search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி உருவம் பொறித்த நாணயம், சிறப்பு தபால் தலை வெளியிட வேண்டும்- மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

    • கவுன்சிலர்கள்,மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.
    • கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் மாநகராட்சி அலுவலக ராஜாஜி மண்ட பத்தில் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு தபால் தலை

    தொடர்ந்து தீர்மான ங்களை வலியுறுத்தி மேயர் சரவணன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் வேலை வாய்ப்பு முகாம்கள் அதிகளவில் நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருவதோடு, முதல் தலை முறை பட்டதாரிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, தமிழக தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா மற்றும் நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினராக மாநகராட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை யொட்டி அவரது உருவம் பொறிக்கப்பட்ட நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலைகளை மத்திய அரசு வெளியிட வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தி.மு.க. கவுன்சிலர் சங்கர் கூறும்போது, எங்களது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு மேலாக சரிவர குடிநீர் வினியோ கிக்கப்படவில்லை. எனவே உடனடியாக சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    ம.தி.மு.க. கவுன்சிலர் சங்கீதா பேசும்போது, 41-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கு முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    பாளை மண்டல தலைவர் பிரான்சிஸ் பேசும்போது, பாதாள சாக்கடை 3-ம் கட்ட பணிகள் எப்போது தொடங்கும்? முறப்பநாடு குடிநீர் திட்டத்தின் மூலம் மாநகர விரிவாக்க பகுதி களுக்கு விரைந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கவுன்சிலர்கள் மற்றும் மண்டல தலைவர்களுக்கு சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என தி.மு.க. கவுன்சிலர் உலகநாதன் பேசினார்.

    கவுன்சிலர் சின்னத்தாய் பேசும்போது, ஒரு சமூகத்தின் மனவலியை மாமன்னன் திரைப்படம் வெளிக்கொண்டு வந்துள்ளது. எங்கள் பகுதியில் அதிகளவு ஓடைகள் உள்ளது. ஆனால் அதனை சீரமைக்காமல் உள்ளது. அண்ணா நகர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. எனவே அங்கு தனியாக நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தூய்மை பணியா ளர்களுக்கு சேர வேண்டிய பணத்தை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    தி.மு.க. கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் கூறும்போது, நீண்ட நாட்களாக பழுதடைந்து காணப்பட்ட சிந்துபூந்துறை- உடையார்பட்டி சாலையை சீரமைத்ததற்கு நன்றி, சிந்துபூந்துறை மின்தகன மேடையில் கூடுதலாக ஒரு அறை அமைக்க வேண்டும், 1 ஆண்டாக பணிக்குழு கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது. அதனை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் சந்திரசேகர் பேசும்போது, மாநகர பகுதியில் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் சாப்பாட்டின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 28-வது வார்டுக்குட்பட்ட பூங்கா பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    திடீர் போராட்டம்

    முன்னதாக, ரூ.32 கோடி மதிப்பீட்டிலான பணிகளுக்கு மேயர் கையெழுத்திடாமல் உள்ளதால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டள்ளதாக கூறி கவுன்சிலர்கள் ரவீந்திரன், பவுல்ராஜ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் கூட்டத்திற்கு செல்லாமல் மாநகராட்சி வளாகத்தில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனே அங்கு சென்ற மேயர் சரவணன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார். இதனால் கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கூட்டத்திற்கு சென்றனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் கருப்பசாமி கோட்டையப்பன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×