என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரம்ப் கடிதம் - இரண்டாவது சந்திப்புக்கு தயாராகும் கிம் ஜாங் அன்
Byமாலை மலர்24 Jan 2019 1:56 PM GMT (Updated: 24 Jan 2019 1:56 PM GMT)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
பியாங்யங் :
உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது.
அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா, வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதற்கு, பதிலளித்த கிம் ஜாங் அன், அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் என கூறியதாக தெரிகிறது. அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருக்கு எழுதிய கடிதத்தில், மீண்டும் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கிம் ஜாங் அன் தனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
மேலும், டிரம்பின் நேர்மறையான அணுகுமுறை புதிய வழிமுறையை காட்டுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அவரது செயல்பாடு உள்ளது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X