஆணையாளர் வெங்கடேஸ்வரன், காங்கயம் தி.மு.க நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 1981 ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது.
    • கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.

    குண்டடம் :

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது :- குண்டடம் ஊராட்சி ஒன்றியம், வடசின்னாரிபாளையம் ஊராட்சி, குங்காருபாளையத்தில் ரூ.4.06 கோடி மதிப்பீட்டில் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கம் 1981 ம் ஆண்டு 6040 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்டது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 268.04 மில்லியன் கன அடியாகும்.

    வட்டமலைக்கரை ஓடையானது அமராவதி ஆற்றின் கிளை ஆறு ஆகும். இந்தஓடை பல்லடம் பொள்ளாச்சி சாலையில், அனுப்பட்டி கிராமத்தில் தொடங்கி 60 கி.மீ பயணித்து அமராவதி ஆற்றில் கலக்கிறது.

    இத்தடுப்பணையானது 50 மீட்டர் நீளத்திலும், 1.5 மீட்டர் உயரத்திலும், சுமார் ஒரு நிரப்புக்கு 0.50 மில்லியன் கனஅடி வீதம் மொத்தம் 3 நிரப்புகளுக்கு 1.50 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்தடுப்பணை கட்டப்படுவதால் மேற்படி சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 704 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனம் பெறும். மேலும் இத்தடுப்பணையின் 1 கி.மீ சுற்றளவில் உள்ள 56 கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். இதனால் விவசாய உற்பத்தி மற்றும் குடிநீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.  

    • 1 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் காங்கயம் ஒன்றியம் சிவன்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 61 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 43 ஆயிரத்து 400 பேரும், மக்களை தேடி மருத்துவத்தின் கீழ் 18 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு 1 லட்சத்து 99 ஆயிரம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மூலம் 1,298 பேர் பயனடைந்துள்ளனர்.

    டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பேறுகால முன் கவனிப்பு, பிரசவம் மற்றும் அனைத்து தடுப்பூசிகளும் பெறப்படும் தாய்மார்களுக்கு ரூ.18 ஆயிரம், 5 தவணைகளாக வழங்கப்படுகிறது. ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. 2021- 2022 ம் ஆண்டில் 40 ஆயிரத்து 798 கர்ப்பிணி தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர்.

    2021-2022 -ம் ஆண்டு மற்றும் 2022-2023-ம் ஆண்டில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 19 மாணவ-மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 7 ஆயிரத்து 286 கண் பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு விலையில்லா கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமார், காங்கயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் டி.மகேஷ்குமார், துணை தலைவர் ஜீவிதா ஜவகர், காங்கயம் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.துரைசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோய் மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி ரூ.5 கோடி மதிப்பிலும், 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், ஒரு லினியர் ஆக்ஸிலரேட்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், தன்னார்வலர்கள், அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் 33 சதவீதமும் திரட்டி ரூ.60 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல்கட்டமாக மருத்துவ உபகரணங்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நமது தொகையை செலுத்தி அரசின் பங்குத்தொகையையும் செலுத்தி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் மொத்த தொகையையும் செலுத்தி மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பாக இதுவரை ரூ.4½ கோடி நிதி வந்துள்ளது. மீதமுள்ள நிதியை திரட்ட அனைத்து தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேயர் தினேஷ்குமார் பேசும்போது, புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும். அவற்றை பெற்று முதல்கட்டமாக கட்டிட பணிகளை தொடங்கி விட்டால் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து நிதி அளிப்பார்கள். அதனால் கட்டிட பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றார்.கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ரூ.10 லட்சம், மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினார்கள். அனைத்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.10 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்று அதில் மாற்றுத்திறனாளிளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் இளங்குமரன், திருப்பூர் பிரிண்டிங் அசோசியேசன் தலைவர் ஸ்ரீகாந்த், சைமா சங்க பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ், பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி, நிட்மா சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், அரிமா சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.

    • வெள்ளகோவிலில் விலையில்லா பட்டா மற்றும் நல வாரிய புதிய பதிவு அட்டை வழங்கும் விழா திருப்பூர்மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்றது.
    • ரூ.74 லட்சம் மதிப்பிலான திடப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் விலையில்லா பட்டா மற்றும் நல வாரிய புதிய பதிவு அட்டை வழங்கும் விழா திருப்பூர்மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் திருப்பூர் தொழிலாளர் நல உதவி ஆணையர்ராஜ்குமார் வரவேற்று பேசினார்.விழாவில் நலவாரிய புதிய பதிவு அட்டைகளை 47 பேருக்கும், நலவாரிய மாத ஓய்வூதிய ஆணைகளை 53 பேருக்கும், வருவாய் துறை சார்பில் 38 பேருக்கு விலை இல்லா வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 5 பேருக்கு விதவை உதவித்தொகைகளை வழங்கினார்.

    பச்சாபாளையம் ஊராட்சியில் கதிரடிக்கும் தளம் அமைத்தல், பள்ளிகளுக்கு கழிவறை கட்டுதல், வாகன நிறுத்தம், கிராம பகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட17 பணிகளுக்கு மொத்தம் ரூ.74 லட்சம் மதிப்பிலான திடப்பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஏ லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியர் குமரேசன், காங்கேயம் தாசில்தார் புவனேஸ்வரி, வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் மு.கனியரசி, வெள்ளகோவில் ஒன்றிய திமுக செயலாளர் மோளகவுண்டன் வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், லக்மநாயக்கன்பட்டி கிராம ஊராட்சி மன்ற தலைவர் சேடன் குட்டை பழனிச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் அழகரசன், ஆதவன் ஜெகதீஷ். வி.சிவகுமார்,எஸ்.பி. சக்திவேல், அருள்மணி உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    • அதிகாலை 4 மணி அளவில் தொடங்கும் வியாபாரம் 8 மணி வரை நடைபெறும்.
    • அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர்.

     திருப்பூர் :

    திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதிகாலை 4 மணி அளவில் தொடங்கும் வியாபாரம் 8 மணி வரை நடைபெறும் . இதில் காய்கறிகளை வாங்க திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று அதிகாலை மாநில செய்தி துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வியாபாரத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தென்னம்பாளையம் உழவர் சந்தையில் தெருவிளக்கு , குடிநீர் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட செய்தித்துறை அமைச்சர் பொதுமக்களிடமும் அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும் தென்னம்பாளையம் உழவர் சந்தை அலுவலகத்தில் ஆய்வு செய்ததுடன் விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யும் முறை ஆகியவற்றையும் கேட்டறிந்தார் .

    இந்த ஆய்வின் போது தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் , மாவட்ட கலெக்டர் வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது.
    • செய்தித்துறை அமைச்சர் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

    ஊத்துக்குளி :

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர் திறன் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஊத்துக்குளி ஒன்றியக்குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுகுட்டி, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் ராசுகுட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மகளிர் திட்ட இயக்குனர் மதுமதி, ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்திலட்சுமி, ஜோதிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முகாமை தொடங்கி வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், திறன் சேர்க்கை பயிற்சி ஆணைகள் மற்றும் உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் மற்றும் செவித்திறன் குறைந்த மாணவர்களுக்கு காதொலி கருவிகளை வழங்கி பேசினார். மேலும் ஊத்துக்குளி சர்க்கார் காத்தாங்கண்ணி ஊராட்சி பாப்பம்பாளையத்தில் ரூ.14.20 லட்சத்தில் பால் கொள்முதல் மைய கட்டிடம், ரூ.11 லட்சத்தில் ஊத்துக்குளி பேரூராட்சி பூங்கா சுண்டக்காம்பாளையம் ஊராட்சி புதுவலசில் ரூ.9.08 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம், குறிச்சியில் ரூ 15.25 லட்சத்தில் பொது வினியோக கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தும்,ரூ.1.25 கோடியில் ஊத்துக்குளி ஆர்.எஸ்.முதல் வேலம்பாளையம் வரை தார் சாலை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் தொடங்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    ×