என் மலர்
நீங்கள் தேடியது "ORS"
- உத்தரவு அமல்படுத்தப்படாதது தேசிய அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மருந்தகங்கள் மற்றும் பள்ளிகளில் ஒருபோதும் கிடைக்கக்கூடாது.
இந்தியாவில் சர்க்கரை பானங்களை, ORS எனப்படும் oral rehydration solutions என்று ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்று வந்தன.
இந்த பிரச்சனை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த 8 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார்.
இவரது தொடர் முயற்சிகளின் விளைவாக, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாதவை 'ORS' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படக்கூடாது என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அக்டோபர் 14 அன்று உத்தரவிட்டது.
ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மாநில FSSAI களுக்கு உத்தரவு தொடர்பான அறிவிருதலைகள் சென்று சேர்வதில் தாமதம் நிலவுகிறது.
ORS என்று விளம்பரப்படுத்தப்பட்ட போலி கரைசல்கள் இன்னும் சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் தங்களிடம் உள்ள இருப்பை காலி செய்யும் வரை தடையை இடைநிறுத்தி வைக்க இந்நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக JNTL என்ற ஜான்சன் & ஜான்சன் உடைய கிளை நிறுவனம் தங்கள் பொருட்கள் ஸ்டாக் தீரும் வரை விற்பனை செய்துகொள்ள அனுமதி FSSAI இடம் அனுமதி பெற்றதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவர் சிவரஞ்சனி கவலை தெரிவித்துள்ளார். உத்தரவு அமல்படுத்தப்படாதது தேசிய அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைவரும் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எனது உண்மையான மற்றும் மனமார்ந்த வேண்டுகோள். தயவுசெய்து உச்ச நீதிமன்றத்திற்கு எழுதுங்கள். எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க ஒரு வலுவான சட்டம் இயற்றப்படட்டும்.
WHO பரிந்துரைத்த மருந்து வகை ORS ஐ தவிர வேறு எதுவும் மருந்தகங்கள் மற்றும் பள்ளிகளில் ஒருபோதும் கிடைக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
- WHO பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது.
- இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் மறைந்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை பானங்களை, ORS எனப்படும் oral rehydration solutions என்று ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்று வந்தன.
இந்த பிரச்சனை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த 8 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார்.
இவரது தொடர் முயற்சிகளின் விளைவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாதவை 'ORS' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படக்கூடாது என்றும் FSSAI உத்தரவிட்டுள்ளது.
இதை வரவேற்று நாம் ஜெயித்துவிட்டோம் என சிவரஞ்சனி நெகிழ்ச்சியுடன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ORS என்று சந்தைப்படுத்தப்பட்ட பல பானங்களில் WHO பரிந்துரைத்த அளவை விட 10 மடங்கு அதிக சர்க்கரை இருந்தது. இந்த அதிகப்படியான சர்க்கரை, குறிப்பாகக் குழந்தைகளிடையே, வயிற்றுப்போக்கு மற்றும் அதன் சிக்கல்களை மோசமாக்கக்கூடும்.
இதனால் ORS என்று தவறாகக் கூறி விற்கப்பட்ட பாணங்களால் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் இருந்த நிலையில் தற்போது FSSAI உத்தரவு இதை தடுத்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், பெற்றோரோ அல்லது நோயாளியோ 'ORS' என்று லேபிளிடப்பட்ட ஒரு பொருளை வாங்கும்போது, உலகளாவிய சுகாதாரத் தரங்களால் வரையறுக்கப்பட்ட சரியான, உயிர் காக்கும் ஃபார்முலாவை பெறுவார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது
- வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்
இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும் என சுகாதார அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என கூறி ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.






