search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
    X

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

    • 99 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
    • முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 99 மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு உள்ளிட்டோரின் பிறந்த நாளன்று, மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 27 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், ரூ.ஒரு லட்சத்து 6 ஆயிரத்துக்கான காசோலைகள், வருவாய்த்துறை சார்பில் 2 பேருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 5 பேருக்கு விதவை ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணை, 4 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் அம்ரித் வழங்கினார். கூட்டத்தில் ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சம்சுதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி பிரிவு) மணிகண்டன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×