என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FSSAI"

    • உத்தரவு அமல்படுத்தப்படாதது தேசிய அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
    • மருந்தகங்கள் மற்றும் பள்ளிகளில் ஒருபோதும் கிடைக்கக்கூடாது.

    இந்தியாவில் சர்க்கரை பானங்களை, ORS எனப்படும் oral rehydration solutions என்று ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் விற்று வந்தன.

    இந்த பிரச்சனை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான சிவரஞ்சனி சந்தோஷ் கடந்த 8 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார்.

    இவரது தொடர் முயற்சிகளின் விளைவாக, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து ஓஆர்எஸும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அப்படி அதைப் பூர்த்தி செய்யாதவை 'ORS' என்று விளம்பரப்படுத்தி விற்கப்படக்கூடாது என்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அக்டோபர் 14 அன்று உத்தரவிட்டது.

    ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்கள் கடந்தும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. மாநில FSSAI களுக்கு  உத்தரவு தொடர்பான அறிவிருதலைகள் சென்று சேர்வதில் தாமதம் நிலவுகிறது.  

    ORS என்று விளம்பரப்படுத்தப்பட்ட போலி கரைசல்கள் இன்னும் சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் தங்களிடம் உள்ள இருப்பை காலி செய்யும் வரை தடையை இடைநிறுத்தி வைக்க இந்நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக JNTL என்ற ஜான்சன் & ஜான்சன் உடைய கிளை நிறுவனம் தங்கள் பொருட்கள் ஸ்டாக் தீரும் வரை விற்பனை செய்துகொள்ள அனுமதி FSSAI இடம் அனுமதி பெற்றதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவர் சிவரஞ்சனி கவலை தெரிவித்துள்ளார். உத்தரவு அமல்படுத்தப்படாதது தேசிய அவமானம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் அனைவரும் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் அனைவருக்கும் எனது உண்மையான மற்றும் மனமார்ந்த வேண்டுகோள். தயவுசெய்து உச்ச நீதிமன்றத்திற்கு எழுதுங்கள். எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க ஒரு வலுவான சட்டம் இயற்றப்படட்டும்.

    WHO பரிந்துரைத்த மருந்து வகை ORS ஐ தவிர வேறு எதுவும் மருந்தகங்கள் மற்றும் பள்ளிகளில் ஒருபோதும் கிடைக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.  

    • இந்திய உணவு சட்டங்களில் ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை
    • இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்களை தான் குறிக்கிறது

    இந்தியாவில் உள்ள அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும், போர்ன்விட்டா உட்பட அனைத்து பானங்களையும் "ஹெல்த் டிரிங்க்" (Health Drink) என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டுமென ஏப்ரல் 10 ஆம் தேதி மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (NCPCR) நடத்திய விசாரணையின் அடிப்படையில், போர்ன்விட்டா போன்ற பானங்கள் 'ஹெல்த் டிரிங்க் அல்ல" என்று கண்டறியப்பட்டது என்று வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) அனைத்து ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கும் பால், தானியம் மற்றும் மால்ட் சார்ந்த பானங்களை 'ஹெல்த் டிரிங்க்' (Health Drink) அல்லது 'எனர்ஜி டிரிங்க்' (Energy Drink) என லேபிள் ஒட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

    ஏனென்றால், இந்திய உணவு சட்டங்களில் ஹெல்த் டிரிங்க்' என்ற வார்த்தை வரையறுக்கப்படவில்லை. மேலும் இந்திய உணவு சட்டங்களின் கீழ், 'எனர்ஜி டிரிங்க்' என்பது குளிர்பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் அல்லாத, சுவை கூட்டப்பட்ட தண்ணீர் சார்ந்த பானங்களைக் குறிக்கிறது.

    தவறான சொற்களைப் பயன்படுத்துவது நுகர்வோரை தவறாக வழிநடத்தக்கூடும் என்று FSSAI ஈகாமர்ஸ் தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எனவே, அனைத்து ஈகாமர்ஸ் உணவு வணிக தொழில்முனைவோர்கள் ஹெல்த் டிரிங்க்ஸ் / எனெர்ஜி ட்ரிங்க்ஸ் (Health Drinks/Energy Drinks) பிரிவுகளில் இருந்து இது போன்ற பானங்களை நீக்கி இதைச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தியது.

    கடந்த வருடம், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயென்சரான ரேவந்த் ஹிமத்சிங்கா, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானமான போர்ன்விட்டா (Bournvita) குறித்து விமர்சன வீடியோ ஒன்றைப் பதிவிட்டார்.

    12 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த அந்த வீடியோவில், போர்ன்விட்டாவில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இந்த பானத்தைத் தருவதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இது தொடர்பாக FSSAI சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் அளிக்கப்பட்டது.

    இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான "FSSAI" பால் மற்றும் பால் பொருட்களில் ஏ1 மற்றும் ஏ2 வகைகளாக பிரித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்று வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற விளம்பரங்கள் தவறான வழிநடத்துவதாக தெரிகிறது என FSSAI தெரிவித்தது.

    இத்தகைய கருத்தாக்கங்கள் FSSAI-இன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2006-க்கு முரணாக இருக்கிறது. இது தொடர்பாக FSSAI மேற்கொண்ட ஆய்வில் ஏ1 மற்றும் ஏ2 வேறுபாடு பாலில் உள்ள பீட்டா-கேசீன் புரதத்தின் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    எனினும், தற்போதைய FSSAI விதிமுறைகள் இந்த வேறுபாட்டை அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக இத்தகைய வேறுபாடுகளை விளம்பரப்படுத்துவதை உணவுத்துறை வியாபாரம் செய்வோர் கைவிட வேண்டும் என்று FSSAI உத்தரவிட்டுள்ளது.

    இதே போன்று ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் பால் வகைகளை ஏ1, ஏ2 என குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று FSSAI வலியுறுத்தி உள்ளது. இது குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கு நிறுவனங்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    ×