search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paediatrician"

    • உங்கள் குழந்தைக்கு டயப்பர் மூலம் எரிச்சலோ/ அசௌகரியமோ ஏற்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும்.
    • குழந்தை இருக்கும் அறை வெப்பநிலைக்கு ஏற்ப உடை உடுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    தாய்மை என்பது ஒரு அற்புதமான உணர்வு. ஒரு குழந்தை வளரும் போது, அந்த வளர்ச்சி ஆரோக்கியமாகவும், சிறந்ததாகவும் அமைய பெற்றோருக்கு முயற்சிகளை மேற்கொள்வதில் பெரும் பங்கு உண்டு. அந்த முயற்சியின் போது வீடுகளை தயார்படுத்துவது முதல் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது வரை தங்கள் குழந்தையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், அன்பாகவும் வைத்திருக்க பெற்றோர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள்.

    பல பெற்றோர்கள், குறிப்பாக முதல் முறையாக தாய்மை அடைபவர்களுக்கு இந்த பதிவு வழிகாட்டுதலாக இருக்கும். பெற்றோர் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதில் ஏற்படும் சவால்கள் மற்றும் அதை கையாள பெற்றோருக்கு உதவும் நோக்கில் சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையின் சிறந்த குழந்தை நல மருத்துவர் டாக்டர். அஞ்சனா எஸ்.ஆர். கிருஷ்ணன் கூறியதாவது:

    பிறந்த குழந்தை பராமரிப்புக்கான 7 நிபுணர் குறிப்புகள்:

    குழந்தையை கையில் தூக்கும் போது: பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம், தங்கள் குழந்தையை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதுதான். குழந்தைகள் மொத்த உடல் நீளத்தில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கு தலையுடன் பிறக்கின்றன. இதன் விளைவாக, அவர்களின் ஈர்ப்பு மையம், வயது, உடல் வடிவம் மற்றும் உட்காரும் தோரணைக்கு ஏற்ப மாறுகிறது.

    எனவே, புதிதாகப் பிறந்த குழந்தையைத் தூக்கிச் செல்லும்போது, தலை மற்றும் கழுத்தைத் தாங்கிப்பிடிக்க மறக்காதீர்கள். வேடிக்கைக்காக கூட கை, கால் மற்றும் இதர உடல் உறுப்புகளை அசைப்பது அல்லது ஜிக்கிங் செய்யாதீர்கள். இது உங்கள் முதல் குழந்தையாக இருந்தாலும் அல்லது ஐந்தாவது குழந்தையாக இருந்தாலும் சரி, பிரசவத்திற்குப் பிறகு புதிதாகப் பிறந்த குழந்தையை கையாளும் போது பார்த்து கையாள வேண்டும்.

    பிணைப்பு நேரம்: உங்கள் குழந்தையுடன் ஒன்றிணைந்து இருப்பது மகிழ்ச்சியானது. பெரும்பாலான பெற்றோருக்கு இது இயற்கையாகவே வந்தாலும், உங்கள் குழந்தையை கட்டிப்பிடிப்பது, மெதுவாகப் பேசுவது அல்லது உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்வது போன்ற எளிய செயல்களைச் செய்வது, பிணைப்புக்கான சில அற்புதமான வழிகள். இது உங்கள் குழந்தை அழுதாலோ அல்லது அசௌகரியமாக இருக்கும் போது அவைகளைத் தீர்த்து வைக்க இவை உதவும்.

    சௌகரியமான உடை: உங்கள் குழந்தைக்கு மென்மையான துணிகளில் வசதியாக இருக்கும் படி உடுத்துங்கள். உங்கள் குழந்தை இருக்கும் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப உடல் வெப்பநிலையை கொடுக்க முடியாது. எனவே குழந்தை இருக்கும் அறை வெப்பநிலைக்கு ஏற்ப உடை உடுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    டயப்பரிங் சரியாக செய்யுங்கள்: டயப்பரிங் என்பது கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம். உங்கள் செலவினங்களை பொறுத்து புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் தேர்வு செய்யலாம். எப்படியிருந்தாலும், புதிதாகப் பிறந்த குழந்தைகள் பெரிய குழந்தைகளை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் மற்றும் மலம் கழிக்கும் என்பதால், நீங்கள் அடிக்கடி டயப்பர்களை மாற்றுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையை அழுக்கடைந்த டயப்பரை நீண்ட நேரம் அணிய அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அது இதர பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். உங்கள் குழந்தைக்கு டயபர் மூலம் எரிச்சலோ/ அசௌகரியமோ ஏற்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தை மருத்துவரை அணுகவும். புதிதாகப் பிறந்த குழந்தை தினமும் குளிக்க தேவையில்லை. உங்கள் குழந்தை நடமாடும் வரை, வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை குளிக்க வைத்தால் போதும்.

    தொப்புள் கொடி ஸ்டம்ப் பராமரிப்பு: உங்கள் குழந்தைக்கு தொப்புள் கொடி ஸ்டம்ப் இருக்கும், அது 10 நாட்கள் முதல் மூன்று வாரங்களில் காய்ந்து விழும். இதற்கிடையில், உங்கள் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியின் ஸ்டம்ப் எல்லா நேரங்களிலும் சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    உங்கள் குழந்தையை குளிப்பாட்டிய பின், ஸ்டம்பைச் சுற்றியுள்ள பகுதி மென்மையான பஞ்சு போன்ற பொருட்களால் சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும். உங்கள் குழந்தையின் டயப்பரை எப்போதும் தொப்புளுக்குக் கீழே கட்டி, அந்தப் பகுதி வறண்டு இருப்பதை உறுதிசெய்யவும். எந்த நேரத்திலும் தொப்புள் கொடியை சுற்றி சீழ் அல்லது இரத்தம் காணப்பட்டால், உடனடியாக உங்கள் குழந்தையை சென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள், ஏனெனில் அது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

    ஆரோக்கியமான தூக்கம்: புதிதாகப் பிறந்த குழந்தைகள் 16 மணிநேரம் அல்லது அதற்கு மேல் தூங்குவார்கள் , ஒவ்வொரு தூக்க சுழற்சியும் இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை நீடிக்கும். உங்கள் குழந்தையை தூங்க வைக்கும் போது பின்புறமாக திருப்பி படுக்க வையுங்கள். நீங்கள் தொட்டிலைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குழந்தையை உள்ளே வைக்கும் போது நனையாத உறுதியான மெத்தையைத் தேர்ந்தெடுக்கவும். குழந்தை தூங்கும் தொட்டிலின் உள்ளே தளர்வான போர்வைகள், தலையணைகள், தொட்டில் பம்பர்கள் அல்லது மென்மையான பொம்மைகளை வைக்காமல் இருப்பது நல்லது.

    காய்ச்சல் மேலாண்மை: புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குகாய்ச்சல் இருந்தால் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். வயதான குழந்தைகளைப் போலல்லாமல், இரண்டு மாதங்களுக்கும் குறைவான புதிதாகப் பிறந்த குழந்தைகளில் 100.4 டிகிரி அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல் இருந்தால், உடனடியாக ஒரு குழந்தை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும்.

    குழந்தை வளர்ப்பு என்பது ஒரு ஆரோக்கியமான பொறுப்பு. அதில் சறுக்கல்கள் ஏற்பட்டால் கவலைப்படாதீர்கள். நீங்கள் எப்போதும் பார்வதி மருத்துவமனையில் உள்ள குழந்தை மருத்துவரிடம் பேசலாம் அல்லது எந்தச் சூழ்நிலையிலும் சிறந்த நடவடிக்கையைக் கண்டறிய மருத்துவரை தொடர்புகொள்ளலாம். உங்கள் குழந்தையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள்.

    அடுத்தது என்ன?

    புதிதாகப் பிறந்த குழந்தையைக் கையாள்வது சில நேரங்களில் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.உங்கள் பெற்றோருக்குரிய திறமைகளை நீங்கள் மெருகூட்டும்போது, உங்கள் குழந்தையும் வளரும், நீங்கள் நினைத்ததை விட வேகமாக குழந்தைப் பருவத்திற்கு நகரும்!

    பார்வதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை - சென்னையில் அவசர மருத்துவ தேவைகளுக்கு +91 98412 98412 அல்லது 044 2238 2248 / +91 98848 99091 என்ற எண்ணில் குழந்தை நல மருத்துவரிடம் பேச முன்பதிவு செய்யலாம்.

    - டாக்டர். அஞ்சனா எஸ்.ஆர். கிருஷ்ணன், பார்வதி மருத்துவமனை 

    ×