search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president kim jong un"

    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் 25ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் 25ம் தேதி ரஷியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளும்படி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    பியாங்யங் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. தென்கொரியாவின் முயற்சியினால் அமெரிக்கா, வடகொரியா தலைவர்களின் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் இரு தலைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அணு ஆயுதங்களை முற்றிலுமாக அழித்து விடுவதாக அறிவித்த கிம் ஜாங் அன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.



    ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியதற்கு, பதிலளித்த கிம் ஜாங் அன், அமெரிக்கா ஜனாதிபதி மீது தான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரது ஆட்சிக் காலத்துக்குள் அணு ஆயுத ஒழிப்பு முழுமை பெறும் என கூறியதாக தெரிகிறது. அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபருக்கு எழுதிய கடிதத்தில், மீண்டும் ஒரு சந்திப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக  தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுதிய கடிதத்தை தொடர்ந்து, இரண்டாவது சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும்படி கிம் ஜாங் அன் தனது அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.  

    மேலும், டிரம்பின் நேர்மறையான அணுகுமுறை புதிய வழிமுறையை காட்டுகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அவரது செயல்பாடு உள்ளது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #DonaldTrump #KimJongUn #SecondSummit
    அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ, வரும் ஞாயிறு அன்று வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். #MikePompeo #KimJongUn
    வாஷிங்டன் :

    உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்ததால் அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளாகி பொருளாதார தடைகளை சந்தித்தது. 
     
    இதையடுத்து, தென்கொரியா எடுத்த முயற்சியின் பலனாகவே அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். 

    அப்போது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற கிம் ஜாங் அன் உறுதி அளித்து, டிரம்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்பின், வடகொரியா அணுகுண்டுகளையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையோ சோதித்து பார்க்கவில்லை. ஆனாலும், அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.



    சமீபத்தில் 3 நாள் பயணமாக வடகொரியா சென்ற தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த பயணத்தின் போது டொனால்டு டிரம்ப்புக்கு, கிம் ஜாங் அன் எழுதிய ரகசிய கடிதம் மூன் ஜே இன் வாயிலாக வெள்ளை மாளிகைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. அதில், கிம் ஜான் அன் டிரம்ப்பை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டது. 

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர்ர் மைக் பாம்பியோ வரும் ஞாயிற்றுக்கிழ்மை அன்று வட கொரியா செல்கிறார். அங்கு அவர் அதிபர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. #MikePompeo #KimJongUn
    அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார். #MikePompeo
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரது சந்திப்பு கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    அப்போது, அணு ஆயுத சோதனை மையங்கள் விரைவில் அழிக்கப்படும் என கிம் ஜாங் அன் டிரம்பிடம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, வடகொரியா அணு ஆயுத சோதனை மையங்களை அழித்து வந்தது.

    ஆனாலும், வடகொரியா அரசு தற்போதும் அணு ஆயுதங்களை சோதனைக்கு உட்படுத்தி வருகிறது என சமீபத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
      
    இந்நிலையில், அணு ஆயுதங்களை அழித்தால் மட்டுமே வடகொரியாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் என அந்நாட்டு வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், டிரம்புடனான சந்திப்பில் கிம் ஜாங் அன் தெரிவித்ததை போல் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட வேண்டும். அப்படி அழிக்கப்பட்டால் மட்டுமே அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு தயாராகும் என தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, மைக் பாம்பியோ வடகொரியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MikePompeo
    அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    பியாங்யாங்:

    பரம விரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படவில்லை.



    இதற்கிடையே, வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சந்திப்பின் மூலம் இரு நாடுகளுக்கு நல்ல எதிர்காலம் உருவாகும் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். #KimJongUn #Trump #Summit
    வாஷிங்டன்: 

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். மேலும் பகையாளி நாடாக கருதிய தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னையும் சமீபத்தில் சந்தித்து பேசினார்.

    இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாக கிம் ஜாங் அன் கூறினார். இதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் ஜூன் மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    ஆனால் இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது கூறப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று மட்டும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் உடனான சந்திப்புக்கான நேரம் மற்றும் இடம் குறித்து மூன்று நாளில் அறிவிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிம் உடனான சந்திப்புகான நேரம் மற்றும் இடம் முடிவு செய்யப்பட்டு வருகிறது. அதுகுறித்த அறிவிப்பை இன்னும் 3 நாளில் வெளியிடுவேன் என தெரிவித்தார். #KimJongUn #Trump #Summit
    ×