என் மலர்
நீங்கள் தேடியது "President Donald Trump"
- தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருகிறது.
- ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் உரையில் குறுக்கிட்டனர்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தாவிட்டால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
நேற்று 100 நிமிடங்களுக்கு மேல் ஆற்றிய யூனியன் உரையில், மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் போரை அவர் நிறுத்தியாக தெரிவித்தார்.
"நான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில், எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்... இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மோதலும் அடங்கும், அது ஒருவேளை அணு ஆயுதப் போராகக்கூட மாறியிருக்கக்கூடும். எனது தலையீடு மட்டும் இல்லையென்றால், 3.5 கோடி (35 மில்லியன்) மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.' என தெரிவித்தார்.
100வது முறை...
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தியா-பாகிஸ்தான் போரை தான்தான் முடிவுக்கு கொண்டுவந்ததாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். தற்போது வரை சுமார் 100 முறை இதே கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு இந்தியா தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, கம்போடியா - தாய்லாந்து, கொசோவோ -செர்பியா, இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எத்தியோப்பியா, ஆர்மீனியா - அஜர்பைஜான், காங்கோ - ருவாண்டா, மற்றும் காசா போர் ஆகியவற்றையும் நிறுத்தியதாக கூறினார். தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில், சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்பின் உரையில் குறுக்கிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர், 'இது வேடிக்கையாக இல்லையா? இவர்கள் நோயுற்ற (மனநிலை பாதிக்கப்பட்ட) மனிதர்கள்' என்று கூறினார்
- இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு
- அமெரிக்கா 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.
பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. மேலும், இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு என்று அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். அமெரிக்கா பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை, இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழக்கறிஞர்கள் அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் காணவில்லை என்று வாஷிங்டன் (அமெரிக்கா) கூறியுள்ளது.


வடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.
இதற்கிடையே, டிரம்ப் - கிம் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி நடைபெற்றது. அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர்.

அப்போது, தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழித்து விடுவோம். இனி அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள மாட்டோம் என்று வடகொரியா அறிவித்தது. அதேபோல், அமெரிக்காவும் வடகொரியா மீது விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குவதாக அறிவித்திருந்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் சந்திப்பு நடைபெறும் என நம்புவதாக வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். #DonaldTrump #KimJongUn
மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள், அமெரிக்காவினுள் குடியேறும் நோக்கத்தில் அமெரிக்க-மெக்சிகோ எல்லை நோக்கி வந்தனர். இதை ஜனாதிபதி டிரம்ப் சாடினார். படையெடுப்பு என வர்ணித்தார்.
அத்துடன், அமெரிக்காவின் தென்பகுதியின் வழியாக நுழைகிற அகதிகள் யாரும் அமெரிக்காவினுள் தஞ்சம் கேட்க முடியாது என நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
இதை சட்ட விரோதம் என மனித உரிமை அமைப்புகள் விமர்சித்தன. அத்துடன் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கை நீதிபதி ஜோன் டைகர் விசாரித்து, டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

இந்த உத்தரவு, டிரம்ப் நிர்வாகத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த உத்தரவால் டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். நீதிபதியின் உத்தரவு, அவமானகரமானது என விமர்சித்தார்.
அதுமட்டுமின்றி, “ இது ஒபாமா நீதிபதி வழங்கிய உத்தரவு. இது இனியொரு முறை நடக்காது. இந்த கோர்ட்டை நெருக்கமான கோர்ட்டு என்று கருதி அத்தனை பேரும் ஓடிச்சென்று வழக்குகள் போட விடக்கூடாது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் நாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் வெற்றி பெறுவோம்” என கூறினார்.
இந்த நீதிபதி, ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது நியமிக்கப்பட்டவர் என்பதால் அவரை ஜனாதிபதி டிரம்ப், ‘ஒபாமா நீதிபதி’ என முத்திரை குத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் கருத்தை பிரபல பத்திரிகை நிறுவனம் அறிய விரும்பியது.
“ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜனாதிபதிகளால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகள், தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதிக்கு எதிராக செயல்படுவதாக டிரம்ப் புகார் கூறுகிறாரே?” என கேள்வி எழுப்பியது.
அதற்கு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், “ ஒபாமா நீதிபதிகள் அல்லது டிரம்ப் நீதிபதிகள், புஷ் நீதிபதிகள் அல்லது கிளிண்டன் நீதிபதிகள் என நாங்கள் கொண்டிருக்கவில்லை. நாங்கள் பெற்றிருப்பது, அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தனிச்சிறப்பான நீதிபதிகளைத்தான். அவர்கள் தங்கள் முன்னிலையில் ஆஜர் ஆகிறவர்களுக்கு சமநீதி வழங்குவதற்கு தங்களால் முடிந்தவரையில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.” என பதில் அளித்தார்.
மேலும் அவர் கூறும்போது, “சுதந்திரமான நீதித்துறைக்காக நாம் நன்றி சொல்ல வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் இந்த கருத்து, டிரம்புக்கு பதிலடியாக அமைந்தது.
ஜனாதிபதி டிரம்ப், புளோரிடாவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ளார். அவர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்சின் கருத்தை அறிந்து அவருடன் நேருக்கு நேர் மோதுகிற வகையில், அவர் கருத்தை மறுத்து டுவிட்டரில் பதில் வெளியிட்டார்.
அதில் அவர், “மன்னிக்கவும், தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ். உண்மையிலேயே நீங்கள் ஒபாமா நீதிபதிகளை கொண்டிருக்கிறீர்கள். அவர்களின் பார்வை, தங்கள் பாதுகாப்புக்காக குற்றம்சாட்டுகிற மக்களின் பார்வையில் இருந்து மாறுபட்டதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ சட்ட விரோதமாக நுழைகிற அகதிகள் விவகாரம் உள்பட எனது சர்ச்சைக்குரிய, முன்னுரிமை வழக்குகள் பலவற்றில், கோர்ட்டு உத்தரவுகள் தலைகீழாகி விட்டன. அப்படி எத்தனை ஆகி இருக்கின்றன என்பதை எண்ணிப்பாருங்கள். அவை அதிர்ச்சி அளிக்கின்றன” எனவும் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அமெரிக்காவில் ஜனாதிபதியும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இப்படி நேருக்கு நேர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருப்பது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
டிரம்ப் மோதியுள்ள சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்சால் 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. #President #DonaldTrump #ChiefJustice #JohnRobert
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் எதிரிகளாக இருந்து, இப்போது நண்பர் களாக மாறி இருக்கிறார்கள்.
இருவரும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல்முதலாக உச்சிமாநாட்டில் சந்தித்து பேசினார்கள். உலகையே வியக்க வைத்த இந்த பேச்சு வார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் இல்லாத பிரதேசமாக மாற்றுவதற்கு கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக டிரம்புடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார்.

அது மட்டுமின்றி, மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப்பேச விரும்புவதாக டிரம்புக்கு அவர் சமீபத்தில் கடிதம் எழுதினார். அதன்பேரில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்பும் அறிவித்தார்.
இந்த நிலையில் வெர்ஜீனியா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி டிரம்ப் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் வடகொரிய தலைவர் கிம்முடன் தான் காதலில் விழுந்து விட்டதாக பேசியது ருசிகரமாக அமைந்தது.
இதுபற்றி அவர் இயல்பாக குறிப்பிடுகையில், “ நாங்கள் காதலில் விழுந்து விட்டோம். சரியா? அவர் எனக்கு அழகான கடிதங்கள் எழுதி இருக்கிறார். அவை அற்புதமான கடிதங்கள். நாங்கள் காதலில் விழுந்து விட்டோம்” என்று கூறி கலகலப்பை ஏற்படுத்தினார். #DonaldTrump #KimJohgUn #NorthKorea
அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து ராபர்ட் முல்லர் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குற்றச்சாட்டை தொடக்கத்தில் இருந்தே மறுத்து வரும் டிரம்ப், விசாரணை கமிஷனையும் குறைகூறி வருகிறார். இந்த புகாரை ரஷியாவும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை வருகிற 16-ந்தேதி பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் டிரம்ப் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்க தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து பேசுவீர்களா? என டிரம்பிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், ‘நான் அவரிடம் (புதின்) அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசுவேன். தேர்தல்கள் குறித்தும் நாங்கள் பேசுவோம். அமெரிக்க தேர்தலை யாரும் சீர்குலைப்பதை நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தார்.
உக்ரைனை இணைத்துக்கொண்டது, சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபட்டு வருவது போன்ற ரஷியாவின் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், புதினுடனான சந்திப்பில் இந்த விஷயங்கள் குறித்தும் பேச இருப்பதாக டிரம்ப் கூறினார்.
இதைப்போல ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரிவிதிப்பது குறித்து 3 அல்லது 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று கூறிய டிரம்ப், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்தார். #DonaldTrump #RussianElection #tamilnews






