search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president vladimir putin"

    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் 25ம் தேதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து பேசி தீர்வுகாண 3-வது சந்திப்புக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் 25ம் தேதி ரஷியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    மாஸ்கோ:

    அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
     
    கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி, அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.

    டிரம்ப்-கிம் ஜாங் அன்னின் 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசி தீர்வுகாண 3-வது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டு தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், வரலாற்றில் முதல்முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் ரஷியாவில் இம்மாத இறுதியில் சந்தித்து பேச இருப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. #NorthKorea #Russia #VladimirPutin #KimJongUn
    வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #VladimirPutin #PMModi
    புதுடெல்லி:

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் ந்கரில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

    மேலும், இந்தியாவில் 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராக வேண்டும் என மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். #PMModi #ParliamentaryElection #VladimirPutin
    பஞ்சாப் ரெயில் விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். #AmritsarTrainAccident
    மாஸ்கோ:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே சவுர பஜார் பகுதியில் நேற்று இரவு தசரா விழா கோலகமால கொண்டாடப்பட்டது. அப்போது ராவணனின் கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியின் போது, எதிர்ப்பாராதவிதமாக ஏற்பட்ட ரெயில் விபத்தில் 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்த விபத்துக்கு  பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பஞ்சாப் மாநில முதல்மந்திரி அம்ரிந்தர் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் 61 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறிப்பிட்டுள்ளார். #AmritsarTrainAccident
    ரஷியா நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #VladimirPutin
    புதுடெல்லி:

    ரஷியா நாட்டின் அதிபராக பதவி வகித்து வருபவர் விளாடிமிர் புதின். இவர் அரசுமுறை பயணமாக இன்று இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார்.

    தலைநகர் புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் இன்று இந்தியா வருகிறார். அவரது வருகையின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

    இந்தியாவுக்கு வருகை தரும் புதின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன.

    இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VladimirPutin
    ×