search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kabaddi"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றிபெற்றவர்களும் கோப்பையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    பாரதிதாசன் பல்கலை க்கழக அளவிலான கல்லூரி களுக்கு இடையேயான மகளிர் கபடி போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் 26 கல்லூரிகள் கலந்து கொண்டன.

    இதில் மன்னார்குடி அடுத்த மேலவாசல் குமாரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 4 சுற்றுகளில் வென்று இறுதி சுற்றில் 2-ம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இதில் மாணவிகள் அட்சயா, சவுமியா, சரண்யா ஆகியோர் பல்கலைக்கழக பெண்கள் கபடி அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை தலைவர் காளிதாஸ் கோப்பையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

    வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி நிறுவனர் சதாசிவம், முதல்வர் நாகரெத்தினம், உடற்கல்வி இயக்குனர் சசிரேகா ஆகியோர் பாராட்டினர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 4-ம் இடம் பிடித்தது.
    • இறுதி போட்டியில் வெற்றிபெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச்சென்றது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி அக்.27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில், சென்னை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40-க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு, தி.மு.க. மாவட்ட செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், முன்னாள் எம்எல்ஏக்கள் குத்தாலம் க.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் க.அறிவுச்செல்வன் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தார். ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் வரவேற்றார்.

    முதல்நாள் போட்டியை மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம் துவக்கி வைத்தார்.நாக்-அவுட் முறையில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணியும் வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணியும் மோதின. இதேபோல், சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின. போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

    இப்போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசினார்.

    தொடர்ந்து நடைபெற்ற போட்டியின் முடிவில், தமிழ்நாடு காவல்துறை அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று ரூ.1 லட்சம் ரொக்க பரிசை தட்டிச் சென்றது.

    சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ 70ஆயிரம் ரொக்கப் பரிசினையும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்து ரூ 60,000 ரொக்க பரிசினையும், திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடம் பிடித்து ரூ. 40,000 ரொக்க பரிசை பெற்றன. மேலும் காலிறுதிப் போட்டியில் வெளியேறிய நான்கு அணிகளுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    பரிசுகளை திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ வழங்கி பாராட்டி பேசினார்.

    இதில், முன்னாள் எம்எல்ஏக்கள் சத்தியசீலன், ஜெகவீரபாண்டியன், மாவட்ட துணை செயலாளர்கள் ஞானவேலன், செல்வமணி மற்றும் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின .
    • ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று 15 வயது முதல் 25 வயது வரையிலான மாணவ- மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின .

    முதல் நாளான இன்று ஆண்களுக்கான கைப்பந்து , கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண் .ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி.

    உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், விளையாட்டு பயிற்சியாளர் பாபு மற்றும் ஆசிரிய , ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளை பெண்களுக்கான கையுந்து விளையாட்டு போட்டிகள், கால்பந்து போட்டிகள் 26-ந் தேதியும் நடைபெறும்.

    இதேபோல் ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு கையுந்து பந்து விளையாட்டு போட்டிகள் ( ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.15000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    கால்பந்து போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.25000, 2-ம் பரிசாக ரூ.20000, 3-ம் பரிசாக ரூ.10000 வழங்கப்படும். கபடி போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.20000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன.
    • 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பயங்காடு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

    போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இறுதி ஆட்டமானது நேற்று நடை பெற்றது.

    இதில் சென்னை சாய் கபடி அணி முதல் இடத்தை பிடித்து, ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வென்றது.

    தொடர்ந்து, 2-ம் இடத்தை தமிழ்நாடு வனத்துறை காவல்துறை அணியும், 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.

    போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போட்டிகளில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி (சி.பி.எஸ்.இ)பள்ளியில் மாவட்ட அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே கபடி போட்டி நடைபெற்றது.

    போட்டிகளில் தமிழ்நாட்டின் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டத்தலுள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளைச் சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத்தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமை வகித்தார்.

    ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் . ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    போட்டிகள் 12 வயதிற்குட்பட்டோர், 15 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் என 3 நிலைகளில் போட்டி நடைபெற உள்ளது. விளையாட்டுப் போட்டிகளை ரம்யா சத்தியநாதன் கல்விக் குழும தலைவர் சத்தியநாதன் தொடக்கி வைத்தார். போட்டிகள் சி.பி.எஸ்.இ. வாரியத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகம் முழுவதிலும் இருந்து 900-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஆண்கள் பிரிவில் 9 பேரும், பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கபடி பயிற்சியாளர்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ப டாத சூழல் இருந்தது.

    இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடப்பு 2023 - 24-ம் ஆண்டிற்கான கபாடி வீரர்கள் தேர்வு நேற்று சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இதனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில தலைவர் சோலை என்.ராஜா பங்கேற்று துவக்கி வைத்தார்.

    மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 900 பேர் போட்டிகளுக்கான தேர்வில் பங்கேற்றனர்.

    தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தற்போது மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு நாள் நடைபெறும் இந்த தேர்வில் ஆண்கள் பிரிவில் 9 பேரும் , பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் தகுந்த சான்றுகளை சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்றனர்.

    பின்னர் பேசிய மாநில தலைவர் ராஜா கபடிக்கு என்று இங்கு பிரத்தியேகமாக நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்ஸலென்ஸ் அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி அமைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.

    பேட்டியின் போது நகர மன்ற கவுன்சிலர் ரஜினி உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.
    • தொடாந்து, ஏனங்குடி அணியினர் 3-து பரிசும், கல்லார் அணியினர் 4-வது பரிசும் பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் ஈஷா கிராமோத்சவம் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் நடத்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியில், திருமருகல் ஆலங்குடி, நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பெரியதும்பூர், நாகூர், நாகை வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவை சேர்ந்த 40, அணி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    திருமருகல் மற்றும் ஆலங்குடி வீரர்களுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதைப்போல் நாகை மற்றும் வேதாரண்யம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் நாகை அணியினர் கூடுதல் வெற்றி புள்ளிகள் பெற்று வேதாரண்யம் அணியினரை தோற்கடித்தனர்.

    இதில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் அணியினர், செப்டம்பர் மாதம் திருச்சி மற்றும் கோவையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நம்பியார் நகர் முதல் பரிசு, கீச்சாங்குப்பம் 2-வது பரிசு, ஏனங்குடி 3-து பரிசு, கல்லார் 4-வது பரிசு பெற்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. இளைஞரணி சார்பில் கபடி போட்டி நடந்தது.
    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் தி.மு.க. வடக்கு மாவட்ட இளை ஞரணி, சோழவந்தான் பேரூர் இளைஞர் அணி சார்பாக சோழவந்தானில் 2 நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற அணி யினருக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.

    இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழ வந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் சத்ய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணை செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி, ஸ்டாலின், குருசாமி, செல்வராணி, ஜெயராமச்சந்திரன், நிஷா, கவுதம ராஜா, முத்துச் செல்வி, சதீஷ், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன்.

    வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பால் கண்ணன், பேரூர் இளைஞ ரணி செய லாளர் முட்டை கடை காளி, குருவி த்துறை அலெக்ஸ், மில்லர், தவம், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தார்.
    • ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர். அணியும் விளையாடியது.

    திசையன்விளை:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளை அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண்- பெண் மின்னொளி கபடி போட்டி நேற்று இரவு தொடங்கியது.

    போட்டி தொடக்கம்

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி போட்டியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து விளையாட்டு, வீரர்களை ஆர்.எஸ்.பாரதிக்கு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் அறிமுகம் செய்து வைத்தார்.

    ஆண்கள் பிரிவில் முதல் ஆட்டத்தில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர். அணியும் விளையாடியது. இதில் அரியானா அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவில் அரியானா போலீஸ் அணியும், மதுரை சி.பி.ஆர் அணியும் விளையாடியது இதில் அரியானா அணி வெற்றிபெற்றது.

    கலந்து கொண்டவர்கள்

    போட்டி தொடக்க விழாவில் ராதாபுரம் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அனிதா பிரின்ஸ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ஆர்.சுபாஷ் தங்கையா கணேசன், ஜி.பி.எம்.குமார், நவ்வலடி சரவணகுமார், அப்புவிளை மகேஷ்வரன், அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இன்று மாலை திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து கபடி வீரர்கள்- வீராங்கனைகளின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் செய்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 42 அணிகள் கலந்து கொண்டார்கள்.
    • 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியம் குன்னம் சந்தோஷ்,கவி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள்டவுன் இணைந்து நடத்திய 5 ஆம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது .

    கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த42 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் பரிசை குன்னம் அணி தட்டி சென்றது. 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.

    போட்டியில் முதல் பரிசு ரூ. 15,000 மற்றும் கேடயம் ஆகியவற்றை டெம்பிள் ரன் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் மலர்க் கண்ணன் , சொர்ண பால், உறுப்பினர்கள் அருணாச்சலம், ராதாகிருஷ்ணன் ,ஹாஜா ஷெரிப், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print