search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president donald trump"

    வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    டோக்கியோ:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார்.  அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார்.

    இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.  இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.  
    ஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை.  கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான சந்திப்பில், வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    பியாங்யங் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா, வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.



    ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதற்கு, பதிலளித்த கிம் ஜாங் அன், அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் என கூறியதாக தெரிகிறது. அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருக்கு எழுதிய கடிதத்தில், மீண்டும் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக  தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கிம் ஜாங் அன் தனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.  

    மேலும், டிரம்பின் நேர்மறையான அணுகுமுறை புதிய வழிமுறையை காட்டுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அவரது செயல்பாடு உள்ளது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    இந்தியா சார்பில் ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட உள்ள நூலகத்தை யார் வந்து பயன்படுத்தப் போகிறார்கள் என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். #Trump #AfghanistanLibrary #Modi
    வாஷிங்டன்:

    போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் புனரமைப்பு பணிகளை இந்தியா செய்து வருகிறது.  அங்கு வாழ்வோரின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்ற நோக்கத்திற்காக அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவது, ஆப்கன் அரசுடன் இணைந்து பணியாற்றுவது உள்ளிட்டவற்றை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானை புதுப்பிக்க மத்திய அரசு இதுவரை சுமார் ரூ. 21 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.

    இதற்கிடையே, அமெரிக்க சென்ற பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பிரமாண்ட நூலகம் அமைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் அமைக்கவுள்ள நூலகத்தால் என்ன பயன் என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆப்கானிஸ்தானில் நூலகம் அமைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருந்தார். இதனால் என்ன பலன் ஏற்படும் என்று உங்களில் யாருக்காவது தெரியுமா? அப்படியே கட்டினாலும் ஆப்கானிஸ்தானில் யார் வந்து அதனை பயன்படுத்தப் போகிறார்கள்? என குறிப்பிட்டுள்ளார். #Trump #AfghanistanLibrary #Modi
    அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn
    வாஷிங்டன்:

    வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
     
    இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.



    அப்போது, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழித்து விடுவோம். இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்திருந்தது.

    இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #DonaldTrump #KimJongUn
    அமெரிக்காவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஜனாதிபதி டிரம்ப் மோதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #President #DonaldTrump #ChiefJustice #JohnRobert
    வாஷிங்டன்:

    மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் சாடினார். படையெடுப்பு என வர்ணித்தார்.

    அத்துடன், அமெரிக்காவின் தென்பகுதியின் வழியாக நுழைகிற அகதிகள் யாரும் அமெரிக்காவினுள் தஞ்சம் கேட்க முடியாது என நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

    இதை சட்ட விரோதம் என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன. அத்துடன் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை நீதிபதி ஜோன் டைகர் விசாரித்து, டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.



    இந்த உத்தரவு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

    இந்த உத்தரவால் டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியின் உத்தரவு, அவமானகரமானது என விமர்சித்தார்.

    அதுமட்டுமின்றி, “ இது ஒபாமா நீதிபதி வழங்கிய உத்தரவு. இது இனியொரு முறை நடக்காது. இந்த கோர்ட்டை நெருக்கமான கோர்ட்டு என்று கருதி அத்தனை பேரும் ஓடிச்சென்று வழக்குகள் போட விடக்கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் வெற்றி பெறுவோம்” என கூறினார்.

    இந்த நீதிபதி, ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரை ஜனாதிபதி டிரம்ப், ‘ஒபாமா நீதிபதி’ என முத்திரை குத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இது தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கருத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் அறிய விரும்பியது.

    “ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜனாதிபதிகளால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகள், தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதிக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் புகார் கூறுகிறாரே?” என கேள்வி எழுப்பியது.

    அதற்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், “ ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது கிளிண்டன் நீதிபதிகள் என நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் பெற்றிருப்பது, அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தனிச்சிறப்பான நீதிபதிகளைத்தான். அவர்கள் தங்கள் முன்னிலையில் ஆஜர் ஆகிறவர்களுக்கு சமநீதி வழங்குவதற்கு தங்களால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.” என பதில் அளித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, “சுதந்திரமான நீதித்துறைக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் இந்த கருத்து, டிரம்புக்கு பதிலடியாக அமைந்தது.

    ஜனாதிபதி டிரம்ப், புளோரிடாவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அவர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் கருத்தை அறிந்து அவருடன் நேருக்கு நேர் மோதுகிற வகையில், அவர் கருத்தை மறுத்து டுவிட்டரில் பதில் வெளியிட்டார்.

    அதில் அவர், “மன்னிக்கவும், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். உண்மையிலேயே நீங்கள் ஒபாமா நீதிபதிகளை கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் பார்வை, தங்கள் பாதுகாப்புக்காக குற்றம்சாட்டுகிற மக்களின் பார்வையில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், “ சட்ட விரோதமாக நுழைகிற அகதிகள் விவகாரம் உள்பட எனது சர்ச்சைக்குரிய, முன்னுரிமை வழக்குகள் பலவற்றில், கோர்ட்டு உத்தரவுகள் தலைகீழாகி விட்டன. அப்படி எத்தனை ஆகி இருக்கின்றன என்பதை எண்ணிப்பாருங்கள். அவை அதிர்ச்சி அளிக்கின்றன” எனவும் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    அமெரிக்காவில் ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இப்படி நேருக்கு நேர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருப்பது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    டிரம்ப் மோதியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்சால் 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #President #DonaldTrump #ChiefJustice #JohnRobert
    வடகொரிய தலைவர் கிம்முடன் காதலில் விழுந்து விட்டதாக பொதுக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு கூறியிருப்பது ருசிகரமாக அமைந்தது. #DonaldTrump #KimJohgUn #NorthKorea
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக இருந்து, இப்போது நண்பர் களாக மாறி இருக்கிறார்கள்.

    இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல்முதலாக உச்சிமாநாட்டில் சந்தித்து பேசினார்கள். உலகையே வியக்க வைத்த இந்த பேச்சு வார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக டிரம்புடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார்.



    அது மட்டுமின்றி, மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப்பேச விரும்புவதாக டிரம்புக்கு அவர் சமீபத்தில் கடிதம் எழுதினார். அதன்பேரில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்பும் அறிவித்தார்.

    இந்த நிலையில் வெர்ஜீனியா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி டிரம்ப் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் வடகொரிய தலைவர் கிம்முடன் தான் காதலில் விழுந்து விட்டதாக பேசியது ருசிகரமாக அமைந்தது.

    இதுபற்றி அவர் இயல்பாக குறிப்பிடுகையில், “ நாங்கள் காதலில் விழுந்து விட்டோம். சரியா? அவர் எனக்கு அழகான கடிதங்கள் எழுதி இருக்கிறார். அவை அற்புதமான கடிதங்கள். நாங்கள் காதலில் விழுந்து விட்டோம்” என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார்.  #DonaldTrump #KimJohgUn #NorthKorea 
    வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். #DonaldTrump #DonMcGahn
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடையவும் ரஷியா நேரடியாக தலையிட்டது என்ற புகார் எழுந்தது.

    இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவின் சிறப்பு விசாரணை நடைபெற்று வருகிறது. நேர்மையான அதிகாரி என்ற பெயர் பெற்றவர். 

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அரசின் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேறவுள்ளார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணிபுரிந்து வரும் டான் மெக்கான் விரைவில் வெளியேற உள்ளார். நான் அவருடன் நீண்ட நாள்கள் பணிபுரிந்து வந்துள்ளேன். அவரது பணி செய்யும் திறமை மிகவும் பாராட்டுக்கு உரியது என பதிவிட்டுள்ளார். #DonaldTrump #DonMcGahn
    அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். #MikePompeo
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது.

    ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது என சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
      
    இந்நிலையில், அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்புடனான சந்திப்பில் கிம் ஜாங் அன் தெரிவித்ததை போல் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும். அப்படி அழிக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, மைக் பாம்பியோ வடகொரியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MikePompeo
    புதினுடனான சந்திப்பின் போது அமெரிக்க தேர்தலில் தலையீடு குறித்து பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவிதுள்ளார். #DonaldTrump #RussianElection
    நியூஜெர்சி:

    அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வரும் டிரம்ப், விசாரணை கமிஷனையும் குறைகூறி வருகிறார். இந்த புகாரை ரஷியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை வருகிற 16-ந்தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து பேசுவீர்களா? என டிரம்பிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘நான் அவரிடம் (புதின்) அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன். தேர்தல்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். அமெரிக்க தேர்தலை யாரும் சீர்குலைப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.

    உக்ரைனை இணைத்துக்கொண்டது, சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருவது போன்ற ரஷியாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், புதினுடனான சந்திப்பில் இந்த விஷயங்கள் குறித்தும் பேச இருப்பதாக டிரம்ப் கூறினார்.

    இதைப்போல ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிவிதிப்பது குறித்து 3 அல்லது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று கூறிய டிரம்ப், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். #DonaldTrump #RussianElection  #tamilnews 
    ×